புதன், 6 அக்டோபர், 2021

07.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 135 ஆம் நாள், புரட்டாசி 21


இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 

இன்று 135 ஆம் நாள், புரட்டாசி 21 (07.10.2014)


இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை -  குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து   சாலைவழியாக இராமேசுவரத்திற்குப் புறப்பட்டனர்.   இரவு 9.00 மணிக்குக் காசி-இராமேசுவரம் தொடர்வண்டியில் யாத்திரிகர்கள் அனைவரும்  இராமேசுவரத்திற்குப் புறப்பட்டனர்.

பாதயாத்திரை நடைபெற்றபோது, வழி நெடுகிலும் யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி கொண்டு,  அன்னதான வண்டியில்  காசியிலிருந்து இராமேசுவரத்திற்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வந்து கொண்டிருந்தார்.   அவருடன் காசிஸ்ரீ  சரவணன் அவர்களும் வந்து கொண்டிருந்தார்.

இன்று 135 ஆம் நாள், புரட்டாசி 21 (07.10.2014) காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு -  

இராமேசுவரத்தில் 07.10.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் கங்காதீர்த்தம் அபிஷேகம் செய்து இராமநாதசுவாமியையும் பர்வதவர்த்தனி அம்பாளையும் வழிபாடு செய்து கொண்டனர். 


இராமேசுவரம் - காசி பாதயாத்திரையைத் தொடங்கிட இராமேசுவரம் செல்லும் வழியில் தேவகோட்டையில் எடுத்த படம் இது.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக