புதன், 16 அக்டோபர், 2019

08.10.2014 இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு


குருவருளாலும் திருவருளாலும் இராமேசுவரம் - காசி முதலாம் பாதயாத்திரை முடிந்தது.
குருசாமி பச்சைக்காவடி அவருடன் அழைத்துச் சென்ற பாதயாத்திரிகர்கள் நாங்கள் எல்லோரும் இராமேசுவரம் - காசி யாத்திரை நிறைவடைந்தவுடன், காசியிலிருந்து இராமேசுவரத்திற்குத் தொடரியில் பயணம் செய்து, இராமேசுவரத்தில் வழிபாடு செய்து வணங்கிக் கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று சேர்ந்து குலதெய்வங்களை வணங்கிக் கொண்டோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை முடிவடைந்தவுடன், அன்னதான வண்டியில் (Tata 407)  காசியிலிருந்து இராமேசுவரத்திற்குத் திரும்பினார்.  அப்போது என்னையையும் கோட்டையூரிலிருந்து இராமேசுவரத்திற்கு அழைத்துச் சென்றார்.  இராமேசுவரத்தில் வழிபாடு செய்த பின்னர், திரும்பும் வழியில் 08.10.2014 அன்று, கோட்டையூரில் உள்ள எங்களது வீட்டிற்கு வந்து என்னை இறக்கிவிட்டுவிட்டு, தங்கிச் சென்றார்.

கோட்டையூரிலிருந்து பொன்னமராவதி வலையபட்டிக்குச் செல்லும் போது எடுத்த படம் இது.

(படத்தில் குருசாமி பச்சைக்காவடி, அடியேன், இரண்டாவது பேரன் சர்வேசுவரன், எனது மனைவி நாகலெட்சுமி)

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்