ஞாயிறு, 15 மார்ச், 2020

சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட செம்பினால் செய்யப்பட்ட இரு செப்புகள்

அருமை, அருமை. தொல் தமிழர் செம்பினால் குடுவைகள் செய்து பயன்படுத்தியுள்ளனர். இது குறித்துச் சங்கப்பாடல்களில் குறிப்பு ஏதேனும் உள்ளதா? எனத் தேடிக் கண்டறிய வேண்டும். தொல்லியலாளர்களுக்கு நல்வாழ்த்துகள். நல்லாசிரியர் மற்றும் சிவகளை தொல்லியல் ஆர்வலர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

என் மனதில் நிலைபெற்றுள்ள கண்ணதாசன் பாடல் (2)


என் மனதில் நிலைபெற்றுள்ள 
கண்ணதாசன் பாடல் (2)
ஆனால் இது கண்ணதாசன் பாடல் அல்ல.
இது பட்டினத்தாராக மாறிய கண்ணதாசனின் பாடல்.

பட்டினத்தார் பாடல் ஒன்று
“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே,
விழியம் பொழுகமெத்திய மாதரும் வீதிமட்டே,
விம்மி விம்மி இருகைத்தலை மேல்வைத் தழும் மைந்தரும் சுடு காடு மட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!”
இந்தப் பாடல் நன்கு படித்தவர்க்கே புரியும்.

ஆனால் இந்தப் பாடலை, படிக்காதவரும் எளிதில் புரிந்து ரசிக்கும்படியாக நம் கவியரசர் நமக்கு மிக எளிமையாகத் தருகிறார்.

மேலே சொன்ன பட்டினத்தார் பாடலை,
“வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ” என்றும்,
பட்டினத்தார் சொன்னதை மேலும் வரிவரியாக அடுக்குவதைப் பார்ப்போம்.
“தொட்டிலுக்க அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி” என்பார்.
இது பட்டினத்தாராக மாறிய கண்ணதாசனின் பாடல்.

சித்தர் பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேசுவரம் - காசி 123நாட்கள் புனித பாதயாத்திரையின் போது ஓ.சிறுவயல் (இருப்பு சிதம்பரம்) மெய்யப் செட்டியார் அவர்கள் என்னிடம் சொன்னது இது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

என் மனதில் நிலைபெற்றுள்ள கண்ணதாசன் பாடல்


என் மனதில் நிலைபெற்றுள்ள 
கண்ணதாசன் பாடல்

ஆனால் இது கண்ணதாசன் பாடல் அல்ல.
இது பட்டினத்தாராக மாறிய கண்ணதாசனின் பாடல்.

பட்டினத்தாரின் பாடல்.
“மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா”

இதையே நம் கவியரசர், சரசுவதிசபதம் திரைப்படப்பாடலில் மிக அழகாக எழுதியுள்ளார்.
“ பெற்றவள் உடல் சலித்தாள்
பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
பாவி இன்னுமொரு தாய் வயிற்றில் பிறவேன் அம்மா”

சித்தர் பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேசுவரம் - காசி 123நாட்கள் புனித பாதயாத்திரையின் போது ஓ.சிறுவயல் (இருப்பு சிதம்பரம்) மெய்யப் செட்டியார் அவர்கள் என்னிடம் சொன்னது இது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்