வியாழன், 29 ஆகஸ்ட், 2019

ஸ்ரீராமர் நடந்து சென்ற பாதை

ஸ்ரீராமர் நடந்து சென்ற பாதை. அலகாபாத் ஆசிரமத்தில் உள்ளபடி...






காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Kalairajan Krishnan
28 ஆகஸ்ட், 2015 · 

புதன், 28 ஆகஸ்ட், 2019

காசிராசாவின் சின்னம் மீன்சின்னம்




காசிராசா அரண்மனை கோட்டை உச்சியில் பாண்டியரின் மீன்கொடிதான் பறக்கிறது!

பல்லக்கு சிங்காசனம் அந்தப்புறம் எல்லாம் பாண்டியரின் மீன் சின்னமே பொறிக்கப் பட்டுள்ளது!  ஆனால் அந்த அருங்காட்சியகத்தில் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.  அதனால் பல்லக்கு சிங்காசனம் இவற்றில் பொறிக்கப் பெற்றிருந்த மீன்சின்னங்களைப் படம் எடுக்க இயலாமல் போனது.

28.08.2015, காலை 11.00மணிக்கு,
காசியிலிருந்து கி.காளைராசன்
Kalairajan Krishnan
28 ஆகஸ்ட், 2015

புதன், 7 ஆகஸ்ட், 2019

திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரை

தேவகோட்டை நகரத்தார்கள் திருப்பணி செய்த கோயில்கள் அதிகம். முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்லும் தொன்மையான மரபை இன்றளவும் பெரிதும் மதித்துக் காத்து வருகின்றனர்.
தேவகோட்டையிலிருந்து சென்னை வழியாகத் திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரையை துன்மதி ஆண்டு மாசி மாதம் 32ஆவது நாள் (16.03.1982) தொடக்கி சென்னை வழியாக 330 மைல் (528 கி.மீ,) நடந்து 07.04.1982 அன்று வேல் சாத்தி வழிபாடு செய்துள்ளனர்.
இந்தக் காவடி யாத்திரை வரும் ஆண்டுகளில் தொடர வேண்டும். நமது மரபு வழிபாடுகள் காக்கப்பட வேண்டும்.
படத்தில் உள்ள அடியார்கள் யார்யாரென அடையாளம் காண முடிகிறதா?