ஞாயிறு, 27 ஜனவரி, 2019

01.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, தெள்ளாறு





தெள்ளாறு கோயிலில் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. மிகவும் பழமையான பிள்ளையாரும், பெருமாள் சிற்பங்களும் உள்ளன.
அறுபடைவீடு பாதயாத்திரை.
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் 20 யாத்திரிகர்களும் 60 நாட்கள் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டிருந்த போது, 01.08.2017 அன்று தெள்ளாறு திருக்கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்கி இளைப்பாறிச் சென்றனர். பாதயாத்திரை செய்த அடியார்கள் பலரும் அன்றையதினம் திருக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து கொண்டனர்.






























சனி, 26 ஜனவரி, 2019

01.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, வலையன்குளம் பெருமாள் கோயில்

வலையன்குளம் பெருமாள் கோயில்


எல்லாச் சமூகத்தாரும் ஒன்றாய் வணங்கும் கோயில்.
திருவிழாவின் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக தினமும் நாடகம் நடத்தி வழிபடும் கோயில்.
கோயில் வளாகத்திற்குள் யாரும் காலணி அணிந்து செல்லக் கூடாது எனக் கிராமத்தினரால் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ள கோயில்.
பெண்கள் கோயில் வாலிலேயே நின்று வழிபடும் கோயில்.

மூலவரோ சுயம்பு.
பெயரோ பெருமாள் கோயில்.
விபூதி பிரசாதம்.
வில்வம் தீர்த்தம்.
தேவியர் இல்லாத மூலவர்.
பரிவார தெய்வங்கள் ஏதும் இல்லாத கோயில்.

ஊரார் ஒன்று சேர்ந்து நடத்தும் அன்னதானம்.
உயிர்பலி இல்லாத வழிபாடு.

மதுரை விமானநிலையம் அருகில் உள்ளது வலையங்குளம் அருள்மிகு பெருமாள் கோயில்.

சாதியின் பெயரால் சண்டைகளை வளர்க்கும் பகுத்தறிவாளர்களும்,  கடவுளை நம்பும் காட்டுமிராண்டிகளும் அவசியம் வழிபடவேண்டிய கோயில்.

அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் 01.07.2017 அன்று இங்கே உள்ள சமுதாயக்கூடத்தில் தங்கியிருந்து கோயில்வழிபாடு செய்து கொண்டோம்.

வலையங்குளம் திரு.மாரியப்பன் செட்டியார் அவர்களும், நகைக்கடை வைத்திருக்கும் நகரத்தார் அன்பர் ஒருவரும் அடியார்களை  அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 11 ஜனவரி, 2019

29.05.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, திருத்தணி

அறுபடைவீடு பாதயாத்திரை,
திருத்தணி







திருத்தணியில் நகரத்தார் விடுதி. அனைத்து முக்கியமான வழிபாட்டுத் தலங்களிலும் நகரத்தார் விடுதி அமைத்துள்ளனர். குருநாதர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும், அவருடன் 20 அடியார்களும் சேர்ந்து, அறுபடைவீடு 60 நாட்கள் பாதயாத்திரையாக 29 மே 2016 ஞாயிற்றுக் கிழமை யன்று திருத்தணி சென்று அடைந்தோம். திருத்தணி நகரவிடுதியின் சார்பாக நகரத்தார்கள் யாத்திரிகர்களுக்கு மேளதாளம் வைத்து, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்று நகரவிடுதிக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் நகரவிடுதியில் இருந்த அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார். 2017 ஆம் ஆண்டு இரண்டாவது வருடமும் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் தலைமையிலான அறுபடை பாதயாத்திரையின் போதும் திருத்தணியில் நகரத்தார் விடுதியின் சார்பாக யாத்திரிகர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூகுள் புவிப்படத்தில் https://goo.gl/maps/mfeXbfPhZWs

வியாழன், 10 ஜனவரி, 2019

28.05.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, அரக்கோணம், குமார ராஜா மஹால்

அரக்கோணம் குமார ராஜா மஹால்








காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவரது 20 பாதயாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டனர்.  பிள்ளையார்பட்டியில் இருந்து  பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை முதலான ஐந்து திருத்தலங்களிலும் வழிபாடு செய்து முடித்தனர்.  சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில் 28.05.2017 இன்று  இந்த மண்டபத்தில் தங்கிச் சென்றனர். 
உள்ளூர் இந்துமுன்னனியினர் பலரும் வந்து யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

27.05.2016 பாரத் வித்யா மெட்ரிக்குளேசன் பள்ளி


அருமையானதொரு பள்ளி.
மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் யோகாசனத்தையும் கற்கின்றனர்.
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவருடன் 20 யாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை செய்து ஐந்து திருத்தலங்களில் வழிபாடு முடித்துக் கொண்டு திருத்தணிகைக்குச் செல்லும் வழியில் 27.05.2016 அன்று இந்தப் பள்ளிக்குச் சென்று தங்கிச் சென்றோம். யாத்திரிகர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பள்ளி நிர்வாகிகளை ஆசிர்வதித்துப் பிரசாதம் வழங்கினார்.

கூகுள் புவிப்படத்தில் https://goo.gl/maps/M7VQk2Y2miM2











புதன், 9 ஜனவரி, 2019

ஆவடி விநாயகர் தேவஸ்தானம், உத்திரமேரூர்

அருள்மிகு ஆவடி விநாயகர் 
உத்திரமேரூர்.







ஆவடி விநாயகர் தேவஸ்தானம், உத்திரமேரூர்

“சொல்லாகி பொருளாகி செயலாகி முடிவாகி
உலகாகி உத்திரத்தே உத்திரமேரூரில் சிலையாகி
வினையாகி வினைதீர்த்த விக்னமூர்த்தியாகி நியாகி
கரியாகி யெம்கலிதீர்ப்பாய் கருணைக் கணேசா”

ஆயிரவா மளிகை
உத்திரமேரூர் பாக்கிட 1ஆவது பிரிவு
07.05.1974

மிகவும் பழைமையான பிள்ளையார்கோயில்.
1974ஆம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

25/05/2016 அன்று வழிபாடு.
உத்தரமேரூர் அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில். மிகவும் தொன்மையான கோயில்.  கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. 
அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களில் வழிபாடு செய்து கொண்டோம். சுவாமிமலையிலிருந்து வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் கடலூர் பாண்டிச்சேரி வழியாகத் திருத்தணிகை செல்லும் வழியில் இன்று உத்தரமேரூர் அருள்மிகு நூக்கலம்மன் கோயிலுக்குச் செல்லும்போது ஊரின் எல்லையில் ஆவடிவ விநாயகரை வணங்கிச் சென்றோம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்