வியாழன், 7 அக்டோபர், 2021

09.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 137 ஆம் நாள், புரட்டாசி 23

 இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 

இன்று 137 ஆம் நாள், புரட்டாசி 23 (09.10.2014)

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து சாலைவழியாக இராமேசுவரம் வந்து சேர்ந்தார்கள்.

நேற்று முன்தினம் 07.10.2014  இராமேசுவரத்தில் குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் காசிஸ்ரீ சரவணன் அவர்களையும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து, இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு செய்தார்.

நேற்று 08.10.2014 பிள்ளையார்பட்டியில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்துகொண்டார்.  காசிஸ்ரீ சின்னக்கருப்பன் செட்டியார் மற்றும் அடியார்கள் பலரும் கலந்து கொண்டர்.


இன்று 09.10.2014 அன்று பொன்னமராவதி வலையபட்டியில் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இன்று மலையாண்டி கோயிலில் வழிபாடு செய்து கொண்டார்.  இத்துடன் இராமேசுவரம் காசி பாதயாத்திரையும், அதன் தொடர்ச்சியான அனைத்து வழிபாடுகளும் நிறைவுற்றன.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு கற்பகவிநாயகர், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....


அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக