அறுபடைவீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறுபடைவீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜூன், 2020

16.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 9ஆம் நாள், ஆனி 2

அறுபடைவீடு பாதயாத்திரை 
60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று 9ஆம் நாள் - ஆனி 2 (16.06.2017) வெள்ளிக் கிழமை.

குருஜி பச்சைக்காவடி அவர்களது அறுபடைவீடு பாதயாத்திரை குழுவினர் 16.06.2017 இன்று வலையன்குளத்தில் இருந்து புறப்பட்டு கல்குறிச்சி வந்து சேர்ந்தோம் .
காரியாபட்டி ஊர் எல்லையில் தேநீர் .
காரியாபட்டியை அடுத்து வக்கனாங்குண்டு ஊர் எல்லையில் மரத்தடியில் காலை உணவு .



கல்குறிச்சி நாடார் உறவின்முறை கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம் .
ஓய்வு.  ஆளுக்கொரு மின்விசிறியின் கீழ் நன்கு வசதியாகப் படுத்து ஓய்வெடுத்தனர்.  சிலர் அவரவர் துணிகளைத் துவைத்து உலர்த்தி மடித்து எடுத்து வைத்துக் கொண்டனர்.

மதிய உணவு.


மாலைநேரத்தில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டு முடித்தவுடன் யாத்திரிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டனர்.

இரவு உணவு .
ஓய்வு .


மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு வழிபாடு செய்துகொண்டு, ஹார்லிக்ஸ் மற்றும் ரொட்டி சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.


https://goo.gl/maps/VjU8WX6p3B4NA8CD9
இன்றைய பயணம் சுமார் ....24 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 12 ஜூன், 2020

13.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 6ஆம் நாள் , வைகாசி 30

அறுபடைவீடு பாதயாத்திரை  - 6ஆம் நாள் 
வைகாசி 30 (13.06.2017) செவ்வாய்க் கிழமை

இன்று காலை மணி 4:45 க்கு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகே உள்ள நகரத்தார் விடுதியில் இருந்து புறப்பட்டு மணி 7:05 அளவில் திருப்பரங்குன்றம் நகரத்தார் விடுதியை அடைந்தோம்.




நடந்து வரும்போது திப்பரங்குன்றம் மலையையும், இடும்பன் மலையையும் கண்டவுன் வணங்கிக் கொண்டோம்.




தடாதகை, தடாதகைப் பிராட்டியார்

அதன்பின் திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று உச்சிகால வழிபாடு செய்து கொண்டோம்.   வடக்குப் பார்த்த குடவரைக்கோயிலில் மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.  1) நேர்கிழக்கே உள்ள பெருமாளைப் பார்த்தபடி சிவலிங்கம். 2) மேற்கேயுள்ள சிவலிங்கத்தைப் பார்த்தபடி பெருமாள்.
சிவலிங்கத்திற்கும் பெருமாளுக்கும் இடையே வடக்குப் பார்த்தபடி 3) நாரதர் தேவசேனையுடன் முருகன் 4) துர்க்கை 5) பிள்ளையார்.   அதாவது கோயிலின் வெளியே நின்று கும்பிட்டால் நேர் எதிரே துர்க்கை இருக்கும்.   துர்க்கை நடுவில் இருக்க, துர்க்கைக்கு வலதுபுறம் முருகனும் பெருமாளும் உள்ளனர்.  துர்க்கையின் இடதுபுறம் பிள்ளையாரும் சத்தியகிரீஸ்வரரும் (சிவலிங்கமும்) உள்ளனர். 

மதுரையில் உள்ள நகரத்தார் சிலரும், திருப்பரங்குன்றம் அருகில் வசிக்கும் நகரத்தார் சிலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

அறுபடைவீடு பாதயாத்திரை

https://goo.gl/maps/aE1kANeLFGKUxrFD8
இன்றைய பயணம் சுமார் 8 கி.மீ.

காலை உணவு.

மண்டபம் நன்கு காற்றோட்டமாக இருந்தது.  தண்ணீர் வசதியும் நன்றாக இருந்தது.   யாத்திரிகர் பலரும் அவரவர் ஆடைகளைத் துவைத்து உலர்த்தி மடித்து வைத்துக் கொண்டனர்.  

மண்டபத்தின் உள்ளே சமையக்கட்டை யடுத்தாற்போல் மரகதவிநாயகர் கோயில் உள்ளது.  யாத்திரிகர் அனைவரும் மரகதவிநாயகரை வணங்கி வழிபட்டனர்.

மதிய உணவு.
ஓய்வு.
மாலைநேர வழிபாடு, ரொட்டியும் தேநீரும்.
இரவு உணவு.
ஓய்வு.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,

அன்பன் 
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 5 மே, 2020

05.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை வேடசந்தூர்

 05.05.2016  
அறுபடைவீடு பாதயாத்திரை 
வேடசந்தூர்



Kalairajan Krishnan
5 மே, 2016, பிற்பகல் 2:39 · Vedasandur, தமிழ்நாடு ·

12 ஆண்டுகள் இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்ற காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அறுபடகவீடு பாதயாத்திரை. பழனியில் வழிபாடு முடித்து சுவாமிமலை செல்லும் வழியில் 05.05.2016 காலை மணி 8.30 க்கு வேடசந்தூர் ஐயனார் சந்நிதியில்.

15.05.2016 திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கன்

திருவாலங்காட்டில் 
மூன்றாம் குலோத்துங்கன்


Kalairajan Krishnan
5 மே, 2017, முற்பகல் 10:53 ·
Karaikkudi, தமிழ்நாடு ·

திருவாலங்காட்டில் மூன்றாம் குலேத்துங்கன் (காலம் கி.பி. 1178-1218)
கும்பகோணம் அருகே திருபுவனத்திலிருந்து கிழக்கே நான்கு கல் தொலைவிலுள்ள ஓர் ஊர் திருவாலங்காடு ஆகும். இத்திருவாலங்காட்டில் உள்ள சிவாலயம் குலோத்துங்கன் காலத்தில் ஏற்றம் பெற்று திகழ்ந்ததாகும். இது இம்மன்னனால் பல திருப்பணிகள் செய்யப்பட்டு சிறப்படைந்தது. ஸ்ரீ வடவாராண்யேசுவரர் எனும் இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத் திருக்கோயினுள் இடம் பெற்றுள்ள குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக மதிக்கப்படுவதாகும்.

திருவாலங்காட்டுப் படிமத்தில் மாமன்னன் தன் கூப்பிய கரங்களால், மார்பில் வீரவாள் ஒன்றினை அனைத்துள்ளான். எழில்மிகு இச்சிலைக்கு மகுடமாகத் திகழ்வது முடிபோட்ட கொண்டைக்கு மேல் திருவடிகள் இரண்டினைச் சுமந்து நிற்பதே ஆகும். தாடி மீசைகள் திகழ, மார்பில் உத்திராக்க மாலைகள் அணி செய்ய பல மடிப்புகளுடன் நீண்ட ஆடை உடுத்தி நிற்கிறான். மாவீரன் ஒருவன் சைவ செம்மலாய் கயிலைநாதனின் திருவடிகளைச் சுமந்து நிற்கும் இக்கோலக் காட்சியில் இதுவரை வேறு எந்த ஒரு மன்னது சிலையும் நமக்கு கிடைக்கவில்லை.

இத்தகைய கோலத்தில் தனது சிலையைப் படைத்துக் கொண்ட குலோத்துங்களின் பெருமை சாதாரண ஒன்றா? பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பாவினை வகுத்த கண்டராதித்த சோழர் சிவபாதசேகரன் எனத் தன்னைக் கூறிக் கொண்ட முதலாம் இராசராச்சோழன் திருத்தொண்டர் மாக்கதை எழுதச் செய்து தில்லையம்பலக் கூத்தனின் பொற் பாதங்களாகிய தாமரைமலரை மொய்க்கின்ற வண்டு தான்தான் எனக் கூறிக் கொண்ட இரண்டாம் குலோத்துங்கண் ஆகிய மாமன்னர்களின் அடிச்சுவட்டை பின்பற்றியவன் அல்லவா இவன்?

அதனால்தான் தனது உருவச்சிலையில் சிவனடிகளை தன்னுடைய தலையால் தாங்கும் கோலம் பெற்றான். பா தொடுப்பவராகவும் பாதசேகரராகவும், பாதகமலங்களை மொய்க்கும் வண்டுகளாகவும் தங்களை பெருமைப் படுத்திக் கொண்ட சோழர்களின் வழிவந்த இம்மன்னன் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலைமேல் சூடிக் கொண்டு சிலையாக திருவாலங்காட்டில் நிற்பதை காணும் போது....

“நனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தாய்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே“

என்ற அப்பர் பெருமானின் நல்லூர் பதிகமும், திருச்சிராப்பள்ளி வலிதாங்குர பல்லவேசுவர கிருகத்தில் சிவபெருமானின் திருவடிகளை தன் தலையால் தாங்குகிறேன் என்று கல்வெட்டுப் பாக்கலால் கூறி அவ்வாறே தாங்கிச் சிலையாக நிற்கும் மகேந்திர போத்தரையனின் சிற்பமும் நம்முன் தோன்றி தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவும் ஒரு பண்பு நலனை நம் நினைவிற்கு கொணர்கின்றன.
(திருவாலங்காட்டுக் கோயிற்சுற்றில் உள்ளபடி)

குருசாமி ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடை வீட்டிற்கான பாதயாத்திரை சென்ற போது துன்முகி வைகாசி 2ஆம் நாள் (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை திருவாலங்காட்டில் வழிபாடு செய்யும் பேறு கிடைக்கப் பெற்றேன். அப்போது பார்த்து வணங்கியதை இப்போது பதிவு செய்கிறேன்.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

சனி, 26 ஜனவரி, 2019

01.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, வலையன்குளம் பெருமாள் கோயில்

வலையன்குளம் பெருமாள் கோயில்


எல்லாச் சமூகத்தாரும் ஒன்றாய் வணங்கும் கோயில்.
திருவிழாவின் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக தினமும் நாடகம் நடத்தி வழிபடும் கோயில்.
கோயில் வளாகத்திற்குள் யாரும் காலணி அணிந்து செல்லக் கூடாது எனக் கிராமத்தினரால் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ள கோயில்.
பெண்கள் கோயில் வாலிலேயே நின்று வழிபடும் கோயில்.

மூலவரோ சுயம்பு.
பெயரோ பெருமாள் கோயில்.
விபூதி பிரசாதம்.
வில்வம் தீர்த்தம்.
தேவியர் இல்லாத மூலவர்.
பரிவார தெய்வங்கள் ஏதும் இல்லாத கோயில்.

ஊரார் ஒன்று சேர்ந்து நடத்தும் அன்னதானம்.
உயிர்பலி இல்லாத வழிபாடு.

மதுரை விமானநிலையம் அருகில் உள்ளது வலையங்குளம் அருள்மிகு பெருமாள் கோயில்.

சாதியின் பெயரால் சண்டைகளை வளர்க்கும் பகுத்தறிவாளர்களும்,  கடவுளை நம்பும் காட்டுமிராண்டிகளும் அவசியம் வழிபடவேண்டிய கோயில்.

அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் 01.07.2017 அன்று இங்கே உள்ள சமுதாயக்கூடத்தில் தங்கியிருந்து கோயில்வழிபாடு செய்து கொண்டோம்.

வலையங்குளம் திரு.மாரியப்பன் செட்டியார் அவர்களும், நகைக்கடை வைத்திருக்கும் நகரத்தார் அன்பர் ஒருவரும் அடியார்களை  அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 10 ஜனவரி, 2019

28.05.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, அரக்கோணம், குமார ராஜா மஹால்

அரக்கோணம் குமார ராஜா மஹால்








காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவரது 20 பாதயாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டனர்.  பிள்ளையார்பட்டியில் இருந்து  பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை முதலான ஐந்து திருத்தலங்களிலும் வழிபாடு செய்து முடித்தனர்.  சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில் 28.05.2017 இன்று  இந்த மண்டபத்தில் தங்கிச் சென்றனர். 
உள்ளூர் இந்துமுன்னனியினர் பலரும் வந்து யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

17.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை, சிதம்பரம் வழிபாடு

அறுபடைவீடு பாதயாத்திரை,
சிதம்பரம் வழிபாடு


 சிற்றம்பலம். பொன்னம்பலம்.

17.05.2016 பச்சைக்காவடி அவர்களும் அவரது 20 யாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை. பிள்ளையார்பட்டியில் இருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை முதலான ஐந்து திருத்தலங்களையும் வணங்கினோம். சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில் இன்று 17.05.2016 சிதம்பரம் வந்து வழிபாடு செய்தோம். காவேரி மகாலில் தங்கினோம். யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.








திருவாதவூரார் தில்லை சேர்ந்த பாடல் - “வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப் பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி  எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார்.”

https://goo.gl/maps/ph27XHBug4P2



அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

05.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - திருத்தணிகை




குருஜி பச்சைக்காவடி அவர்களது இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையின் 59 ஆவது நாள். இன்று ஆடி 20 ( 05.08.2017) சனிக் கிழமை.
சேத்துப்பாக்கம் பாரத்பள்ளியில் இருந்து காலை 2:20 மணிக்கு யாத்திரையைத் தொடர்ந்து
திருத்தணி நகரத்தார் விடுதி வந்து சேர்த்தோம்.
பயணதூரம் 31 கி.மீ.
வழியில் தேநீர்.
விடுதியில் காலை உணவு.
மாலை 4:00 மணிக்கு அபிடேகம் வழிபாடு.
இத்துடன் குருசாமி பச்சைக்காவடி அவர்களது இரண்டாமாண்டு அறுபடைவீடு பாதயாத்திரை நிறைவடைகிறது.
ஆறுமுகனருள் நம் அனைவருக்கும் ஆகுக.
ஓம் சரவணபவ.

சனி, 28 ஜூலை, 2018

28.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - கடலூர்

குருஜி பச்சைக்காவடி அவர்களது இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையின் 51 ஆவது நாள். இன்று ஆடி 12 ( 28.07.2017) வெள்ளிக் கிழமை, கடலூர் திரு. முத்தையா அவர்கள் இல்லத்தில் இருந்து 2:20 க்குப் புறப்பட்டு காலை மணி 8:10 க்கு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் அருகே உள்ள ஐயப்பன் கோயில் மண்டபம் வந்து சேர்த்தோம்.
பயணதூரம் 24 கி.மீ.
வழியில் இளநீர், போண்டா, தேநீர்.
மண்டபத்தில் காலை உணவு.
ஓய்வு.
தங்கல்.
மாலை 4:30க்கு மணக்குள விநாயகர் வழிபாடு.

வெள்ளி, 8 ஜூன், 2018

ஹேவிளம்பி 2017 வருடம், ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீடு பாதயாத்திரை

முழுமுதற் கடவுள் ஆனைமுகத்தான் அருள்.

ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 
அறுபடைவீடு பாதயாத்திரை
ஹேவிளம்பி 2017 வருடம்


இந்தியப் பெருநாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலம்காக்க, நாட்டுக்கோட்டை நகரத்தார் நலம்காக்க, பனிரெண்டு முறை இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்று ஆண்டவனின் அருள் பெற்ற வலையபட்டி பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீட்டிற்கான இரண்டாம் ஆண்டு ஆன்மிகப் பாதயாத்திரை.
பாதயாத்திரை துவக்க நாளான இன்று வைகாசி 25 (08.06.2017) வியாழன் காலை  வைரவன்பட்டியில் வழிபாடு.

வழிபாடு முடிந்து, காலை மணி 8:10க்கு பிள்ளையார்பட்டி சேதுஅம்பலம் வீட்டில் வரவேற்பு, பாதபூசை, காலை உணவு.


மாலை பிள்ளையார்பட்டியில் வழிபாடு.  பாதயாத்திரை துவங்கியது.  வழியில் ஐயா பிச்சக்குருக்கள் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஓய்வு, இரவு தங்கல்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


புதன், 6 ஜூன், 2018

திருத்தணிகையில் மொட்டை போட்டுக் கொள்ள வேண்டுமா? கூடாதா? (என்னிடம் கேட்டால் ?)

திருத்தணிகையில் 
மொட்டை போட்டுக் கொள்ள 
வேண்டுமா? கூடாதா? 

(என்னிடம் கேட்டால் ?)



பழனியில் மொட்டை போட்டுக்கொண்டேன். 
ஆனால்,திருத்தணிகையில் மொட்டை போட்டுக் கொள்ளவில்லை!
இதற்கு என்ன காரணம்? என்று என்னிடம் கேட்டனர்.

அறுபடைவீடு பாதயாத்திரை. இருபது அடியார்களை அழைத்துக் கொண்டு பொன்னமராவதி வலையபட்டியைச் சேர்ந்த காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது தலைமையில் பங்குனி 25ஆம் நாள் (07.04.2016) வியாழக்கிழமை அன்று பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் வழிபாடுகளை முடித்துக் கொண்டு சித்திரை 19ஆம் நாள் (02.04.2016) திங்கள் கிழமையன்று பழநி சென்று சேர்ந்தோம். அடியார் அனைவரும் பழனி பாலதண்டாயுதபாணியை நினைந்து மொட்டைபோட்டுக் கொண்டோம். பின்னர் பழனியிலிருந்து புறப்பட்டு சுவாமிமலை வழிபாட்டை முடித்துக் கொண்டு வைதீசுவரன்கோயில், சிதம்பரம், புதுச்சேரி, திண்டிவனம், காஞ்சிபுரம் வழியாக வைகாசி 16ஆம் நாள் (29.05.2016) ஞாயிற்றுக் கிழமை திருத்தணிகை சென்று சேர்ந்தோம். அடியார் பலரும் முருகனை நினைந்து வேண்டி மொட்டை போட்டுக் கொண்டனர்.

ஆனால் நான் மொட்டை போட்டுக் கொள்ளலாம், முகச்சவரம் மட்டும் செய்துகொண்டேன். யாத்திரையில் என்னுடன் வந்த அத்தனை அடியாரும் இதற்கான காரணத்தைக் கேட்டு என்னைத் துளைத்து எடுத்து விட்டனர். எம்பெருமான் முருகப் பெருமான் ஆறுபடைவீடுகளில் இருந்து அருளினாலும், ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொரு சிறப்பான காரணத்திற்காக எழுந்தருளியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் தேவசேனையைத் திருமணம் செய்து கொள்கிறார். திருச்செந்தூரில் வீரவேல் ஏந்தி அசுரனை வதம் செய்கிறார், பழனியில் தாய்தந்தையருடன் கோபம்கொண்டு முற்றும் துறந்து ஆண்டியாய் நின்கிறார். சுவாமிமலையில் தந்தைக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்கிறார், திருத்தணிகையில் வள்ளியை மணம் புரிகிறார், வள்ளி தேவசேனை உடனாகப் பழமுதிர்சோலையில் வீற்றிருந்து அருளுகிறார்.
இதில் பழனியில் முருகப்பெருமான் முற்றும் துறந்து ஆண்டிக் கோலத்தில் இருப்பதால், அடியாரும் அவர்போன்று தலைமுடியையை மழித்து உத்திராட்சம் தரித்து ஓராடையுடன் சென்று அவரை வழிபடுவதே சிறப்புடையது. அதேபோன்று, திருத்தணிகையில் வள்ளியை மணம் புரிந்து கொண்டிருப்பதால், நாமும் ஒரு திருமணத்திற்குச் செல்வது போன்ற உடையலங்காரத்துடன் சென்று வழிபடுவதே சாலச் சிறந்தது. எனவேதான் நான் மொட்டைபோட்டுக் கொள்ளவில்லை என்று கூறினேன்.

ஊர் உலகத்தில் எத்தனையோ கோடனுகோடி அடியார்கள் முருகனுக்கு உள்ளனர். அவர்களில் முக்காலமும் அறிந்து உணர்ந்த ஞானிகளும் உள்ளனர். அவர்கள் எல்லாம் சொல்லாத விளக்கத்தை, நாட்டில் யாருமே கடைப்பிக்காத காரியத்தைத் தாங்கள் புதிதாகக் கூறுகின்றீர்களே என்று கேட்டனர்.

முருகனின் மெய்யடியார்கள் எல்லாம் திருத்தணிகையை எவ்வாறு உணர்ந்து கொண்டனர் என்பது பற்றி நான் ஏதும் அறியேன்.
ஆனால் நான் அறிந்து உணர்ந்து கொண்ட வகையில், முருகன் வள்ளியை மணம்புரிந்த இடம் என்பதால், திருமணத்திற்கு எப்படி மொட்டையடித்துக் கொண்டு செல்வதைத் தவிர்க்கிறோமோ, அதேபோன்று திருத்தணியில் எம்பெருமான் முருகனை, சண்முகனை வணங்கச் செல்லும் போது மொட்டைபோட்டுக் கொள்ளாமல் நல்ல அலங்காரத்துடன் செல்லவேண்டும்
என்றேன்.
அடியார்கள் யாரும் இந்த விளக்கத்தை எதிர்க்கவில்லை. ஆனால் ஏற்றுக் கொண்டதாகக் கூறவும் இல்லை.
இது குறித்து உங்களது கருத்து என்ன? அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

வியாழன், 24 மே, 2018

விளம்பி (௨௦௧௮) அறுபடைவீடு பாதயாத்திரை

குருசாமி பச்சைக்காவடி அவர்களின்,
விளம்பி (௨௦௧௮) வருட அறுபடைவீடு பாதயாத்திரை
யாத்திரிகர் பெயர்ப் பட்டியல்.

1.Batchai kavadi- age 67,
2.S.Dhurai sami-78
3.C.kannappan-75
4.R.Angamuthu-73
5.C.solaiyan-70
6.R.sathiya moorthi-70
7.D.Dhanasekaran-65
8.T.k.soundharajan-64
9.S.Muthukaruppan-64
10.A.S.Shanmugam-63
11.C.Thiyagarajan-63
12.S.Deenadhayalan-63
13.K.T.Periyakaruppan-62
14.P.S.Kathiresan-60
15.S.Ramanathan-59
16.VE.Karuppaiyaa-58
17.S.Vijayakumar-54
18.SP.Rajavel-50
19.R.Janakiraman-46
20.C.Manikandan-41
21.N.Sakthivel-20
22.S.Devan-45
23.D.Mani-28
24.C.Murugesan-26

வியாழன், 3 மே, 2018

13.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை சுவாமிமலை

13.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை சுவாமிமலை 

பொன்னமராவதி வலையபட்டி சித்தர் பச்சைக்காவடி அவர்களது தலைமையில்  அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.  பிள்ளையார்பட்டியிலிருந்து பாதயாத்திரையாகச் சென்று பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி ஆகிய நான்கு தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு சுவாமிமலை சென்று கொண்டிருந்தோம்.

துன்முகி சித்திரை - 30 (13.05.2016) வெள்ளிக் கிழமை - இன்று காலை 03.00 மணிக்கு திருவையாறு மடத்தில் இருந்து புறப்பட்டு 26 கி.மீ. நடந்து காலை 8.45 மணிக்கு சுவாமிமலை நகர விடுதியை அடைந்து அங்கு தங்கினோம்.

வழியில் இருந்த பெட்ரோல்பங்கில் சற்று ஓய்வு எடுத்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து நடந்தோம்.  காலைவெயில் கடுமையாக இருந்தாலும் சாலையின் இருபக்கங்களிலும் மரங்கள் இருந்த காரணத்தினால் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் நடந்தோம்.




இன்று காலை உணவை சுவாமிமலை நகரவிடுதித் தலைவர் பாபநாசம் உயர்திரு எம்.பழனியப்ப செட்டியார்  அவர்கள் கொடுத்து உபசரித்தார்கள்.  மாலை 06.00 மணிக்கு சுவாமிமலை கோயிலுக்குச் சென்று அருள்மிகு சாமிநாதசாமியையும், மீனாட்சி சுந்தரேசுவரரையும் வழிபட்டோம். M.C.C Charitable Trust விடுதி மேலாளர் சுவாமி தரிசன ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்கள்.  இன்று கொத்தமங்கலம் திரு. வயிரவன் அவர்கள் M.C.C Charitable Trust மூலம் அன்னதானத்திற்கு நிதியுதவி அளித்தார்கள்.






அருணகிரிநாதர் அருளிச் செய்த “திரு எழுகூற்றிருக்கை“ தேர் வடிவில் அமைந்த சித்திர கவி படித்து மகிழ்ந்தோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் 
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்