வெள்ளி, 8 அக்டோபர், 2021

சித்தண்ணவாயில், அண்ணல் கோயில்

சித்தண்ணவாயிலில் உள்ள கல்வெட்டு, அவ்விடத்தை 'அண்ணல் கோயில் ' என்றே குறிக்கிறது. அங்கு வாழ்ந்த முனிவர்களை அக்கல்வெட்டு 'அறிவர்கள்' என்றே குறிக்கிறது. எனவே சித்தண்ணவாயில் சமணர்களுக்கு உரியதன்று என்னும் கருத்து வலுப்படுகிறது.

வியாழன், 7 அக்டோபர், 2021

09.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 137 ஆம் நாள், புரட்டாசி 23

 இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 

இன்று 137 ஆம் நாள், புரட்டாசி 23 (09.10.2014)

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து சாலைவழியாக இராமேசுவரம் வந்து சேர்ந்தார்கள்.

நேற்று முன்தினம் 07.10.2014  இராமேசுவரத்தில் குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் காசிஸ்ரீ சரவணன் அவர்களையும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து, இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு செய்தார்.

நேற்று 08.10.2014 பிள்ளையார்பட்டியில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்துகொண்டார்.  காசிஸ்ரீ சின்னக்கருப்பன் செட்டியார் மற்றும் அடியார்கள் பலரும் கலந்து கொண்டர்.


இன்று 09.10.2014 அன்று பொன்னமராவதி வலையபட்டியில் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இன்று மலையாண்டி கோயிலில் வழிபாடு செய்து கொண்டார்.  இத்துடன் இராமேசுவரம் காசி பாதயாத்திரையும், அதன் தொடர்ச்சியான அனைத்து வழிபாடுகளும் நிறைவுற்றன.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு கற்பகவிநாயகர், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....


அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

08.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 136 ஆம் நாள், புரட்டாசி 22


இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 

இன்று 136 ஆம் நாள், புரட்டாசி 22 (08.10.2014)

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து சாலைவழியாகப் புறப்பட்டு, 

நேற்று 07.10.2014  இராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

நேற்று மதியம் குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் காசிஸ்ரீ சரவணன் அவர்களையும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து, இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு செய்தார்.

வழிபாடு முடிந்தபின்னர் காசிஸ்ரீ சரவணன் அவர்கள் இராமேசுவரத்திலிருந்து அவரது ஊருக்குப் பயணம் ஆனார்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் அன்னதானவண்டியில் இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு கோட்டையூர் வந்து தங்கியிருந்தனர்.


இன்று  136 ஆம் நாள் - புரட்டாசி 22 (08.10.2014)  

2014 ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை நிறைவு.  பிள்ளையார்பட்டியில் அபிஷேகம் மற்றும் வழிபாடு.

காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும் மற்றும் அடியார்கள் பலரும் வந்திருந்தனர்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு கற்பகவிநாயகர், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

புதன், 6 அக்டோபர், 2021

07.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 135 ஆம் நாள், புரட்டாசி 21


இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 

இன்று 135 ஆம் நாள், புரட்டாசி 21 (07.10.2014)


இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை -  குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து   சாலைவழியாக இராமேசுவரத்திற்குப் புறப்பட்டனர்.   இரவு 9.00 மணிக்குக் காசி-இராமேசுவரம் தொடர்வண்டியில் யாத்திரிகர்கள் அனைவரும்  இராமேசுவரத்திற்குப் புறப்பட்டனர்.

பாதயாத்திரை நடைபெற்றபோது, வழி நெடுகிலும் யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி கொண்டு,  அன்னதான வண்டியில்  காசியிலிருந்து இராமேசுவரத்திற்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வந்து கொண்டிருந்தார்.   அவருடன் காசிஸ்ரீ  சரவணன் அவர்களும் வந்து கொண்டிருந்தார்.

இன்று 135 ஆம் நாள், புரட்டாசி 21 (07.10.2014) காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு -  

இராமேசுவரத்தில் 07.10.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் கங்காதீர்த்தம் அபிஷேகம் செய்து இராமநாதசுவாமியையும் பர்வதவர்த்தனி அம்பாளையும் வழிபாடு செய்து கொண்டனர். 


இராமேசுவரம் - காசி பாதயாத்திரையைத் தொடங்கிட இராமேசுவரம் செல்லும் வழியில் தேவகோட்டையில் எடுத்த படம் இது.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 5 அக்டோபர், 2021

06.10.2014 காசி பாதயாத்திரை - 134 ஆம் நாள், புரட்டாசி 20




7 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் .......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.   இன்று  126 ஆம் நாள் - புரட்டாசி 12 (28.09.2014)  ஞாயிற்றுக் கிழமை

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று வழிபட்டோம்.   புரட்டாசி 5 (21.09.2014) அன்று காசியிலிருந்து புறப்பட்டோம்.  

குருசாமி பச்சைக்காவடி ஐயா  அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.   

இன்று 134 ஆம் நாள், புரட்டாசி 20 (06.10.2014) மாலைநேரம் வைரவன்பட்டிக்கு வந்து சேர்ந்தனர்.  இரவு இங்கே தங்கியிருந்தனர்.  நாளை அதிகாலை வைரவன்பட்டியிலிருந்து புறப்பட்டு இராமேசுவரம் சென்று அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து வழிபாடு.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்