செவ்வாய், 3 ஜூலை, 2018

இராமேச்சுரம் - காசி பாதயாத்திரை 39 ஆவது நாள் (03.07.2014)

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
39 ஆவது நாள் பயணமாக
இன்று 03.07.2014 காலை 2.45 மணிக்கு பெரச்சந்திரா விலிருந்து புறப்பட்டு பரகோடு வழியாக பாகேபள்ளி 10.15 க்கு வந்து சேர்ந்தோம் .
பயணம் 24 கீ.மீ .
இன்றுடன் கர்நாடக எல்லை முடிகிறது .
நாளையிலிருந்து ஆந்திரா மாநிலம் வழியாகப் பயணம் .
வரும் வழியில் பரகோடு பேருந்து நிறுத்தத்தில் காலை உணவு .
அருகில் சில தொழிலாளர் தொலைத்தொடர்பு இணைப்பு பணிகள் செய்து கொண்டிருந்தனர் , ஒரு முதியவரும் இருந்தார் .
அவர்களில் சிலர் திண்டுக்கல் என்றனர் .
குருஜி பச்சைக்காவடிஅவர்களையும் அழைத்து காலை உணவு வழங்கினார்.
பாகேபள்ளி கீதாமந்திரில் மதிய உணவு .
ஓய்வு.
தங்கல் .











































அன்பன் 
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக