சனி, 20 ஜூலை, 2019

பொந்த புளி

பொந்த புளி



2014 இராமேசுவரம் காசி புனித பாதயாத்திரை
யாத்திரையின் முதல்நாள்.

இராமேச்சுரம் பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவில் சாலையோரம் உள்ள சுமார் 6அடி விட்டமுடைய  "பொந்த புளி" மரம் இருப்பதைப் கண்டேன்.

இந்த மரம் பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது.  அதன் அடிப்பகுதி இளவம்பஞ்சு மரம்போன்று இருந்து.  புளியமரம் போன்று மரப்பட்டைகள் இல்லை.  மேலும் இலையும் புளியஇலை போன்று இல்லை. பெயரில்தான் ‘புளி‘ உள்ளது. 
மரத்தின் விதைகள் எதையும் என்னால் காண இயலவில்லை.  மரத்தைப்பார்த்தால் புளியமரம் போன்று இல்லை.  மிகவும் பருத்து, வினோதமான ஒரு மரமாக இருந்தது.   ஆனாலும் மரத்தில் எழுதப்பட்டுள்ள “பொந்த புளி மரம்“ என்ற பெயரைக் கொண்டே இது ஒருவகைப் புளிய மரமாக இருக்க வேண்டும் என்று கருதவேண்டியுள்ளது. 

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்