சனி, 22 பிப்ரவரி, 2025

காசிஸ்ரீ SP SN மாதவன் செட்டியார்


 சூரக்குடி திரு SP SN மாதவன், வயது 81; கைப்பேசி எண்:- 9363073151;  மிகவும் அமைதியானவர்.  சாது.

2014 ஆம் வருடம் காசிஸ்ரீ அயோத்திஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்கள் நடத்திய இராமேசுவரம் - காசி பாதயாத்திரையில் கலந்து கொண்டு காசிஸ்ரீ பட்டம் பெற்றவர்.  நடைவேகம் அதிகம்.  குருசாமிக்குப் பிடித்தமானவர்.  வட்டகைக் கூட்டம் பற்றியும்,  நகரத்தார் சமூகம் ஒன்றாக ஒற்மையுடன் சேர்ந்து வாழவேண்டும் பிரிவினை ஒருபோதும் பயனளிக்காது என்பது பற்றியும் அனைவரிடமும் எடுத்துக் கூறி வந்தார்.  

இவரது மகன் இவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்ததார்.   மதுரையில் மகனுடன் இருந்து வந்தார்.

வயது மூப்பின் காரணமாகச் சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தார்.   ஆயுட்காலத்தின் கடைசி நாட்களில் இருப்பதை உணர்ந்து மகனிடம் சூரக்குடிக்குச் சென்று இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.  இவரது கடைசி விருப்பத்தின்படியே மதுரையிலிருந்து சூரக்குடிக்கு தைப்பூசம் 11.02.2025 அன்று வந்துள்ளனர்.  சூரக்குடிக்குச் சொந்த வீட்டிற்கு வந்துவிட்டோம் என்ற மனநிறைவு அவருக்கு.  17.02.2025 அன்று ஆகாரம் செல்லவில்லை. பால் மட்டுமே ஆகாரம்.   18.022025 துளசித் தீர்த்தம் மட்டுமே ஆகாரம்.   19.02.2025 அன்று அருள்மிகு காசிவிசுவநாதர் விசாலாட்சியின் திருவடியில் முத்தியடைந்து விட்டார்.  

நாமும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.  காசிஸ்ரீ மாதவன் செட்டியார் அவர்களது நல்லாசிகள் நம் அனைவருக்கம் ஆகுக.

🙏🙏🙏


சனி, 1 பிப்ரவரி, 2025

அயோத்தி ஸ்ரீ பட்டம் மாதிரி

 


அயோத்திஸ்ரீ அழைப்பிதழ்





 

அயோத்திஸ்ரீ பட்டம் பெற்றவர்கள் 11.01.2025


 உ

காளையார்கோயில் AL. AR. கட்டளையின்  

ஜமீன்தார் சுவாமிகள் குருபூஜை விழா 

மார்கழி மாதம் 27ஆம் தேதி (11.01.2025) சனிக்கிழமை அன்று தேவகோட்டை சன்மார்க்க சங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 


வலையபட்டி காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் தலைமையில் 12.06.224 அன்று இராமேஸ்வரத்தில் இருந்து புனித பாதயாத்திரை புறப்பட்டு, காசி வழியாக அயோத்திக்குச் சென்று 13.10.2024 அன்று வழிபாடு செய்து வந்துள்ள 22 அடியார்களுக்கு 'அயோத்தி ஸ்ரீ ' பட்டம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை AL. AR. ஜமீன்தார் குடும்பத்தினர் சார்பாக, தேவகோட்டை ஜமீன்தார் உயர்திரு AL. AR. SM. நாராயணன் செட்டியார் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.  துலாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்பழகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.   தேவகோட்டை சன்மார்க்க சங்கத் தலைவர்  திரு SV. AN. லெட்சுமணன் செட்டியார் அவர்களும், காளையார்கோயில் செல்லப்பசுவாமிகள் மடத்தின் அதிபர் அயோத்திஸ்ரீ காசிஸ்ரீ நர்மதாஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ ராமசாமி சுவாமிகளும் முன்னிலை வகித்தனர்.  திரு AL. AR. RM. V. C. RM. அருணாசலம் செட்டியார் அவர்களும், AL. AR. RM. C. SP. சித்தரஞ்சன் செட்டியார் அவர்களும்,  திரு VR. சுயம்பிரகாசம் செட்டியார் அவர்களும் முன்னின்று விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.  திரு இலக்கியமேகம் ந. ஸ்ரீநிவாசன் அவர்கள் அனைவரையும் வாழ்த்திச் சிறப்புரை நிகழ்த்தினார்.  நகரத்தார் பெருமக்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  காலையும் மதியமும் அனைவருக்கும் குருபூஜை திருவமுது வழங்கி உபசரித்தார்கள்.


படத்தில் இடமிருந்து வலமாக உட்கார்ந்து இருப்பவர்கள் - 1) வலையபட்டி - காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள், 2) துலாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்பழகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமி அவர்கள், 3) காளையார்கோயில் செல்லப்பசுவாமிகள் மடத்தின் அதிபர் அயோத்திஸ்ரீ காசிஸ்ரீ நர்மதாஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ ராமசாமி சுவாமி அவர்கள்  4) தேவகோட்டை உயர்திரு AL. AR. SM. நாராயணன் செட்டியார் அவர்கள், 5) தேவகோட்டை சன்மார்க்க சங்கத் தலைவர்  திரு SV. AN. லெட்சுமணன் செட்டியார் அவர்கள்.


படத்தில் இடமிருந்து வலமாக நிற்பவர்கள் -  1) திருமானூர் - ப. ஜோதி ரத்தினம் அவர்கள் 2)  சீனமங்களம் -  ரா. முத்தையா அவர்கள், 3) குழிபிறை - மு. தேனப்பன் அவர்கள், 4) சிவகங்கை - பெ. பாலகுரு அவர்கள்,  5) கொத்தட்டை - பா. சண்முகம் அவர்கள், 6) திருவெறும்பூர் - காசிஸ்ரீ ரா. அங்கமுத்து அவர்கள், 7) பலவான்குடி - சொ. ஜெயபாண்டியன் அவர்கள், 8) பலவான்குடி - சி. சோலை அவர்கள், 9) (பின்னால் நிற்பவர்) உ. சிறுவயல் தெய்வத்திரு வெ. காசி செட்டியார் அவர்களது மகன் வெ.கா. வெங்கடாசலம் அவர்கள், 10) திருவெறும்பூர் - நா. சங்கநாராயணன் அவர்கள், 11)  செட்டியப்பட்டி - சு. சௌந்தரபாண்டியன் அவர்கள், 12) குழிபிறை - ஆ. சண்முகம் அவர்கள், 13) மடுகரை (புதுச்சேரி) - காசிஸ்ரீ தொப்பை (எ) கலியபெருமாள் அவர்கள், 14) சென்னை பம்மல் - அ. மோகன் அவர்கள், 15) கொத்தமங்கலம் - சி. சிங்காரவேலன் அவர்கள், 16) காரைக்குடி - மெ.கா. மெய்யப்பன் அவர்கள், 17) கோனாபட்டு - மு. நடராஜன் அவர்கள், கோனாபட்டு இராம.திருப்பதி கண்ணன் அவர்களது சான்றிதழையும் இவர் பெற்றுக் கொண்டார். 18) வெட்டிக்காடு - ச. துரைசாமி அவர்கள், 19) மேல்மா கூட்டுரோடு - ரா.ஜானகிராமன் அவர்கள் நேரில் வர இயலாத காரணத்தினால் கோட்டையூர் கி. காளைராசன் அவர்கள் பெற்றுக் கொண்டார், 

அயோத்திஸ்ரீ பட்டம் வழங்கியதற்காக ஜமீன்தார் அவர்களுக்கு நன்றி


அயோத்திஸ்ரீ  பட்டம் வழங்கியதற்காக 

ஜமீன்தார் அவர்களுக்கு நன்றி

01.02.2025


அயோத்திஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் தலைமையில் 33 பேர் ராமேஸ்வரம் - காசி -  அயோத்தி பாதயாத்திரை சென்று வந்தோம். அயோத்தியில் பாதயாத்திரை நிறைவு செய்த 22 பேர்களுக்கு "அயோத்தி ஸ்ரீ" பட்டம் வழங்கித் தேவகோட்டை ஜமீன்தார் அவர்கள் 11.01.2025 அன்று சிறப்பு செய்தார்கள் .

ஜமீன்தார் அவர்களுக்குக்  காளையார்கோயில் செல்லப்ப சுவாமிகள் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ராமசாமி ஐயா அவர்களது தலைமையில் இன்று 01.02.2025  நேரில் சென்று நன்றி தெரிவித்தோம். ஜமீன்தார் அவர்கள் மிகவும் மகிழ்ந்து எல்லோரையும் ஆசீர்வதித்தார்கள்.

AL.AR. கட்டளையின் சார்பாக, ஐயா AL AR. RM. C. SP. சித்தரஞ்சன் செட்டியார் அவர்களும், அண்ணா என்ற  அன்புடன் அழைக்கப்படும் ஐயா  AL AR. RM. V. C. RM. அருணாச்சலம் செட்டியார் அவர்களும் எங்களை வரவேற்று உபசரித்து வாழ்த்தினார்கள்.

"அயோத்தி ஸ்ரீ" பட்டம் பெற்றவர்களுடைய ஏழேழு தலைமுறைக்கும் தேவகோட்டை ஜமீன்தார் ஐயா அவர்கள் வழங்கிய பட்டமானது நல்வழிப்படுத்தி உயர் வாழ்வு வாழ வைக்கும். 

🙏🙏