அயோத்திஸ்ரீ பட்டம் வழங்கியதற்காக
ஜமீன்தார் அவர்களுக்கு நன்றி
01.02.2025
அயோத்திஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் தலைமையில் 33 பேர் ராமேஸ்வரம் - காசி - அயோத்தி பாதயாத்திரை சென்று வந்தோம். அயோத்தியில் பாதயாத்திரை நிறைவு செய்த 22 பேர்களுக்கு "அயோத்தி ஸ்ரீ" பட்டம் வழங்கித் தேவகோட்டை ஜமீன்தார் அவர்கள் 11.01.2025 அன்று சிறப்பு செய்தார்கள் .
ஜமீன்தார் அவர்களுக்குக் காளையார்கோயில் செல்லப்ப சுவாமிகள் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ராமசாமி ஐயா அவர்களது தலைமையில் இன்று 01.02.2025 நேரில் சென்று நன்றி தெரிவித்தோம். ஜமீன்தார் அவர்கள் மிகவும் மகிழ்ந்து எல்லோரையும் ஆசீர்வதித்தார்கள்.
AL.AR. கட்டளையின் சார்பாக, ஐயா AL AR. RM. C. SP. சித்தரஞ்சன் செட்டியார் அவர்களும், அண்ணா என்ற அன்புடன் அழைக்கப்படும் ஐயா AL AR. RM. V. C. RM. அருணாச்சலம் செட்டியார் அவர்களும் எங்களை வரவேற்று உபசரித்து வாழ்த்தினார்கள்.
"அயோத்தி ஸ்ரீ" பட்டம் பெற்றவர்களுடைய ஏழேழு தலைமுறைக்கும் தேவகோட்டை ஜமீன்தார் ஐயா அவர்கள் வழங்கிய பட்டமானது நல்வழிப்படுத்தி உயர் வாழ்வு வாழ வைக்கும்.
🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக