மீசைக்கார நண்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீசைக்கார நண்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

11.09.2014 இராமேசுவரம் காசி பாதயாத்திரை, மீசைக்கார நண்பன்

யாதும் ஊரே யாவரும் தமிழர்....

மீசைக்கார நண்பன்


இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.
109ஆவது நாள் பயணம்.
ஆவணி 26 ( 11.09.2014) வியாழக்கிழமை.

அதிகாலையில் சமோகரா என்ற ஊரிலிருந்து புறப்பட்டு சுனார் என்ற ஊரைநோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
காலை மணி 8.15 அளவில் ஆற்றின் கரையோரம் உள்ள பட்ரி (PADARI) என்ற ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தோம்.
வேகமாக நடப்போர் எல்லாம் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தனர். ஓரிருவர் எனக்கும் பின்னே வந்து கொண்டிருந்தனர்.

நான் நடந்து செல்வதைச் சாலையோரம் உள்ள கடையில் உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஒரு மீசைக்காரர் என்னை அவரிடம் வருமாறு சைகை காட்டி அழைத்தார். நான் அவரைப் பொருட்படுத்தாது நடந்து கொண்டிருந்தேன். உடனே அவர் எழுந்து வந்து என்னிடம் ஏதேதோ கேட்டார், ஏதேதோ சொன்னார்.

“இராமேசுவரம் - காசி பாதயாத்திரை. 109ஆவது நாள் பயணம்” என்பதை மட்டும் இந்தியில் சொன்னேன்.
அதைக் கேட்ட அவர் தனது மீசையை முறுக்கிக் காட்டி ஏதேதோ சொன்னார், ஏதேதோ கேட்டார்.
“உடல் பலமும், மனவளமும் மனிதனுக்குத்தேவை, ஆன்மிகம் வழிபாடு தேவையற்றது” எனச் சொல்கிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

மீசைக்கு மீசைதான் சரியாகும் என்று மனதிற் பட்டது. அதனால், எங்களுடன் பாதயாத்திரை வந்து கொண்டிருந்த காசிஸ்ரீ ‘தொப்பை’ என்ற களியபெருமாள் அவர்கள் வரும் வரை, நின்று அமைதியாக அவரது இந்திப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவரும் மீசையை மட்டும் முறுக்கி கொண்டே ஏதேதோ இந்தியில் சொல்லிக் கொண்டே இருந்தார்.
நண்பர் தொப்பைசாமி அவர்கள் எனது அருகில் வந்தும், அவரை அழைத்து அவரது மீசையை முறுக்கிக் காட்டச் சொன்னேன்.

தொப்பைசாமி அவரது மீசையை முறுக்கிக் காட்டியதுதான் தாமதம். அந்த மீசைக்காரர் எங்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டார். பெரிதும் மகிழ்ந்து நெகிழ்ந்து ஏதேதோ இந்தியில் சொல்லிக் கொண்டே இருந்தார்.

எங்களைக் காசிக்கு அழைத்துச் சென்ற எங்களது குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அருகே வந்துவிட்ட காரணத்தினால் பத்ரி மீசைக்காரரிடம் விடைபெற்றுக் கொண்டு காசியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். காசி இங்கிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவு.

முறுக்கு மீசைக்கு இவ்வளவு மதிப்பா?






அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்