வெள்ளி, 31 ஜூலை, 2020

01.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 55 ஆவது நாள், ஆடி 16

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  
சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு 
நேற்று திண்டிவனம் வந்து தங்கி இருந்தோம்.


இன்று 55 ஆவது நாள், ஆடி 16 ( 01.08.2017) வெள்ளிக் கிழமை.
இன்று அதிகாலை 2.03 மணிக்கு எழுந்து   வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
யாத்திரை தொடங்கியது.
குளிர்காற்று சுகமாக வீசியது.
தெள்ளாற்றை நோக்கி நடந்தோம்.

“இந்த யாத்திரையை நான் நடத்தவில்லை, பிள்ளையார் நடத்துகிறார்” என்று குருசாமி பச்சைக்காவடி அவர்கள் எப்போதும் கூறிவருகிறார்.
இன்று காலையில் முதன்முதலில் அரசமரத்துப் பிள்ளையாரின் திருக்காட்சி கிடைத்தது.  பிள்ளையாரை வணங்கிக்கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.





வழியில் ரொட்டியும் தேநீரும்



அருள்மிகு ஸ்ரீ மகாதிரிபுர சுந்தரி சமேத ஸ்ரீ திரிபுரசுந்தரர் திருக்கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.





காலை 8.23 மணிக்கு ஸ்ரீ கஸ்தூரி திருமண மண்டபத்தை அடைந்து தங்கினோம்.

9.00 மணிக்கு காலை உணவு.
ஓய்வு.






யாத்திரிகர்கள் தங்கியிருந்த மண்டபத்திற்கு அருகே, அருள்மிகு திருமூலட்டானேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.  நாங்கள் மூவர் மட்டும்  11.00 மணியளவில் கோயிலுக்குச் சென்றோம்.  ஆனால் கோயில் நடை சாத்தி யிருந்தது.  மிகவும் பழையான தெய்வ வடிவங்கள் கோயில் வளாகத்தில் இருந்தன.  அந்தத் தெய்வ வடிவங்களை வணங்கிக் கொண்டு திரும்பி வந்து விட்டோம்.

மதிய உணவு.
ஓய்வு.




மாலை 5.00 மணி க்கு கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தோம்.  கல்வெட்டுகள் நிறைந்து காணப்பட்டன..







“மேல்மா கூட்டுரோடு” அருகே கோயில் கட்டியுள்ள காசிஸ்ரீ ஜானகிராமன் அவர்கள் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றார்.  நாளைய தினம் யாத்திரிகர்கள் மேல்மாகூட்டுரோடில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தகவல் சொல்லி, அனைவரையும் அன்புடன் அழைத்தார்.



https://goo.gl/maps/NS6cNJAbMvZca4Gf8
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 30 ஜூலை, 2020

01.08.2014 காசி பாதயாத்திரை - 68ஆம் நாள், ஆடி 16

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.   இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று டிச்பள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.


இன்று 68ஆம் நாள் - ஆடி 16 (01.08.2014) வெள்ளிக் கிழமை. 
அதிகாலை 2.50 மணிக்கு யாத்திரைக்குத் தயார் ஆனோம்.   வழக்கம்போல் காலை வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு டிச்பள்ளி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.

3.28 am

5.51 am

5.57 am
விடியும்போது கண்ணிற்குக் காட்சியளித்த கோபுரத்தையும் நந்தியையும் கண்டு வணக்கிக் கொண்டு நடையைத் தொடர்ந்தோம்.
6.20 am

6.22 am

6.43 am
வழியில் சாலையோரம் அமர்ந்து, வழக்கம்போல காலை6.30க்கு ரொட்டி தேநீர்.  
6.44 am

6.45 am

6.58 am

6.59 am

7.03 am

7.11 am
இத்தனை நாட்கள் இருந்து வந்த இதமான மேகமூட்டமான குளிர்ந்த பருவநிலை மாறி விட்டது.
காலை 7.30 முதல் கடுமையான வெயில் 
7.35 am

7.50 am
7.53 am
வழியில் சாலையோரம் ஒரு ஐயப்பன் கோயிலைக் கண்டோம்.  18 படி ஏறிச் சென்று ஸ்ரீ ஐயப்பனைக் கும்பிடுவது போன்று கோயிலை அமைத்துள்ளனர்.  அனைவரும் விருப்பிப் படம் எடுத்துக் கொண்டனர்.

7.54 am

8.02 am

8.03 am

8.13 am
அன்னதான வண்டி வந்து விட்டது. 

8.13 am

8.13 am
சாலையோரம் உள்ள பெட்ரோல்பங்கில் அமர்ந்து,
காலை 8.15 மணிக்குக்  காலைஉணவு.

8.32 am


8.52 am

9.38 am

9.38 am
9.39 am

10.17 am

10.50 am


11.04 am
சாலையோரம் இருந்த தமிழில் பெயர்ப்பலகையை வியந்து பார்த்து மகிழ்ந்து போனோம்.

11.18 am

11.19 am

11.22 am

11.23 am
நான்குவழிச் சாலை அமைக்கப்பட்ட  காரணத்தினால்,  அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் அதிகதூரம் சுற்றி வரவேண்டியுள்ளது.  இவ்வாறு அருகில் உள்ள இடத்திற்கு அதிகதூரம் சுற்றிவருவதைத் தவிர்த்து 
ஒருவழிச்சாலையில் எதிர்புறம் தவறாக வாகனம் ஓட்டி வருகின்றனர். 
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2018/03/blog-post_9.html

11.42 am

11.46 am


11.58 am

கிரானைட் மலையாகவும் இல்லாமல்,  மண்மலையாகவும் இல்லாமல்,
பொக்குப்பாறைள் மலை யளவு குவிந்து கிடந்தன. 
மலைக்கு மேலே உள்ளது ? 


12.01 pm

12.02 pm

12.05 pm


பொக்குப்பாறை உருண்டைகள் மலையளவு குவிந்து கிடக்கின்றன.  அந்த மலை மீது இந்தக் கோயில் உள்ளது.  சிறு சிறு பாறைகளுக்கு இடையே ஆட்கள் நுழைந்து சென்று வேறு வழியாக வெளியே வந்து வேடிக்கை காட்டுகின்றனர்.
12.06 pm

12.07 pm
குரங்குகள் தொல்லை அதிகம், உணவுப் பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உள்ளூர்வாசி ஒருவர் வந்து எச்சரித்தார்.  அவர் சொன்னது போன்றே, ஒரு குரங்கு வந்து பொட்டுக்கடலை டப்பாவை தூக்கிச் சென்றுவிட்டது. 
மற்றபிற யாத்திரிகர் அனைவரும் நடந்து வந்த அசதியில் படுத்துவிட்டனர்.  சமையல் முடியும் வரை காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்கள் மட்டும் படுத்து ஓய்வு எடுக்காமல்,  குரங்குகள் வந்து சமையல் சாமான்களைத் தூக்கிச் செல்லாவாறு பார்த்துக் கொண்டார்.  ஒரு குரங்கு மட்டும் ஓடாமல் எதிர்த்து நின்றது.  ஜெய் ஸ்ரீ ராம்.

12.12 pm
கடந்து வருடம் குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்ற மாணவன் ஒருவன் விரைந்தோடி வந்து குருசாமி அவர்களை வணங்கி ஆசி பெற்றான்.
அவனைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் பலரும் வந்து குருசாமி அவர்களிடம் அவர்களது எதிர்காலக் கல்வி பற்றிக் கேட்டறிந்தனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்த மாணவர்களை ஆசிர்வதித்தார்.

12.18 am

12.18 am
அந்த ஊரில் வசித்து வரும் இந்த அன்பர் வந்து யாத்திரிகர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்.  குருசாமியிடம் மிகவும் பயபக்தியாக நடந்து கொண்டார்.

12.15 க்கு தக்காளி சூப் வழங்கப்பட்டது.
1.30 மதிய உணவு.
ஓய்வு.


மதியம் 1.30 மணிக்கு நல்ல மழை.

மாலை நேரத்தில் பலரும் குடும்பத்தினருடன் வந்து குருசாமி அவர்களிடம் அருள்வாக்கு கேட்டுச் சென்றனர்.

தங்கல்.

https://goo.gl/maps/nnViA3jTRdSe15kd6
பயண தூரம் 34 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்