திங்கள், 20 ஜனவரி, 2020

தென்னமரக்குடி எண்ணை

தென்னமரக்குடி எண்ணை 


எனக்கு நான்கு வருடங்களாக இடதுகால் மூட்டில் வலி இருந்து வந்தது. அதை மூன்றே நாட்களில் குணமாக்கி விட்டார்.

2014ஆம் ஆண்டு எனது குருசாமியான வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் 20 அடியார்களை அழைத்துக் கொண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த 20 யாத்திரிகர்களுள் நானும் ஒருவன். அலுவலகத்தில் அமர்ந்தே வேலைசெய்து பழக்கப்பட்ட எனக்கு இந்த 123நாட்கள் பாதயாத்திரை மிகுந்த உடல்வலியைக் கொடுத்தது. பாதயாத்திரையின் இடையே, எனது இடதுகால் வலியெடுக்க ஆரம்பித்தது. ஆனாலும் தொடார்ந்து நடந்து எனது பாதயாத்திரையை நிறைவு செய்தேன். 2014ஆம் ஆண்டைத் தொடர்ந்து குருசாமி பச்சைகக்காவடி அவர்கள் 2015ஆம் ஆண்டு நடத்திய இராமேசுவரம் காசி பாதயாத்திரையில் கலந்து கொண்டு நாக்பூரிலிருந்து காசிக்குப் பாதயாத்திரை செய்தேன். அடுத்தடுத்த வருடங்களில், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பிள்ளையார்பட்டியிலிருந்து தொடங்கி பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணிகை என அறுபடைவீடுகளுக்கும் 60 நாட்களில் 1157 கி.மீ. பாதயாத்திரை மேற்கொண்டார்கள். அப்போது குருசாமி பச்சைக்காவடி அவர்களுடன் நானும் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டேன். எனது இடதுகால் முட்டியில் வலி இருந்தபோதும், காலை நேராக நீட்ட முடியாதபோதும் 2014, 2015, 2016, 2017 ஆண்டுகளில் பாதயாத்திரை செய்து, இறையருளாளும் குருவருளாளும் பாதயாத்திரைகளை நல்லபடியாக நிறைவு செய்து வழிபாடு செய்து வந்தேன்.


எனது இடதுகாலை நேராக நீட்டமுடியாமல் சிரமப்படுகிறேன் என்பதை அறிந்த குருசாமி பச்சைக்காவடி அவர்கள் என்னை திருவாரூர் சென்று கோயில்அருகே வடக்குவடம்போகி தெருவில் உள்ள AKR தென்னமரக்குடி வைத்தியரைப் பார்க்குமாறு அறிவுறுத்தினார். நானும் வைத்தியர் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் மருத்துவமனையில் இருக்கும் விபரம் அறிந்துகொண்டு நேரில் சென்றேன். எனது கால்களைப் பரிசோதித்த பின்னர், எனது இடதுகால் மூட்டில் வலி இருந்த இடத்தில் ஒருரூபாய் நாணயங்கள் சிலவற்றை வைத்துக் கட்டிவிட்டார். மூன்றாவது நாள் கட்டைப் பிரித்த பின்னர் தென்னமரக்குடி எண்ணையைப் பயன்படுத்துமாறு கூறினார்.



மூன்றாவது நாள் கட்டைப் பிரிக்கும் போது, என்னால் எனது இடதுகாலை நன்றாக நேராக நீட்ட முடிந்தது. வலியில்லை. இதுநாள் வரை இந்தவலி மீண்டும் வரவேயில்லை. மருத்துவருக்கு எனது நன்றி.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
தை 6 (201.01.2020) செவ்வாய்க்கிழமை

தென்னமரக்குடி என்பது வைத்தியரின் முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்தின் பெயர். இவரது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்து வருகின்றனர். நான் வைத்தியம் பார்த்துக் கட்டுப் போட்டுக் கொண்டு வெளியே வரும்போது மருத்துமனையில் நான்கைந்துபேர் வைத்தியத்திற்காகக் காத்திருந்தனர். பொது மக்களிடம் இந்த வைத்தியசாலை பிரபலமடைந்துள்ளதைக் காண முடிந்தது. இணையத்தில் தென்னமரக்குடி எண்ணை என்ற பெயரில் இப்போது வேறுசிலரும் எண்ணை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

தென்னமரக்குடி எண்ணை என்று இணையத்தில் தேடியபோது கிடைத்த இந்த விளம்பர ஒளிப்பதிவையும் இணைத்துள்ளேன்.
https://youtu.be/MeT8ajnGtto