செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

12.09.2021 வலையபட்டியில் ஒன்றுகூடி

அறிவிப்பு -
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் நற்கருணையினால், நாமும் அவருடன் இராமேசுவரம் - காசி புனித பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை 12.09.2014 அன்று வணங்கும் பேறு பெற்றுள்ளோம்.  காசிஸ்ரீ என்ற பட்டமும் பெற்றுள்ளோம்.
மேலும் அறுபடைவீடுகளுக்கும் 60 நாட்கள் பாதயாத்திரையாகச் சென்று எம்பெருமான் முருகப்பெருமானிள் திருவருளையும் பெற்றுள்ளோம்.
உலகில் வாழும் கோடானகோடி மனிதர்களில் இப்பேற்றினைப் பெற்றவர்கள் நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

பெறற்கரிய இந்தப் பேற்றினைப் பெற்றுள்ள நாம், அதைப் போற்றும் வகையில் வரும் ஆவணி 27 (12.09.2021) ஞாயிற்றுக்கிழமை  அன்று வலையபட்டியில் ஒன்றுகூடிக், கோயிலில் வழிபாடு செய்து, சித்தர் ஐயா அவர்களின் அருளாசியைப் பெறுவோம்.
பாதயாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் வருக, திருவருளும் குருவருளும் பெருக.

அடியேன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக