அறுபடைவீடு பாதயாத்திரை
60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
இன்று 9ஆம் நாள் - ஆனி 2 (16.06.2017) வெள்ளிக் கிழமை.
குருஜி பச்சைக்காவடி அவர்களது அறுபடைவீடு பாதயாத்திரை குழுவினர் 16.06.2017 இன்று வலையன்குளத்தில் இருந்து புறப்பட்டு கல்குறிச்சி வந்து சேர்ந்தோம் .
காரியாபட்டி ஊர் எல்லையில் தேநீர் .
காரியாபட்டியை அடுத்து வக்கனாங்குண்டு ஊர் எல்லையில் மரத்தடியில் காலை உணவு .
கல்குறிச்சி நாடார் உறவின்முறை கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம் .
ஓய்வு. ஆளுக்கொரு மின்விசிறியின் கீழ் நன்கு வசதியாகப் படுத்து ஓய்வெடுத்தனர். சிலர் அவரவர் துணிகளைத் துவைத்து உலர்த்தி மடித்து எடுத்து வைத்துக் கொண்டனர்.
மதிய உணவு.
மதிய உணவு.
மாலைநேரத்தில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டு முடித்தவுடன் யாத்திரிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டனர்.
இரவு உணவு .
ஓய்வு .
மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு வழிபாடு செய்துகொண்டு, ஹார்லிக்ஸ் மற்றும் ரொட்டி சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
https://goo.gl/maps/VjU8WX6p3B4NA8CD9
இன்றைய பயணம் சுமார் ....24 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்