திங்கள், 16 ஜூலை, 2018

15.07.2014, 51ஆவது நாள். பீச்பள்ளி

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
...
15.07.2014, 51ஆவது நாள்  .
யாத்திரையில் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நாள் .
எனவே குருஜி முதல் நாள் இரவு யாத்திரிகர்களை 8.00 மணிக்கே தூங்கச் சொல்லி விட்டார் .

காலை2.25 மணிக்கு கர்னூல் என்ற ஊரில்இருந்து புறப்பட்டோம் .

6.50 க்கு ஜலபுரம் என்ற ஊர் அருகே காலைதேநீர்  .

10.40 க்குகோதண்டபுரம் என்ற ஊர் வந்து சேர்ந்தோம் .
அனைவருக்கும் பீன்ஸ் ரசம் (சூப்) வழங்கப்பட்டது . யாத்திரிகர் அனைவரும் விரும்பி கூடுதலாக கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர் .

32 கி.மீ. பயணம் .
    தேசிய நெடுஞ்சாலை யில்
நீண்ட தூரத்திற்கு சாலையின் ஓரங்களில் ஊர்கள் எதையும் காணமுடிய வில்லை , வியப்பாக இருந்தது .
சிவப்பா (29)என்ற யாத்திரிகர் கால் சுளுக்கு ஏற்பட்டு மருந்து தடவிக் கொண்டு யாத்திரையை தொடர்ந்தார் .

ஒரு பெண் 4 வயது மகனுடன்
அங்கே இருந்தார் .
தமிழ் நன்றாகப் பேசினார் .
தான் வேடசந்தூர் என்றும் ,  தனது கணவன் இந்த ஊரில் வேலை பார்ப்பதற்கு வந்த தாகவும் , அவரைத் தேடிவந்ததாகவும் , ஆனால் அவர் இங்கு வேலை இல்லாத காரணத்தால் அவர் ஈரோடு சென்று விட்டதாக கூறுகின்றனர் , தான் திரும்பிச் செல்ல பணம் இல்லை என்று கூறிக் கண்ணீர் வடித்தார் .
குருஜி அவர்களுக்கு ரொட்டி யும் பீன்ஸ் சூப் கொடுக்கச் செய்தார் .
யாத்திரிகர் தங்களால் இயன்ற பணத்தை வழங்கினார்கள் .
மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது .

ஓய்வு .
மதிய உணவு .
மதியம் 2.30க்கு குருஜி யாத்திரை வழிபாட்டைத் துவக்கினார் .

மாலை 4.50 க்கு பீச்பள்ளி  என்ற ஊரில் உள்ள ஶ்ரீராமர் கோயில் வந்து சேர்ந்தோம் .

பயணம் 43 கி .மீ .

கிருஷ்ணா நதியின் தென்கரையில் கோயில் உள்ளது . பக்தர்கள், யாத்திரிகர் தங்கி வழிபாடு செய்ய அனைத்து வசதிகளும் அருமையாக உள்ளன .

ஓய்வு .

தங்கல் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக