வெள்ளி, 8 அக்டோபர், 2021

சித்தண்ணவாயில், அண்ணல் கோயில்

சித்தண்ணவாயிலில் உள்ள கல்வெட்டு, அவ்விடத்தை 'அண்ணல் கோயில் ' என்றே குறிக்கிறது. அங்கு வாழ்ந்த முனிவர்களை அக்கல்வெட்டு 'அறிவர்கள்' என்றே குறிக்கிறது. எனவே சித்தண்ணவாயில் சமணர்களுக்கு உரியதன்று என்னும் கருத்து வலுப்படுகிறது.

வியாழன், 7 அக்டோபர், 2021

09.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 137 ஆம் நாள், புரட்டாசி 23

 இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 

இன்று 137 ஆம் நாள், புரட்டாசி 23 (09.10.2014)

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து சாலைவழியாக இராமேசுவரம் வந்து சேர்ந்தார்கள்.

நேற்று முன்தினம் 07.10.2014  இராமேசுவரத்தில் குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் காசிஸ்ரீ சரவணன் அவர்களையும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து, இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு செய்தார்.

நேற்று 08.10.2014 பிள்ளையார்பட்டியில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்துகொண்டார்.  காசிஸ்ரீ சின்னக்கருப்பன் செட்டியார் மற்றும் அடியார்கள் பலரும் கலந்து கொண்டர்.


இன்று 09.10.2014 அன்று பொன்னமராவதி வலையபட்டியில் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இன்று மலையாண்டி கோயிலில் வழிபாடு செய்து கொண்டார்.  இத்துடன் இராமேசுவரம் காசி பாதயாத்திரையும், அதன் தொடர்ச்சியான அனைத்து வழிபாடுகளும் நிறைவுற்றன.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு கற்பகவிநாயகர், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....


அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

08.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 136 ஆம் நாள், புரட்டாசி 22


இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 

இன்று 136 ஆம் நாள், புரட்டாசி 22 (08.10.2014)

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து சாலைவழியாகப் புறப்பட்டு, 

நேற்று 07.10.2014  இராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

நேற்று மதியம் குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் காசிஸ்ரீ சரவணன் அவர்களையும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து, இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு செய்தார்.

வழிபாடு முடிந்தபின்னர் காசிஸ்ரீ சரவணன் அவர்கள் இராமேசுவரத்திலிருந்து அவரது ஊருக்குப் பயணம் ஆனார்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் அன்னதானவண்டியில் இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு கோட்டையூர் வந்து தங்கியிருந்தனர்.


இன்று  136 ஆம் நாள் - புரட்டாசி 22 (08.10.2014)  

2014 ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை நிறைவு.  பிள்ளையார்பட்டியில் அபிஷேகம் மற்றும் வழிபாடு.

காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும் மற்றும் அடியார்கள் பலரும் வந்திருந்தனர்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு கற்பகவிநாயகர், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

புதன், 6 அக்டோபர், 2021

07.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 135 ஆம் நாள், புரட்டாசி 21


இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 

இன்று 135 ஆம் நாள், புரட்டாசி 21 (07.10.2014)


இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை -  குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து   சாலைவழியாக இராமேசுவரத்திற்குப் புறப்பட்டனர்.   இரவு 9.00 மணிக்குக் காசி-இராமேசுவரம் தொடர்வண்டியில் யாத்திரிகர்கள் அனைவரும்  இராமேசுவரத்திற்குப் புறப்பட்டனர்.

பாதயாத்திரை நடைபெற்றபோது, வழி நெடுகிலும் யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி கொண்டு,  அன்னதான வண்டியில்  காசியிலிருந்து இராமேசுவரத்திற்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வந்து கொண்டிருந்தார்.   அவருடன் காசிஸ்ரீ  சரவணன் அவர்களும் வந்து கொண்டிருந்தார்.

இன்று 135 ஆம் நாள், புரட்டாசி 21 (07.10.2014) காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு -  

இராமேசுவரத்தில் 07.10.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் கங்காதீர்த்தம் அபிஷேகம் செய்து இராமநாதசுவாமியையும் பர்வதவர்த்தனி அம்பாளையும் வழிபாடு செய்து கொண்டனர். 


இராமேசுவரம் - காசி பாதயாத்திரையைத் தொடங்கிட இராமேசுவரம் செல்லும் வழியில் தேவகோட்டையில் எடுத்த படம் இது.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 5 அக்டோபர், 2021

06.10.2014 காசி பாதயாத்திரை - 134 ஆம் நாள், புரட்டாசி 20




7 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் .......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.   இன்று  126 ஆம் நாள் - புரட்டாசி 12 (28.09.2014)  ஞாயிற்றுக் கிழமை

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று வழிபட்டோம்.   புரட்டாசி 5 (21.09.2014) அன்று காசியிலிருந்து புறப்பட்டோம்.  

குருசாமி பச்சைக்காவடி ஐயா  அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.   

இன்று 134 ஆம் நாள், புரட்டாசி 20 (06.10.2014) மாலைநேரம் வைரவன்பட்டிக்கு வந்து சேர்ந்தனர்.  இரவு இங்கே தங்கியிருந்தனர்.  நாளை அதிகாலை வைரவன்பட்டியிலிருந்து புறப்பட்டு இராமேசுவரம் சென்று அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து வழிபாடு.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

திங்கள், 27 செப்டம்பர், 2021

28.09.2014 காசி பாதயாத்திரை - 126 ஆம் நாள், புரட்டாசி 12


7 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் .......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.   இன்று  126 ஆம் நாள் - புரட்டாசி 12 (28.09.2014)  ஞாயிற்றுக் கிழமை

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று வழிபட்டோம்.   புரட்டாசி 5 (21.09.2014) அன்று காசியிலிருந்து புறப்பட்டோம்.  

குருசாமி பச்சைக்காவடி ஐயா  அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.   06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அதுநாள் வரை காசி தொடர்பான கதைகளைப் படிப்போம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

27.09.2014 காசி பாதயாத்திரை - 125 ஆம் நாள், புரட்டாசி 11

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.   இன்று  125 ஆம் நாள் - புரட்டாசி 11 (27.09.2014)  சனிக்கிழமை


இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று வழிபட்டோம்.   புரட்டாசி 5 (21.09.2014) அன்று காசியிலிருந்து புறப்பட்டோம்.  

குருசாமி பச்சைக்காவடி ஐயா  அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.   06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அதுநாள் வரை காசி தொடர்பான கதைகளைப் படிப்போம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

சனி, 25 செப்டம்பர், 2021

தேவராதன் காசிக்குச் சென்று வந்த கதை

காளையார்கோயில்

அருள்மிகு காளீசுவரர் திருவருளால் 

தேவராதன் காசிக்குச் சென்று வந்த கதை


காசிக்குச் செல்வோர் காளையார்கோயில் சென்று அருள்மிகு காளீசுவரரை வணங்கிவிட்டுக் காசிக்குச் செல்லுதல் சிறப்புடையது.  இதைப் பற்றி இந்தக் கதை கூறுகிறது. 

காளையார்கோயில் தேவராதப் படலம் (30) 
சுந்தரமூர்த்தி காளீசரைக் கண்டு வணங்கி பாடிப் பரவியதைத் தொடர்ந்து, காளீசரால் ‘தேவராதன்‘ என்பவன் பெற்ற நன்மையை எனக்குத் தெரிந்தவரை சொல்லுகிறேன் என்கிறார் ஆசிரியர்.

திருவாடானைக்கு வடகிழக்கில், திருப்புனவாயில் அருகில் ‘இந்திரபுரம்‘ என்று ஓர் ஊர் உள்ளது.  அந்நகரில் ஒழுக்க சீலனும், மறையில் வல்லோனும், சோமயாகம் செய்தவனுமாகிய ‘தேவராதன்‘ என்ற மறையவன் வசித்து வந்தான்.  அவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவனாகிய வினதனுக்கு உபநயனம் செய்வித்து, நூல்கள் பல கற்பித்து வளர்த்தான்.  பின் தேவராதன், கங்கைக்குச் சென்று நீராட வேண்டும் என்ற விருப்பம் கொண்டான்.  மூத்தமகனைக் காளீசர் உறையும் காளிபுரத்திலுள்ள மாமன் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்து, இளைய மகனோடும் மனைவியோடும் வாரணாசிக்குச் சென்றான்.

தேவராதன் சென்றவுடன், இந்திரபுரத்திலுள்ள அவனுடைய பொருள்களை எல்லாம் அங்குள்ள சிலர் அபகரித்துக் கொண்டனர். ‘காந்தன்‘ என்ற பெயருடைய மாமன் இல்லத்திலே வளர்ந்து வந்த வினதனுக்குத் திருமண வயது வந்தது.  மாமனும் வினதனுக்குத் திருமணம் செய்ய எண்ணி அதற்கு வேண்டிய பொருளுக்காக மருமகனை அழைத்துக் கொண்டு, இந்திரபுரம் சென்றனன்.  அவ்வூரில் உள்ளவர்களிடம் வாரணாசிக்குச் சென்ற தேவராதன் இன்னும் வரவில்லை, அதனால் தேவராதன் மகனுக்குத் திருமணம் முடிக்க எண்ணி, அதற்கு வேண்டிய பொருளுக்காக இங்கு வந்துள்ளேன்.  தேவராதனுடைய நிலத்தை அனுபவிப்பவர்கள் அதற்குரிய ஊதியத்தைத் தாருங்கள் எனக் கேட்டான்.  இந்திரபுரத்தில் உள்ளோர் அனைவரும் தேவராதன் சென்றபின், அவன் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய வரிப்பணத்திற்காக நிலத்தை விற்றுக் கொடுத்து விட்டோம். “ஒன்றும் மீதமில்லை“ என்றனர்.  மாமனையும் மருமகனையும் ஊரை விட்டே துரத்தவும் செய்தனர்.  மாமனும் உள்ளம் வருந்தி இவ்வூரில் நன்னெறி இல்லையோ, கேட்க நாட்டார் இல்லையோ, மன்னர் தாம் இல்லையோ என்று புலம்பிய வண்ணம் மருமகனோடு காளிபுரம் வந்து சேர்ந்தார்.

சிறிது காலத்தில் மாமனும் இறந்து போனான்.  ஆதரவற்று வருந்திய வினதன் பிரம்மச்சரிய விரதத்தில் தவறாதவனாகி இல்லம் தோறும் பிச்சை ஏற்று உண்டு வாழ்ந்து வந்தான்.  காளீசரே தஞ்சம் என வணங்கி நின்றான்.  அவன் நிலைகண்ட காளீசரும், உமையவளோடும் இளையகுமரனோடும், ‘வினதனின் தந்தை தாய் இளையசகோதரன்‘ போலக் காசியிலிருந்து கங்கை நீரைக் காவடிபோலக் கட்டிக் கொண்டு வருபவர்போல வந்தார்.  மகன் வினதனைக் கண்டு தழுவி மகிழ்ந்து சில நாட்கள் காளிபுரத்தில் இருந்தார். பிறகு வினதனை அழைத்துக் கொண்டு தேவராதன் வடிவில் வந்த காளீசர் இந்திரபுரத்திற்குச் சென்றார். 

இந்திரபுரத்தில் உள்ளவர்கள் தேவராதனைக் கண்டு கலங்கினர், ஆனாலும் உவகை கொண்டவர்கள் போல உபசரித்தனர்.  தேவராதனும் ஊரிலுள்ளோரை நோக்கி “நான் காசி சென்று பலநாட்கள் ஆகி விட்டன. இதுவரை எனது பங்கிலுள்ள ஊதியத்தை வரிச்செலவு போகக் கணக்குப் பார்த்துத் தாருங்கள்“ என் மூத்த மைந்தனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்றான்.

ஊராரோ, நீ காசிக்குச் செல்லும் போது உன்னுடைய நிலத்தை யெல்லாம் பிறரிடம் விற்று விட்டாயே, இப்போது வந்து ஊதியம் கேட்டால் யார் கொடுப்பார்?  “பித்தனோ நீவிர்“ என்றனர்.  அதற்கு தேவராதனாகிய காளீசர், “நான் பித்தன்தான், அது இருக்கட்டும், நான் ஊராருக்கு நிலங்களை விற்றதற்கான ஆவணத்தில் என் கையொப்பத்தைக் காட்டுங்கள்“ என்றார்.

ஊரார், பொய்யான ஆவணங்களை எல்லாம் காட்ட, உண்மையறிய அரசனிடம் செல்வோம், என்று கூறித் தேவிகோட்டையில் சிறந்து வாழும், செங்கோலனாகிய பாண்டியகுல மன்னனான ‘பூடணன் ‘ என்ற பெயருடைய மன்னனைச் சார்ந்தார். அரசனும் இரு பக்கத்தார் வாதங்களையும் கேட்டு உண்மையை ஆராய்ந்து, இந்திரபுரத்து ஊரார் காட்டிய சான்றும் ஆவணமும் பொய் என்று உணர்ந்து, இந்திரபுரத்திலுள்ள தேவராதன் நிலங்களை முன்போல் அவனுக்கு உரிமையாக்கினான்.  தேவராதனும் சில நாட்களில் தங்கள் குலத்திற்கு ஏற்ற பெண்ணை வினதனுக்கு மணஞ் செய்வித்தான்.  அப்போது காசிக்குச் சென்ற தேவராதனும் அவன் மனைவியும் இளையமகனும் வந்து சேர்ந்தனர்.  இதைக் கண்டு அங்குள்ளோர் அதிசயித்தார்.  காளீசரும் சொர்ணவல்லி அம்மையும் இளையமகனும் மறைந்தனர். தேவராதன் மகன் வினதனுக்கு ஆதரவாகக் காளீசரே உமையோடும் இளைய மகனோடும் வந்ததை அறிந்த தேவராதன், காளீசன் தாளைப் புகழ்ந்து பெரு வாழ்வு வாழ்ந்து வந்தான்.

காளீசரும் சொர்ணவல்லித் தாயாரும் வீற்றிருக்கும் காளீபுரத்திற்கு அன்றுமுதல் அழகிய மங்களம் என்ற பெயர் ஏற்பட்டது.

சுபம் 
மங்களம்.


வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தேவதாசன் காசி சென்று திரும்பி வந்த கதை

காளையார்கோயில் புராணம்

(12) தேவதாசப் படலம்


தேவர்கள் எல்லாம் சோதிவனத்தில் திகழ்கின்ற தேவதேவனாகிய காளீசரைப் பூசித்த கதையைச் சொன்னோம்.  

இனி, தேவிசாலபுரம் என்ற ஊரை ஆண்டுவந்த செல்வந்தனாகிய தேவதாசன் என்பவன் காசி சென்று திரும்பி வந்த  சரித்திரத்தைக் கூறுவோம்.

நாடுகளுள் சிறந்தது பாண்டி நாடு.  பாண்டிய நாட்டின் வளம் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, தெய்வங்களின் திருவருளையும் பெற்று, நாடி வருகின்ற எவர்க்கும் மிக்க அருளொடு வழங்குகின்ற செல்வர் வசிக்கும் மாடமாளிகை நிறைந்தது தேவிசாலபுரம் என்ற ஊர்.  அத் திருநகரில், வையத்தைக் காப்பவனும், சத்தியம் பொறை ஒழுக்கம் தயை புகழ் இவற்றில் நிகரில்லாதவனும், சைவபக்தியில் சிறந்து தருமம் தானம் செய்வனும், பூதிசாதன நெறியினில் நிற்போனும், திக்கு எல்லாம் சென்று மீளும் தேர்களை உடையவனும், மிகுந்த செல்வங்களை உடையவனும், சான்றோனும், சந்திரகுலத்தில் உதித்தவனும், மிகுந்த புகழுக்கு உரியவனுமாகிய தேவதாசன் என்ற மாறன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.  அத்தகு பெருமை வாய்ந்த இந்த வேந்தன், சோதிவனத்தில் (காளையார்கோயிலில்) உறைந்துள்ள காளீச்சுரனொடு சொர்ணவல்லி, சோமேசன் சவுந்தரவல்லி இவர்களிடம் நிறைந்த பக்தி மிகுந்தவன்.  ஆழ்ந்த உள் அன்பினோடு அவன் ஒருநாள், காளீசர் சந்நிதி முன் வந்து நின்று கீழே விழுந்து அடிபணிந்து வணங்கினான்.  

அப்போது அவன் உள்ளத்தில் உலகெல்லாம் புகழும் காசி நகருக்குச் சென்று கங்கையில் நீராடி, புனிதமான கங்கையின் தீர்த்தத்தைக் கொண்டுவந்து காளீசனுக்கு நீராட்ட வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது.  அவன் தனது தேவிசாலபுரத்தினில் தனது சிறுவயது மகனை அரசாள வைத்து விட்டு, நான்மறையோர்களிடம் அனுமதியும் ஆசியும் பெற்றுத் தனது பரிவாரங்கள் சூழக் காசிக்குப் புறப்பட்டான்.

காசியை நோக்கி நெடுந்தொலைவு நடந்து, தான் காணாத நல்ல பல தேசங்களையும், வளமை மிகுந்த பல நகரங்களையும், நன்னீர் ஓடும் பல நதிகளையும், விரிந்து பரந்த காடுகள் பலவற்றையும், நெடிதுயர்ந்த மலைகள் பலவற்றையும் கடந்தனன்.  நடப்பதினால் உண்டாகும் துன்பத்தை நோக்கான்.  நெடுந்தொலைவு நடந்தும் காசி நகரைக் காணோமே என்று தவித்து, முற்றும் இளைத்து மேனி தளர்ந்து கண் துயின்றான். 

அப்போது, அவனது அன்பின்பால்பட்ட அருள் காளீசன் ஒரு மறையோன் வடிவில் கனவில் தோன்றினான்.  கங்கை நீராட்ட, நீ உன் உள்ளத்தில் கருதிய கடவுளுக்கு அக்னித் திசையில் அவராலே பாதாள கங்கை என்ற தீர்த்தம் உருவாக்கப் பட்டுள்ளது.   அகத்தியமுனிவர் அப்பெரும் புனித நீர் கொண்டு, கடவுளுக்கு ஆட்டிச் சித்தி பற்பல பெற்றுள்ளார்.  நீயும், அந்தத் தீர்த்தத்தில் நீராடி, உனது கடவுளையும் நீராட்டலாம்.  ஏமாற்றம் இல்லாமல் உள்ளம் தேறுக என்றனன். அதற்கு மன்னனும், நெடுந்தொலைவு கடந்தும், பாவங்கள் அனைத்தும் போக்க வல்ல, காசியினைக் கண்டு மகிழ்ந்தனன் இல்லை, நொந்தேன், சொல்லிய வண்ணம் எவ்வாறு தொடர்ந்து அங்குச் செல்வேன் என்று கூறினான். அந்த மறையோனும் அங்கு ஒரு குளத்தைக் காட்டி  இதில் மூழ்கினால் எளிதில் சென்றிடலாம் என்று கூறி மறைந்தான்.

தேவதாசனும் கனவில் இருந்து விழித்து எழுந்தான். காளீசன் தாள் நினைந்து வணங்கினான். வைகறைப் பொழுதில், தான் கனவில் கண்ட குளத்தை நோக்கிச் சென்று அடைந்தனன். அப்போது, அங்கே, இரவு கனவில் தோன்றி மறையோன் நேரில் தோன்றி, மன்னவ, இங்கு இதில் மூழ்குக என்று மன்னனின் கரத்தைப் பற்றி இழுத்துச் சென்று அந்தத் தீர்த்தத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டான். கணநேரத்தில் அங்கே சோதிவனத்தில் சிவகங்கைத் தீர்த்தத்தில் தீர்த்தமாடி எழுந்து காளீசன் ஆலயத்தைக் கண்டு களிப்புற்றான் மன்னன்.  அங்கு வந்தோரிடம் மன்னன் இந்த மகிமையைக் கூறினான்.

சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி நீராடி, பூதிகண்டிகை நன்கு அணிந்து, செம் பொன்னால் ஆகலயத்தில் அத்தீர்த்தத்தை எடுத்து, அன்பினால் காளீசனுக்கு நீராட்டினான்.  நறுமலர்களைக் கொண்டு அருச்சனை செய்து, தூப தீபம் காட்டி,  நிவேதனங்கள், பதினாறு உபசாரங்களும் செய்து உள மகிழ்ச்சியோடு, ஐந்தெழுத்து மந்திரத்தை நினைத்து, வலம் வந்து காளீசரைப் போற்றி நின்றான் மன்னவன். காளீசனும் முன்போல் மறையோன் வடிவில் வந்து தோன்றினான். தேவதாசனும் அவரை நோக்கி ஆனந்தக் கண்ணீர் மல்க, நிலம் கொள்ளத் தாழ்ந்து எழுந்து நின்று, மெய்சிலிர்த்து, “எங்கள் நாயகன் காளீசனது ஆலயத்தின் பாதங்களையும் உங்களது பாதங்களையும் இடையறாது நினைத்து வணங்கும் பக்தியைத் தந்து அருள்க“ என வேண்டினான்.  “அது தந்தோம் மற்றும் அன்பினால் நது பேர் நினைந்து கங்கையில் நீராடுவோர்க்கும் அவர்கள் கருதிய அனைத்தும் ஈவோம்“ என்று அருளிச் செய்து சூக்கும இலிங்கத்துள் மறைந்தான். அன்று தொட்டு இடைவிடாமல் அவன் அடிக்கு அன்பு பூண்டு, தனது தேவிசாலபுர நகரை அடைந்து தனியரசு உரிமை ஏற்று மக்களது உள்ளம் மகிழும்படியாகப் பாண்டியன் வழுதி அரசு வீற்றிருந்தான்.

                ஆதலினால் கங்கைக்கு நிகரான இச்சிவகங்கைத் தீர்த்தமாடி, அகத்தியன் உண்டாக்கிய தீர்த்தத்திலும் மூழ்கினால் பாவங்கள் எல்லாம் அகன்று முத்தி கிடைக்கும். மேலும் சிவகங்கைத் தீர்த்தத்திற்குத் தெற்கே உமையினால் உண்டாக்கப்பட்ட அயர்வறு தீர்த்தம் ஒன்று உள்ளது.  அதில் மூழ்கினால் அயர்ச்சி நீங்கி முன்செய்த தவப்பலன்கள் கிடைக்கும்.  சிவகங்கைத் தீர்த்தத்திற்கு நிருதி திக்கில் காளிதீர்த்தம் உள்ளது.  அதில் தீர்த்தமாடினால், இன்னல் போக்கும்.  அத் தீர்த்தத்திற்குத் தெற்கே பாரதி தீர்த்தம் உள்ளது.  அதில் தீர்த்தமாடினால், மனதிற்கு மகிழ்ச்சி கல்வி முதலான அனைத்தும் அளிக்கும்.  அதற்குக் கிழக்கே பிரம்மதீர்த்தம் உள்ளது. அதில் மூழ்கினால் பிரமஞானம் பெற்று நீண்டகாலம் வாழ்வர். சிவகங்கைத் தீர்த்தத்திற்கு மேற்கே விட்ணு தீர்த்தம் உள்ளது. அதில் மகாவிட்ணு தீர்த்தமாடி,  இத்தீர்த்தத்தினால் காளீசனுக்கும் நீராட்டிப் பூசைகள் செய்து மகாலெட்சுமியை அடைந்தான்.  இதில் தீர்த்தமாடினால் மிகுந்த செல்வம் கிடைக்கும். காளீசனுக்கு வாம திசையில் கவுரி உண்டாக்கிய ஒரு தூய தீர்த்தம் உள்ளது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் மனத்தில் நினைத்த எல்லாம் நடக்கும். அத் தீர்த்தத்திற்குக் குணதிசையில் சொர்ணவல்லியம்மை உண்டாக்கிய தீர்த்தம் உள்ளது.  இத்தகு தீர்த்த மேன்மை எடுத்து உரைப்பது அரிதாகும். பக்தியினால் இத் தீர்த்தங்களில் மூழ்கினோரும், அந்தத் தீர்த்தத்தை உடம்பில் தெளித்துக் கொண்டோரும், அவர்கள் நினைத்தன எல்லாம் பெற்று நலமுடன் வாழ்ந்து முத்தி அடைவர் என்று முனிவர் அருளிச் செய்தார்.



25.09.2014 காசி பாதயாத்திரை - 123 ஆம் நாள், புரட்டாசி 9




வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  இன்று  123 ஆம் நாள் - புரட்டாசி9 (25.09.2014) வியாழக் கிழமை.

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம். 

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமையன்று குருசாமி பச்சைக்காவடி ஐயா  அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.  

குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் அழைத்துச் சென்ற மற்றபிற யாத்திரிகர் அனைவரும் புரட்டாசி 5 (21.09.2014) தொடரியில் (Train) காசியிலிருந்து புறப்பட்டு நேற்று (24.09.2021) இராமேசுவரம் வந்து சேர்ந்து, வழிபாடு செய்துகொண்டு அவரவர் வீட்டிற்குத் திரும்பியிருந்தோம்.

அன்னதான வண்டியில் திரும்பி வந்து கொண்டிருக்கும் குருசாமி பச்சைக்காவடி அவர்களும், காசிஸ்ரீ  சரவணன் அவர்களும் 06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....


அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

திங்கள், 13 செப்டம்பர், 2021

14.09.2014 திரு. சினா. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி

காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களின் இளையமகன் திரு.பழனியப்பன்  அவர்கள்  <palaniappanc@hotmail.com> இந்த புனித யாத்திரிரை பற்றிய எனது பதிவுகள் அனைத்தையும் சேகரித்திருந்தார்.  அந்தச் சேகரிப்பை 14 செப்டம்பர் 2014, 23:23 அன்று மின்னஞ்சல் மூலம் அனைத்து இணைப்புகளுடன் ஒரு கோப்பாக  எனக்கு அனுப்பி வைத்தார்.

அது ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கான எனது முயற்சிக்கு உதவியாக உள்ளது.

திரு. சி. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

14.09.2014

--------------


Mr. Palaniappan <palaniappanc@hotmail.com> son of Kasisree Chinnakaruppan had collected all my posts about these pilgrims.

He emailed the collection to me on 23 September 2014, 23:23 in a file with all the links.

It has been helpful to my endeavor to publish a book.

I thank Mr. Palaniappan.

Sincerely,

Kasisree, Ph.D., N.R.K. காளைராசன்

14.09.2014

-------------------------


श्री पलानीअप्पन <palaniappnc@hotmail.com> कसीश्री के पुत्र चिन्नाकरुप्पन ने इन तीर्थयात्रियों के बारे में मेरे सभी पोस्ट एकत्र किए थे।

उन्होंने सभी लिंक वाली एक फाइल में 23 सितंबर 2014, 23:23 को संग्रह मुझे ईमेल किया।

पुस्तक प्रकाशित करने के मेरे प्रयास में यह सहायक रहा है।

मैं श्री पलानीअप्पन को धन्यवाद देता हूं।

भवदीय,

कसीश्री, पीएच.डी., एन.आर.के. ்

14.09.2014


---------------------

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

07.09.2021 மௌகஞ் டாக்டர் ராஜேந்திரன் அவர்களின் வாழ்த்து

Dr. Rajendran and his friends in Mauganj

मैं डॉ. राजेंद्रन, मोहंज हूं। गुरुमगराज की यात्रा अविस्मरणीय, अद्भुत, अकल्पनीय है। कश्मीर से कन्याकुमारी भारत है। गुरुमगराज ने श्री रामेश्वरम द्वीप से काशी की यात्रा की। हमने अपने लोगों के साथ दर्शन किए, जिसने मुझे भारत में आपकी यात्रा में धन्य बना दिया, मैं आज भी आपको याद करके खुद को धन्य मानता हूं।

बार-बार मुझे जीवन की प्रेरणा मिल रही है, गुरु महाराज जी को मेरा बारंबार प्रणाम। सभी तीर्थयात्रियों को नमस्कार। सोशल मीडिया के माध्यम से हमने इतना प्रचार प्रसार किया। जुड़े रहें, आज के युग में गुरुमगराज में विशेष योग्यता है, वे कितने प्रतिभाशाली हैं। मैं आप सभी को इसी आशा के साथ नमन करता हूं कि महाराज जी हमें अपने चरणों में रख रहे हैं। मैं उन्हें प्रणाम करता हूं, भगवान विश्वनाथ के दर्शन पर, श्री रामेश्वरम के दर्शन के बाद मुझे उनकी बहुत याद आती है। मैं उसे जीवन में एक बार फिर से देखना चाहता हूं। मैं उनका आशीर्वाद लेना चाहता हूं, और यह आप संत हैं जो हमें उनसे जोड़ सकते हैं। साष्टांग प्रणाम।

07 sep 2021

__________________

நான் டாக்டர் ராஜேந்திரன், மோகன்ஜ். குருமகிராஜுக்கான பயணம் மறக்க முடியாதது, அற்புதமானது, கற்பனை செய்ய முடியாதது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா. குருமகராஜ் ஸ்ரீ ராமேஸ்வரம் தீவில் இருந்து காசிக்கு பயணம் செய்தார். எங்கள் மக்களுடன் நாங்கள் தரிசனம் செய்தோம், இது இந்தியாவில் உங்கள் பயணத்தில் என்னை ஆசீர்வதிக்க வைத்தது, இன்றும் உங்களை நினைவில் கொள்வதில் நான் பாக்கியவானாக கருதுகிறேன்.

நான் மீண்டும் மீண்டும் வாழ்க்கையின் உத்வேகத்தைப் பெறுகிறேன், குரு மகாராஜ் ஜிக்கு எனது வணக்கங்கள். அனைத்து யாத்திரிகர்களுக்கும் வாழ்த்துக்கள். நாங்கள் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய விளம்பரங்களை பரப்பினோம். இணைந்திருங்கள், இன்றைய காலகட்டத்தில் குருமகிராஜுக்கு சிறப்பு திறன்கள் உள்ளன, அவர்கள் எவ்வளவு திறமையானவர்கள். மகாராஜ் ஜி எங்களை அவரது காலடியில் வைத்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். நான் அவரை வணங்குகிறேன், விஸ்வநாதரின் தரிசனத்தில், ஸ்ரீ ராமேஸ்வரத்தின் தரிசனத்திற்குப் பிறகு நான் அவரை மிகவும் இழக்கிறேன். என் வாழ்க்கையில் அவரை மீண்டும் பார்க்க விரும்புகிறேன். அவருடைய ஆசீர்வாதங்களை நான் பெற விரும்புகிறேன், அவர்களே எங்களை அவர்களுடன் இணைக்க முடியும். பாதம் பணிந்து வணங்குகிறேன்.

07/09/2021


ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

12.09.2021 குருசாமியைக் கொண்டாடுவோம்

குருவருளைப் போற்றுவோம்

நாம் ஆயிரத்தில் ஒருவரல்ல,  கோடியிலும் ஒருவரல்ல,  கோடனுகோடியில் ஒருவர் என்பதை உணர்வோம்.  நமக்கு இந்தப் பேற்றினை நல்கிய குருவருளைப் போற்றுதல் செய்வோம்.  வரும் ஆவணி 27 (12.09.021) ஞாயிற்றுக் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடி,  யாத்திரை மீண்டும் தொடர குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.

அண்டத்தில் வேறெங்கும் உயிர்கள் இருப்பதாக இதுநாள்வரை அறியப்பெற வில்லை.

இந்தப் பூமியில் மட்டுமே உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகின்றன.  உலகில் தோன்றியுள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும் அறிவினால் உயர்ந்துள்ளான்.

இவ்வாறு உயர்ந்துள்ள மனிதருள்ளும் கடவுளை அறிந்து வணங்கி வாழுவோராகப் புன்னிய பாரதநாட்டின் மக்கள் உள்ளனர்.

பாரத நாட்டிலுள்ள மக்கள் பலகாலமாக இராமேசுவரத்திற்கும் காசிக்கும் பாதயாத்திரையாகச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரையாகச் சென்றுள்ளார் காஞ்சி மகாப் பெரியவர்.

மகாப் பெரியவர் பாதயாத்திரை சென்ற வழித்தடத்தில் வலையபட்டிச் சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களும் 12 முறை பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை வணங்கி அருள்பெற்றுள்ளார்.

இவர் பாதயாத்திரையாகச் செல்லும் போது, ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 அடியார்களை எவ்விதமான கட்டணமும் இல்லாமல்,  உணவு உடை மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் நற்கருணையினால், நாமும் அவருடன் இராமேசுவரம் - காசி புனித பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை வணங்கும் பேறு பெற்றுள்ளோம்.  காசிஸ்ரீ என்ற பட்டமும் பெற்றுள்ளோம்.

மேலும் அறுபடைவீடுகளுக்கும் 60 நாட்கள் பாதயாத்திரையாகச் சென்று எம்பெருமான் முருகப்பெருமானிள் திருவருளையும் பெற்றுள்ளோம்.

உலகில் வாழும் கோடானகோடி மனிதர்களில் இப்பேற்றினைப் பெற்றவர்கள் நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

பெறற்கரிய இந்தப் பேற்றினைப் பெற்றுள்ள நாம், அதைப் போற்றும் வகையில் வரும் ஆவணி 27 (12.09.2021) ஞாயிற்றுக் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடிக், கோயிலில் வழிபாடு செய்து, சித்தர் ஐயா அவர்களின் அருளாசியைப் பெறுவோம்.  

முதல்நாள் சனிக்கிழமை இரவே வலையபட்டிக்கு வந்து சேர்பவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் செய்துள்ளார்கள்.

பாதயாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்று கூடித் திருவருளும் குருவருளும் பெறுவோம்.  யாத்திரை மீண்டும் தொடர குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.


அடியேன்

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

02.09.2015 இராமேசுவரத்தில் பாதயாத்திரை நிறைவு வழிபாடு

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேசுவரம் காசி நிறைவு பாதயாத்திரை.


02.09.2015 அன்று இராமேசுவரத்தில் பாதயாத்திரை நிறைவு வழிபாடு.

இராமேச்சுரம் காசி யாத்திரையின் நிறைவாக நேற்று காலை மணி 7.00க்கு திரிவேணி சங்கம தீர்த்தத்தால் அருள்மிகு பர்வதவர்தினி உடனாய இராமநாதசாமியை நீராட்டி வழிபாடு செய்தோம்.

பெரியோர்களின் நல்லாசியாலும், வழிபடு தெய்வங்களின் திருவருளாளும், குருசாமி பச்சைக்காவடி அவர்களது அன்பினாலும் யாத்திரை இனிதே நிறைவுற்றது.
தெய்வங்களின் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

21.08.2015 காசி பாதயாத்திரை

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 12ஆவது வருட இராமேசுவரம் காசி பாதயாத்திரை.

இன்று 21.08.2015 

யாத்திரிகர்கள் சமோகரா என்ற ஊரில் உள்ள அருள்மிகு கிருஷ்ணர் கோயிலில் தங்கி இருந்தோம். 

அங்கிருந்த நதியில் யாத்திரிகர் அனைவரும் நீராடி மகிழ்ந்தனர். 

கிராமத்தினர் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே, வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர்.  அங்கே ஒரு கிணறும் அதன் அருகே ஒரு மரத்தடியில் பீடத்தில் வழிபாடும் செய்து வருகின்றனர்.

அந்தப் பீடத்தில், பார்வதி பரமேசுவரர் ஒன்றாக இருக்கும் சிற்பமும், அருகே நந்தி சிற்பமும் ஒன்றும் சிதைந்த நிலையில் உள்ளன.   இந்த இடத்தில் முன்பு ஒரு பழமையான சிவாலயம் இருந்திருக்க வேண்டும்.






ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தென்காசி பாண்டியர் யார்?

 Balarajeswari Nachiar மற்றும் 

5 பேருடன்

 Muniraj Vanathirayar இருக்கிறார்.

14 ஆகஸ்ட், 2019  · 

தென்காசி பாண்டியர் யார்?.2

•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

அன்பு நண்பர்களே மற்றும் உறவினர்களே தென்காசி பாண்டியரில் ஒரு கிளையார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூரில் ஆட்சி செய்து வந்தனர். அவர்களைப் பற்றி அறிய அதே ஊரிலுள்ள பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலின் சாசனங்கள் உதவுகின்றன. அவற்றை ஆண்டு வாரியாக தற்போது காண்போம்.  

•சாசனங்களில் கரிவலம்வந்தநல்லூரும் பிற ஊர்களும்•

அருள்மிகு ஸ்ரீ.பால்வண்ணநாதர் கோயில் கல்வெட்டுகளில் கரிவலம்வந்தநல்லூரானது,

"ஆரிநாட்டு நிக்ஷேபநதி தெக்ஷணதீரத்து தாவர நல்லூர" -என்றும்,

"ஆரிநாட்டுக் கரிவரநல்லூர்" -என்றும்,

"கருவரைநல்லூர்" -என்றும்,

"ஆரினாடு கரிவரநல்லூர்"-என்றும், பயின்று வந்துள்ளது.  ஆக கரிவரநல்லூர் எனும் பெயரே இன்று மாறி கரிவலம் வந்த நல்லூர் என்று விளங்குவதை அறியமுடிகிறது. 

மேலும் வாசுதேவநல்லூர் எனும் புகழ்பெற்ற பூலித்தேவர் கோட்டை அமைந்திருந்த ஊரானது "ஸ்ரீவாஸூதேவநல்லூர்" என்றும், மணலூரானது, அன்றும் மணலூர் என்றும், பெரும்பத்தூரானது "பெரும்புத்தூர்" என்றும் வழங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது. 

இந்த சாசனத்தில் தற்போது பெருங்கோட்டூர் என வழங்கப்பெறும் ஊரானது, "கொட்டூர்நாடு" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ..

"கொட்டுர்னாட்டு இராச உத்தம நல்லூர்" என்று வழங்கப்படுகிறது. 

இதில் "ஆரியநாடு மல்லயம்பட்டு சயங்கொண்டையான் திருவீதி"- எனும் வாசகமானது இன்றைய ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள  மல்லி எனும் ஊரைக் குறிப்பிடுகிறது. சயங்கொண்டையான் என்பது இங்கு மறவரின் கிளைப்பெயராக அறியப்படுவதாகும் இது ஒரு வீதியின் பெயராக சாசனத்தில்  விளங்குகிறது .

•தேவன்-தேவனார்-தேவநந்தனார்•

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இக் கோயில் கல்வெட்டுகள் இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளபடி,கோச்சடில வர்மனான திரிபுவனச் சக்கரவர்த்தி  குலசேகரத்தேவர் காலமான கி.பி.1402லிருந்து துவங்கி, கி.பி.1652ல் கரிவலம்வந்தநல்லூரின் இறுதி பாண்டியராகக் கருதப்படும் "சீவல மாறவர் குணராமனான பாண்டிய குலசேகர தீட்ஷகர்" காலம் வரையிலும் காணப்படுகின்றன. இவற்றில் பாண்டியர்கள் தங்களது பட்டமான "தேவர்" எனும் பெயரில் தொடர்ச்சியாக 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி 17ம் நூற்றாண்டின் இறுதிவரை இக் கோயிற் சாசனங்களின் வழி அறியப்படுகின்றனர். 

கி.பி. 1402 ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில், 

"கோச்சடில வன்மரான ஸ்ரீ குலசேகர தேவர்" -என்றும், 

கி.பி.1471ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில்,

"நம் 

குமாரன் [அழகன் பெருமாள்] -

ஸ்ரீ வல்லபதேவன்"- என்றும்,

{தென்காசி பராக்கிரம பாண்டியன் மகனாக இருக்கலாம்} காணப்படுகிறது. 

மேலும்,..

கி பி.1544 ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில்,

ஸ்வஸ்திஸ்ரீ 

கோஜடில வன்மரான திரிபுவன-

சக்கரவர்த்தி கோநேரிமை

 கொண்டான் இறந்தகாலம் எடுத்த- பெருமாள் ஸ்ரீ

வல்லபதேவர்க்கு" எனத்தொடங்கி,

"அபிராம பராக்ரம பா[ண்டிய]தேவநந்தநாராந திருநெல்வேலிப் பெருமாளாய நாம்" -எனத் தொடர்ந்து , தேவர் எனவும், தேவநந்தனார் எனவும் பாண்டியன் பட்டம் பயின்று வந்துள்ளது.  இதே கல்வெட்டில்,

"பொன்னன் விகிரமபாண்டிய கொன்"-

"சடையக் கொன்"- அழகன் பெரியான் நல்லான் கொன்" என இடையர்கள் கோன் எனும் சொல்லால் குறிக்கவும் பெறுகின்றனர்.  

பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலின் முதல் பிரகாரத்தின் வடக்குச்சுவரிலுள்ள,

கி.பி.1547 ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில் நாம் சமீபத்தில் வெளியிட்ட சின்னனேந்திர பாண்டியன் செப்பேட்டில் காணப்பெறும் சில வரிகள் அச்சு அசலாக அப்படியே இந்த கோயிலின் சில கல்வெட்டுகளில் படிக்கப்பெறுகின்றன, பெருமாள் பராக்கிரம பாண்டியனின் சாசனமாகக் கருதப்படும் இக்கல்வெட்டு , கீழ்கண்டவாறு பாண்டியன் விருதாவளிகளைப் பயின்று வருகிறது,

"ஸ்ரீ புவனேகவீர சந்த்ரகுலப் பிரதீப ஜெயந்த மங்கலப் புரவராதீஸ்வர க்ஷோமஸூர நாரஸிம்ஹ கேரள தாமோதிவாகர போஜ சுந்ர வட்டவாநல்ல ஸாஹிதம் ஸார்வ பௌம தேவ" -என அவை வருகின்றன. 

இதே ஆண்டிற்குரியதாக அறியப்படும் மற்றொரு  கல்வெட்டில்,

"நம் குமாரன் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவருக்கு" -என்றும்,

"வடமுட்ட நாட்டு அள்ளி குன்ற மா[ர்]த்தானூருடையான் பெருந்தெருவில் 

ஆண்டு கொண்ட நயினான் கடையோக காத்தானுக்கு திருவிலாஞ்சினையும் [கருவெலமும்] காணியாட்சியாகக்  கொ[ண்]டுக் கற்பித்து நம் குமாரன் 

ஸ்வஸ்திஸ்ரீ புவனேகவீர சந்த்ரகுல ப்ரதிவி மதுராமஹேந்த்ர ஜெயந்த மங்கள புரவராதீஸ்வர க்ஷோமஸூர நாராஸிம்ஹ கேரளமோதிவாகர ஸாஹிதம் ஸார்வ பௌம தெய்வப் பிராஹ்மண ஸாபநாசாரிய -

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியதேவ னந்தன் கோஜட்டில்ல வன்மநரான திரிபுவனச் சக்கரவர்த்தி கோ[னேரின்மை கொ]ண்டான்" -என  பாண்டியன் விருதாவளிகளைக்கூறி அவனைத் "தேவநந்தன்" என்கிறது. 

மேலும்,

"ஆண்டு கொண்ட நயினான் கடையோக காத்தான்"  என்று வரும் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள் பற்றியும் இதில் அறிய முடிகிறது.  இவர்களின் நாட்டுப்பகுதி "வடமுட்ட நாட்டு அள்ளி குன்றம்" என வழங்கப்பட்டுள்ளதையும் நம்மால் அறியமுடிகிறது.  

கி.பி.1550 ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில், 

"ஸ்ரீபெருமாள் குலசேகரத்தேவர்"- என்றும்,

கி.பி.1553வது ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில்,

"ஸ்ரீபெருமாள் தன்மப் பெருமாள் குலசேகர தேவர்"- என்றும், பாண்டியன் வழங்கப்பெறுகிறான்.  மேலும் இந்த சாசனத்தில், ..

"குலசேகர மழவராயன்" மற்றும்,

"வாணன் அடைக்கலங்காத்தான்" என இருவர் வருகின்றனர்.  இவர்களும் மறவர் குலத்தவரே என்பதும் உறுதியாகும்.  ஏனெனில் இதே பகுதியில் இன்றும் அம்பாசமுத்திரம் பகுதியில் மழவராயர் என்றும், சங்கரன்கோயில் பகுதியில் வாணாதிராயத்தேவர் என்றும் மறவர்கள் பட்டங்கள் கொண்டு விளங்கிவருகின்றனர். 

கி.பி.1558 மற்றும் 1588,-1595 ம்ஆண்டிற்குரியதான அபிராம வரதுங்கராம வீரபாண்டியத்தேவர் காலத்திலானதென அறியப்படும் கல்வெட்டுகளில், 

நாம் மேற்சொன்ன பாண்டியர் விருத்தாவளிகளுடன்..

 "அபிராம வரதுங்க வீரபாண்டிய 'தேவநாராந' ஸ்ரீபெருமாள் தன்மப் பெருமாள் குலசேகர தேவர்" - என்று பயின்று வருவதைக் காணமுடிகிறது.  மேலும், மறவரில் கண்டித்தேவர் வகையறாக்களைப் பற்றி தென்காசி வட்டாரத்தில் அறிந்து கொண்டுள்ளோம். இந்த சாசனத்தில் குறிக்கப்பெறும் இரவிமாக்குட்டி கண்டி தேவன் அவர்களைச் சேர்ந்தவனாக இருக்கலாம். 

கி.பி.1652ம் ஆண்டிற்குரியதான 17ம் நூற்றாண்டின் காலமாக அறியப்படும் கல்வெட்டில் ,.. 

"சிவல மாறவர் குணராமனான பாண்டிய குலசேகர தீட்ஷகர்" என இதுவரையில் அறியப்பட்ட இறுதிப் பாண்டியன் குறிப்பிடப்படுகிறான்.  இக்கல்வெட்டில் உள்ள மற்றொரு செய்தி, இதில் "வரராம விக்கிறமபாண்டியமூர்த்தி சேர்வைக்காறன்" என்பான் குறிப்பிடப்படுகிறான். இந்த வட்டாரத்தில் சேர்வைக்காரர் என வழங்கியோர் மறவர்களாகவே உள்ளனர். 

பாண்டியன் தனது பட்டமாக இந்த சாசனங்களில்  தொடர்ச்சியாக தேவர்- தேவனார்- தேவனந்தனார் - என,15ம் நூற்றாண்டின்  ஆரம்பத்திலிருந்து 17ம் நூற்றாண்டின் இறுதிவரை  வழங்கி வந்தமையைக் காணும்பொழுது அவனை தேவர் சமூகமாகிய மறவரினத்தவன் என்பதையே இங்கு நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும் திரு.நடன.காசிநாதன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்ற அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர் கதை ஓலை ஆவணத்திலும் பாண்டியனை "கொண்டம கோட்டற் குலம் " என மறவரின் கொண்டையன் கோட்டை  பிரிவைச் சேர்ந்தவனாகத் தெரிவிக்கிறது.  

{ https://m.facebook.com/story.php?story_fbid=2374155959467026&id=100006179355297}

தென்காசி மேலகரத்தில் கண்டறியப்பட்டு திரு. சந்திரவாணன் அவர்களால் படிக்கப்பெற்ற சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு நகலும்

{ https://m.facebook.com/story.php?story_fbid=2295330060682950&id=100006179355297 }

 பாண்டியனை வடகரைப் பாளையக்காரர் உறவினனாகவும்  மறவர்குலத்தவனாகவும் கூறிச் செல்கிறது. 

திருக்குற்றாலநாதர் சன்னதியில் வடகரைப் பாளையக்காரர் பாண்டியருக்கேயுரிய முத்துப்பூணூல் பூண்ட கோலத்தில் சிலையாக இருக்கின்ற காட்சியைக் காணுங்கால் அவர்கள் பாண்டியக் கூட்டத்தவரே என்பதை எளிதாக எவரும் உணரலாம். 

நன்றி!

அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன்





















சனி, 14 ஆகஸ்ட், 2021

காஞ்சி மகாப் பெரியவரின் காசி பாதயாத்திரை, இராமேசுவரத்தில் கங்கா அபிஷேகம்,

தண்டவாளத்தில் நடந்த தண்டபாணி

முகநூலில் நண்பர் Anbudan Balaji  · 14.08.2021 காலை மணி 10.00

அவர்களின் பதிவு இது.

தண்டவாளத்தில் நடந்த தண்டபாணி

நன்றி மறவாமை மஹாபெரியவாளின் சிறப்பு

காசி யாத்திரை செல்ல வேண்டிய சம்பிரதாயங்களைச் செய்து முடித்துவிட்டு,1918 மார்ச் மாதம் ,முறையான யாத்திரையைத் தொடங்கினார்கள் பெரியவா.

இருப்பத்தோரு ஆண்டுகள் புனிதப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திவிட்டு 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரும்பினார்கள் ஸ்வாமிகள்.

காசியிலிருந்து கொண்டுவந்த கங்கா தீர்த்தத்தால் ராமேஸ்வரம் ராம நாதஸ்வாமியை அபிஷேகம் செய்து வைத்தால்தான் அந்த யாத்திரை நிறைவேறும்.

மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் அடைய பாம்பன் கால்வாயை கடக்க வேண்டும். அப்போது பாம்பன் மேல் செல்ல பேருந்து பாலம்கிடையாது. ரயில்வே பாலம் வழியாக நடந்து செல்ல உரிய உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். குப்புஸ்வாமி என்பவரை தென்னிந்திய ரயில்வே தலைமை ஸ்தானமாக விளங்கிய திருச்சிக்கு அனுப்பினார்கள்.

இம்பீரியல் வங்கி அதிகாரி நாராயணஸ்வாமியும் ரயில்வே ஏஜண்டைச் சந்தித்து மடத்தின் சார்பில் ஓர் விண்ணப்பம் கொடுத்தார். இவர் பெரியவாளிடம் அபார பக்தி பூண்டவர். பூஜைப் பெட்டிகளை எடுத்துச் செல்ல தனி ட்ராலி தேவை, பாம்பன் ரயில் பாலத்தின் மீது நடந்து செல்ல அனுமதி

தேவை.....இவைதான் மனுவில் இடம் பெற்றிருந்தன.

இரண்டு தினம் சென்று ரயில்வே அதிகாரியிடமிருந்து பதில் வந்தது.

ஒரு நாற்காலி சுத்தம் செய்யப்பட்டு நான்கு சீடர்களுடன் பூஜைப் பெட்டி பயணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாகவும், ஸ்வாமிகளும் பத்து சீடர்களும் ரயில்வே பாலத்தின் வழியாக நடந்து செல்ல வசதியாக பலகைகள் பொருத்தித் தரப்படும்என்றும் அதில் கண்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் காலை ஒன்பது மணிக்கு மண்டபம் ரயில் நிலையம் வந்து , பத்தரை மணிக்குள் கடந்து சென்றுவிட வேண்டுமென அதில் கண்டிருந்தது.

திட்டமிட்டபடி அக்கரை சேர்ந்த ஸ்வாமிகளுக்கும் சீடர்களுக்கும் ஓர் அதிசயம்!

தலைமை போக்குவரத்து அதிகாரியான ஆங்கிலேயர் பழத் தட்டுடன் ஸ்வாமிகளை வரவேற்று சமர்ப்பித்தார்.

''எல்லாம் சௌகர்யமாகவும் சரியாகவும் நடந்ததா'' என ஆங்கிலத்தில் வினவினார்! அவருக்கு நன்றி சொல்லும்படி குப்புஸ்வாமி ஐயரைப் பணித்தார்கள்.

இப்படி சங்கல்பித்தப் புனிதப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியதும், ஸ்வாமிகள் குப்புஸ்வாமி அவர்களிடம் இரண்டு பட்டுத்துணிகளும், பழ வகைகளும் கொடுத்து, ''இந்தப் ப்ரசாதங்களை மண்டபம் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் திருச்சி அதிகாரிக்கும் கொடுத்துவிட்டுவா'' என்றார்கள்.

நன்றி மறவாமை என்பது பெரியவாளின் ஓர் அங்கம்!

பெரியவாளைப் பற்றி பேசுவதற்கு கூட அவரோட அனுக்ரஹம் இருக்க வேண்டும்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

காலடி சங்கர காஞ்சி சங்கர 

காமாஷி சங்கர காமகோடி சங்கர

சதாசிவ சங்கர சந்திரசேகர சங்கர

மதுரகாளிதாசன்

சனி, 7 ஆகஸ்ட், 2021

காசியில் சாட்சி கணபதி

சாட்சி கணபதி



Elangovan Ks  அவர்களின் முகநூல் பதிவு இது. 7 ஆகஸ்ட், 2020  · 

காசியில் பிரதானமாக  56 விநாயகர் கோயில் உள்ளது. காசிக்கு செல்பவர்கள் இந்த விநாயகரை அவசியம் தரிசிப்பார்கள். ஏனெனில் இந்த சாக்ஷி கணபதி கோயில் விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. நாளை சித்ரகுப்தன்   புண்ணிய கணக்கு போடுகையில்  நம்மை ஆம் இவர் சுவாமியை தரிசனம் செய்ய காசிக்கு வந்தார் என்று சாக்ஷி சொல்வாரம் ஆதலால் இவருக்கு சாக்ஷி கணபதி  என்று சொல் வழக்கு... நன்றி சந்திரசேகர் ஸ்வாமி,காசி ...

வியாழன், 8 ஜூலை, 2021

రామేశ్వరం కాశీ, పాదచారులు, వలయపట్టి, సిద్ధార్, కాశీ శ్రీ, పచై కవడి, యాత్ర, యాత్రాసంబంధం



వలయపట్టి సిద్ధర్, కాశీశ్రీ, పచ్చక్కవడి అయ్య 11 వ వార్షిక రామేశ్వరం కాశీ పాథాత్రి - 110 రోజులు - 7 రాష్ట్రాలు - 2464 కి.మీ ప్రయాణం.

ఈ రోజు 45 వ రోజు - 09.07.2014 బుధవారం.

రామేశ్వరానికి చెందిన అరుల్మిగు రామనాథస్వామిని ఆరాధించిన తరువాత 26.05.2014 న పచైకావది 20 మంది భక్తులతో తన కాశీ-పాథయాత్రిని ప్రారంభించారు.

నిన్న పాదచారులు ఆంధ్రప్రదేశ్ లోని పమిడి బందూరాగన్ విట్టలార్ ఆలయానికి చేరుకుని బస చేశారు.

నిన్న పండుగ రెండవ రోజు.

ఈ రోజు పండుగ మూడవ రోజు.

మేము ఈ రోజు కూడా ఆలయ వివాహ హాలులో ఉంటున్నాము.

పూర్తి విశ్రాంతి.


మేము ఆలయంలో పూజలు చేశాము.

రివర్సల్స్ జరుగుతున్నాయి.

తిరుమాల్ యొక్క పది అవతారాలు ఆలయ రాజగోపురం ప్రవేశద్వారం వద్ద చెక్కబడ్డాయి. వేదిక పైభాగంలో అనంతసయనప్ పెరుమాల్ యొక్క చిన్న శిల్పం ఉంది.

ద్వార బాలగర్, అంజనేయార్, గరుడ మొదలైన దేవతలు కూడా అద్భుతంగా వాస్తవికంగా ఉన్నారు.

ఆలయం లోపల పాము ఆరాధన యొక్క శిల్పాలు ఉన్నాయి.

కలియపెరుమల్ అలియాస్ కాసిశ్రీ తోప్పై, కాసిశ్రీ షణ్ముగవేలు కలిసి చిత్రాన్ని తీశారు.


తిరు కాసిశ్రీ శివప్ప తప్ప మిగతా వారందరూ భోజనానికి హాజరయ్యారు. తిరు శివప్ప జ్వరంతో బాధపడ్డాడు. అతను కూడా ఒక దుప్పటి చుట్టి నిద్రపోయాడు. ఇతర ప్రయాణికులను తినడానికి పిలిచినప్పుడు, మీ ముఖాన్ని కప్పే దుప్పటి తీయండి, మీరు వెళ్లి తినండి. అతను నన్ను తినవద్దని చెప్పి పడుకున్నాడు. తిరు శివప్ప తప్ప, మేమంతా భోజనం ముగించి కాసేపు మాట్లాడాము. అప్పుడు నేను శివప్ప దగ్గరకు వెళ్లి తీర్థయాత్రల సమయంలో ఆకలితో ఉండవద్దని చెప్పి, అతని చేతిని తీసుకొని ఎత్తాను. అతని శరీరం అగ్నితో ఉడకబెట్టింది. అధిక జ్వరం. వెంటనే కురుసామి పచ్చక్కవాడి వారికి సమాచారం ఇవ్వడంతో మేము వారికి జ్వరం మాత్ర ఇచ్చి తినమని చెప్పాము. అతను మాత్ర తిని ప్యాక్ చేసి తిరిగి మంచానికి వెళ్ళాడు.

సాయంత్రం బ్రెడ్ టీ.

ఎర్ర జ్వరం తగ్గలేదు.

కాశిశ్రీ ధనశేఖరన్ తెలుగులో శివప్పతో మాట్లాడారు. డాక్టర్ దగ్గరకు వెళ్లి చూపించడం మంచిది అనిపించింది. ధనశేఖరన్ శివపాన్ని చికిత్స కోసం సమీపంలోని వైద్యుడి వద్దకు తీసుకువెళ్ళాడని కురుసామి వారికి చెప్పారు.

విందు. ఎరుపు కొద్దిగా తిన్నది.

ఈ రోజు రాత్రి బజ్నాలో జరిగిన పండుగ మూడవ రోజు కొంతమంది యాత్రికులు హాజరయ్యారు.

విశ్రాంతి.

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/09072014-45-25.html

కురుసామి కాసిశ్రీ పచ్చక్కవతి వారి గురువు మరియు అరుల్మిగు కాశివిసువనాథర్ తిరువారూల్ మనందరికీ.

ప్రియమైన

కాశ్రీ, పిహెచ్‌డి, ఎన్.ఆర్.కె. காளைராசன்

रामेश्वरम काशी, पैदल यात्री, वलयापट्टी, सिद्धर, काशी श्री, पचाई कावड़ी, यात्रा, यात्रा वृतांत,



 वलयापट्टी सिद्धर, कसीश्री, पचैककवाड़ी अय्या की 11वीं वार्षिक रामेश्वरम काशी पथयात्री - 110 दिन - 7 राज्य - 2464 किमी यात्रा।

आज 45वां दिन है- 09.07.2014 बुधवार।

रामेश्वरम के अरुल्मिगु रामनाथस्वामी की पूजा करने के बाद २६.०५.२०१४ को पचैकवाड़ी ने २० भक्तों के साथ अपनी काशी-पथयात्री शुरू की।

कल पैदल यात्री आंध्र प्रदेश के पामिडी बंदुरगन विट्टलर मंदिर पहुंचे थे और रुके थे।

कल उत्सव का दूसरा दिन था।

आज पर्व का तीसरा दिन है।

हम आज भी मंदिर के वेडिंग हॉल में ठहरे हुए थे।

पूर्ण विश्राम।


हमने मंदिर में पूजा की।

उलटफेर चल रहे थे।

थिरुमल के दस अवतारों को मंदिर के राजगोपुरम के प्रवेश द्वार पर उकेरा गया था। मंच के शीर्ष पर अनंतशयनप पेरुमल की एक छोटी मूर्ति थी।

द्वारा बालागर, अंजनेयर, गरुड़ आदि के देवता भी आश्चर्यजनक रूप से यथार्थवादी थे।

मंदिर के अंदर नाग पूजा की मूर्तियां थीं।

कालियापेरुमल उर्फ ​​कसीश्री थोप्पई और कसीश्री शनमुगावेलु ने एक साथ तस्वीर ली।


थिरु कसीश्री सिवप्पा को छोड़कर, अन्य सभी दोपहर के भोजन के लिए आए थे। थिरु सिवप्पा बुखार से पीड़ित थे। वह भी कंबल में लिपटा हुआ था और सो रहा था। जब अन्य यात्रियों को खाने के लिए बुलाया जाता है, तो अपने चेहरे को ढकने वाले कंबल को हटा दें, और तुम जाओ और खाओ। उसने मुझे खाने के लिए नहीं कहा और लेट गया। थिरु सिवप्पा को छोड़कर, हम सभी ने दोपहर का भोजन किया और कुछ देर बात की। फिर मैं शिवप्पा के पास गया और उसे तीर्थयात्रा के दौरान भूखा न रहने के लिए कहा, और उसका हाथ पकड़ कर उठा लिया। उसका शरीर आग से उबल रहा था। अत्यधिक बुखार। तुरंत कुरुसामी पचैक्कवडी ने उन्हें सूचित किया और हमने उन्हें बुखार की गोली दी और उन्हें खाने के लिए कहा। उसने गोली खा ली और पैकअप करके वापस बिस्तर पर चला गया।

शाम को रोटी की चाय।

लाल बुखार कम नहीं हुआ।

कसीश्री धनसेकरन ने सिवप्पा से तेलुगु में बात की। डॉक्टर के पास जाना और दिखाना बेहतर लगा। कुरुसामी ने उन्हें बताया कि धनसेकरन शिवपा को इलाज के लिए पास के डॉक्टर के पास ले गए थे।

रात का खाना। लाल ने थोड़ा खाया।

कुछ तीर्थयात्री आज रात बाजना में उत्सव के तीसरे दिन शामिल हुए।

आराम।

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/09072014-45-25.html

कुरुसामी कासिश्री पचैकावती हम सभी के लिए उनके गुरु और अरुल्मिगु कासिविसुवनथर थिरुवरुल बनें।

प्रिय

कसीश्री, पीएच.डी., एन.आर.के. ்

Valayapatti Siddhar, Kasisree, Pachaikkavadi Aiya's 11th Annual Rameswaram Kasi Pathayathri - Travel.



Valayapatti Siddhar, Kasisree, Pachaikkavadi Aiya's 11th Annual Rameswaram Kasi Pathayathri - 110 Days - 7 States - 2464 km Travel.

Today is the 45th day - 09.07.2014 Wednesday.

After worshiping Arulmigu Ramanathaswamy of Rameswaram On 26.05.2014, Pachaikavadi started his Kasi-Pathayathri with 20 devotees.  

yesterday the pedestrians had arrived the Pamidi Banduragan Vittalar Temple in Andhra Pradesh and stayed.

Yesterday was the second day of the festival.

Today is the third day of the festival.

We were still staying in the temple wedding hall today.

Full rest.

We worshiped at the temple.

Reversals were underway.

The ten incarnations of Thirumal were carved at the entrance of the Rajagopuram of the temple. At the top of the stage was a small sculpture of Ananthasayanap Perumal.

The deities of Dwara Balagar, Anjaneyar, Garuda etc. were also wonderfully realistic.

Inside the temple were sculptures of serpent worship.

Kaliyaperumal alias Kasisree Thoppai and Kasisree Shanmugavelu took the picture together.

Except Thiru Kasisree Sivappa, all others were turned up for lunch. Thiru Sivappa was suffering from fever. he was also well wrapped in a blanket and asleep. When the other travelers are called to eat, take off the blanket that covers your face, and you go and eat. He told me not to eat and laied down. Except for Thiru Sivappa, we all finished lunch and talked for a while. Then I went near Sivappa and told him not to starve during the pilgrimage, and took his hand and lifted it. His body boiled with fire. Excessive fever. Immediately Kurusami Pachaikkavadi informed them and we gave them the fever pill and told them to eat. He ate the pill and packed up and went back to bed.

Bread and tea in the evening.

Kasisree Dhanasekaran spoke to Sivappa in Telugu. It seemed better to go to the doctor and show up. Kurusami told them that Dhanasekaran had taken Sivapa to a nearby doctor for treatment.

dinner. Thiru Sivappa ate a little.

Some of the pilgrims attended the third day of the festival tonight in Bajna.

Rest.

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/09072014-45-25.html

Kurusami Kasisree Pachaikkavati Be their Guru and Arulmigu Kasivisuvanathar Thiruvarul to all of us.

Dear

Kasisree, Ph.D., N.R.K. காளைராசன்