வியாழன், 7 அக்டோபர், 2021

08.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 136 ஆம் நாள், புரட்டாசி 22


இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 

இன்று 136 ஆம் நாள், புரட்டாசி 22 (08.10.2014)

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து சாலைவழியாகப் புறப்பட்டு, 

நேற்று 07.10.2014  இராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

நேற்று மதியம் குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் காசிஸ்ரீ சரவணன் அவர்களையும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து, இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு செய்தார்.

வழிபாடு முடிந்தபின்னர் காசிஸ்ரீ சரவணன் அவர்கள் இராமேசுவரத்திலிருந்து அவரது ஊருக்குப் பயணம் ஆனார்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் அன்னதானவண்டியில் இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு கோட்டையூர் வந்து தங்கியிருந்தனர்.


இன்று  136 ஆம் நாள் - புரட்டாசி 22 (08.10.2014)  

2014 ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை நிறைவு.  பிள்ளையார்பட்டியில் அபிஷேகம் மற்றும் வழிபாடு.

காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும் மற்றும் அடியார்கள் பலரும் வந்திருந்தனர்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு கற்பகவிநாயகர், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக