புதன், 7 அக்டோபர், 2020

08.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 136 ஆம் நாள், புரட்டாசி 22

 ஆறு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் .......

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை -  குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து   சாலைவழியாக இராமேசுவரத்திற்குப் புறப்பட்டு 06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்ந்தார்கள். வரும் வழி நெடுகிலும், பாதயாத்திரையின்போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி கொண்டு வந்து சேர்ந்தனர்.

இராமேசுவரத்தில் 07.10.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் கங்காதீர்த்தம் அபிஷேகம் செய்து இராமநாதசுவாமியையும் பர்வதவர்த்தனி அம்பாளையும் வழிபாடு செய்து கொண்டனர்.     

இன்று  136 ஆம் நாள் - புரட்டாசி 22 (08.10.2014)  பிள்ளையார்பட்டியில் வழிபாடு.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்