வியாழன், 3 செப்டம்பர், 2020

04.09.2014 காசி பாதயாத்திரை - 102 ஆம் நாள், ஆவணி 19

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.     

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,    நேற்று 03.09.2014  மைஹாரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.

இன்று 102 ஆம் நாள் - 04.09.2014 ஆவணி 19 வியாழக் கிழமை.

யாத்திரிகர் அனைவரும்  இரவு 1.00 மணிக்கு முன்பே எழுந்து 2.00 மணிக்கு தினவழிபாட்டிற்கு கூடி விட்டனர்.   தினவழிபாட்டை முடித்துக் கொண்டு அதிகாலை 2.10 மணிக்கு மைஹாரில்  இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.  மொகாரிகட்ரா என்ற ஊருக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தோம்.    

6.51 am
காலை மணி 6.50 க்குச் சாலையோரம் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம்.   


7.17 am
காலை 7.15 மணி ஆகிவிட்டது.  அன்னதான வண்டி வருவதற்குக் காலதாமதம் ஆனது.   

8.16 am

8.32 am
சாலையில் மாடுகள் நிறைந்து காணப்பட்டன.   கனமழை பெய்து இருந்த காரணத்தினால் சாலையின் ஓரங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது.   இரண்டு பக்கமும் வாகனங்கள் வந்தால்,  சாலையில் நடந்து செல்வது பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.   சாலையில் இருந்து ஒதுங்கி நடந்தால் வழுக்கிவிடும் அபாயம் இருந்தது.   

8.41 am

8.43 am
யாத்திரிகர் சிலர் பாதுகாப்புக் கருதிக் கையில் பிரம்பை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தனர்.

8.45 am
காலை 8.45 மணிக்கு அமரபாட்டன் (अमरपाटन Amarpatan)  என்ற ஊரின் எல்லையில் உள்ள கோயில் வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டோம்.

8.45 am


9.15 am
காலை உணவு சாப்பிட்டு முடிந்துவுடன் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.

9.28 am

9.31 am

9.32 am

9.39 am

9.46 am

9.54 am

10.04 am


10.06 am

10.45 am

10.45 am

11.40  am
11.00 மணிக்கு மேல் மழை தூர ஆரம்பித்தது.  11.40 மணிக்குக் கக்ரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம்.   அங்குள்ள பள்ளிக்கூடத்தில் அமர்ந்து ஓய்வு.  


12.10 am
பள்ளியில் இரண்டு ஆசிரியைகள் மட்டுமே இருந்தனர்.  இரவு இந்தப் பள்ளிக்கூடத்தில் தங்கிச் செல்ல கேட்டோம்.    அவர்கள் யாத்திரிகர்கள் தங்குவதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.    குருசாமி பச்சைக்காவடி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்,  நாங்கள் பெண்கள்,  எங்களுக்கு இதெல்லாம் தெரியாது.  நீங்கள் இங்கே தங்க வேண்டும் என்றால் எங்களுக்கு மேலேயுள்ள அதிகாரிகளின் அனுமதி வேண்டும் என்று கூறிவிட்டனர்.

மழை தூறிக் கொண்டே இருந்தது.
கனமழை பெய்யப் போவது போன்று அருகில் உள்ள ஒரு சிறு குன்றின் உச்சியில் மேகங்கள் கூடி இருந்தன.


12.53 am
காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும்,  காசிஸ்ரீ தனசேகரன் அவர்களும் கக்ரா கிராமத்திற்குச் சென்று இங்கு தங்குவதற்கு ஏதேனும் இடங்கள் உள்ளனவா?  என விசாரித்தனர்.   நாங்கள் தங்கியிருந்து இடத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள வீட்டிற்குச் சென்று இவர்கள் இருவரும் யாத்திரிகர்கள் தங்குவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். இராமேசுவரம் காசி பாதயாத்திரை என்பதை அறிந்த அந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் மகிழ்ந்து  அனுமதி கொடுத்துள்ளார்.   

யாத்திரிகர் அனைவரும் அந்த அன்பரின் வீட்டிற்குச் சென்று சேர்ந்தோம்.    நாங்கள் அனைவரும் அந்த வீட்டிற்குச் சென்று சேர்ந்து, வீட்டின் முகப்பில் உள்ள சிறு கோயிலில் கும்பிட்டு முடித்ததுதான் தாமதம்,  கனமழை பெய்யத் தொடங்கியது.  ஒரு சில நிமிட நேரம் காலதாமதம் ஆகியிருந்தாலும் கனமழையில் மாட்டிக் கொண்டிருப்போம்.

2.10 pm
அந்த வீட்டின் உரிமையாளர் யாத்திரிகர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

மாலை 4.00 மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு,  அங்கிருந்து யாத்திரையைத் தொடர்ந்தோம்.

4.54 pm
சாலையில் சகதி அதிகமாக இருந்த காரணத்தினால்,  யாத்திரிகர்களின் வேட்டி யெல்லாம் சகதியாகிப் போனது.  மாலை மணி 6.30க்கு மொகாரிகட்ரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். இங்குள்ள குருசாமியின் அடியார் ஒருவர் யாத்திரிகர்களை வரவேற்று அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.

இரவு உணவு.
ஓய்வு.


https://goo.gl/maps/4dXXw82NsL5jQene6

இன்றைய பயண தூரம் சுமார் 49 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


இராமேச்சுரம் காசி யாத்திரையின் நிறைவாக நேற்று காலை மணி 7.00க்கு திரிவேணி சங்கம தீர்த்தத்தால் அருள்மிகு பர்வதவர்தினி உடனாய இராமநாதசாமியை நீராட்டி வழிபாடு செய்தோம்.

பெரியோர்களின் நல்லாசியாலும், வழிபடு தெய்வங்களின் திருவருளாளும், குருசாமி பச்சைக்காவடி அவர்களது அன்பினாலும் யாத்திரை இனிதே நிறைவுற்றது.


தெய்வங்களின் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன்

புதன், 2 செப்டம்பர், 2020

03.09.2014 காசி பாதயாத்திரை - 101 ஆம் நாள், ஆவணி 18

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.     இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,   நேற்று 02.09.2014  அம்தாரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம். 

இன்று வெற்றி நடைபோடும் 101 ஆம் நாள் - 03.09.2014 ஆவணி 18 

யாத்திரிகர் அனைவரும் இரவு 1.00 மணிக்கு முன்பே எழுந்து 2.00 மணிக்கு தினவழிபாட்டிற்கு கூடி விட்டனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.  குருஜி அவர்கள் 3.00 மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று கூறி ஓய்வு எடுத்தார்.  சரியாக 2.50 க்கு மழை நின்று விட்டது.   தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.15 க்கு அம்தாரா  என்ற ஊரில்   இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.

சாலை வளைவு நெளிவு இன்றி மைகார் வரை நேர் கோட்டில் இருந்தது.

இருமருங்கிலும் நீண்ட நெடிய மலைத்தொடர் தொடர்ந்து தெரிந்தன.


சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

MP Birla Cement
( https://goo.gl/maps/nVMwPBMLkTUcpBUq8 )



சாலை விரிவாக்கம் செய்யப்பட வில்லை.  இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் வந்தால் ஓரமாக ஒதுங்கிச் செல்வது சிரமமாக இருந்தது.  மழைநீரால் சாலையின் ஓரங்களில் களிமண் வழுக்கியது.



சாலையோரம் இருந்த கோயில் வளாகத்தில் அமர்ந்து, யாத்திரிகர் அனைவரும் காலை உணவு சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம்.  சமையல்காரர்கள் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது சாலையில்  தன்னந்தனியாகக் கணவனும் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.   குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அனுமதிபெற்று,  காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் அந்தத் தம்பதியினரை அழைத்து வந்து அமரச் செய்து அவர்களுக்குக் காலை உணவு வழங்கினார்.   அவர்கள் மிகவும் மகிழ்ந்து சாப்பிட்டனர்.









காலை 10.00 மணிக்கு மைஹார் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம்.  மைஹார் என்ற பெயர் மைகார் (மை+கார்) என்றால் “கருமையான மழைமேகம்” என்று பொருளாகுமா?  
இங்கு மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் நல்ல மழை பெய்தது.

ஊர் எல்லையில் உள்ள "பஞ்சாபி தாபா" முதலாளி யாத்திரிகர்களை வரவேற்று அவரது தாபாவில் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்.

காலையில் வந்து நம்முடன் சாப்பிட்டுச் சென்ற தம்பதியர் யார்? 
அவர்களது பெயர் என்ன? ஊர் எது? எங்கே செல்கின்றனர்? ஏன் வந்தார்கள்?  அவர்கள் சாப்பிட்டுவிட்டு என்ன சொல்லிச் சென்றார்கள்? என்ற விசாரணையில் சமையல்உதவியாளருடன் யாத்திரிகர்கள் ஈடுபட்டனர்.

மதிய உணவு.

ஓய்வு.

இரவு உணவு.

ஓய்வு.

இரவு மணி 9.40 அளவில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம்.  அப்போது அரசியல்வாதி ஒருவர் வாகனத்தில் வந்து இறங்கிக் குருசாமி அவர்களைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டார்.  அவருடன் வந்திருந்தோரின் பேச்சுச் சத்தம் கேட்டுக் குருசாமி அவர்கள் எழுந்து விட்டார்.  வந்திருந்தவரை வரவேற்று விபூதி பிரசாதம் கொடுத்தார்.  பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் எனக் குருசாமி அவரை ஆசீர்வதித்தார்.


https://goo.gl/maps/CUtT14w3a8U9oi8E9

இன்றைய பயண தூரம் சுமார் 24 கி.மீ.

இங்கிருந்து காசி 300 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


செவ்வாய், 1 செப்டம்பர், 2020

02.09.2014 காசி பாதயாத்திரை - 100 ஆம் நாள், ஆவணி 17

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.     இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,   நேற்று முன்தினம் 31.08.2014  கட்னி என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.  நேற்று 01.09.2014 முழு ஓய்வு.

இன்று 100 ஆம் நாள் - 02.09.2014 ஆவணி 17  செவ்வாய்கிழமை. 

தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 2.15 க்கு கட்னி என்ற ஊரில்   இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.

காலை 4.00 மணிக்கு தூறல் ஆரம்பித்து 6.00 மணிக்கு நல்ல மழை பெய்தது. அனைவரும் குடை பிடித்துக்கொண்டு நடந்தோம்.

சமவெளி. வளமான பூமி.

இதில் पाटाल का सन्यासी (Paidhal பைடல் கா சன்னிசி) என்று எழுதப்பெற்றுள்ளது.  पाटाल (Paidhal பைடல்) என்ற சொல் பாதசாரி (pedestrian) என்று பொருள்.  पाटाल का सन्यसे என்றால் “பாதசாரியாகச் செல்லும் சந்நியாசி” என்று பொருள் கொள்ளலாம்.

“பாதாளத்தின் சன்யாசி” என்று எழுதியுள்ளது என்று இந்தி அறிந்த அன்பர்கள் இதை வாசித்து அளித்துள்ளனர்.  அவர்களுக்கு நன்றி.

6.30 am

N.H.7 தேசிய நெடுஞ்சாலை இன்னும் முழுமையாக விரிவுபடுத்தப்படவில்லை. சாலைஆங்காங்கே குண்டுங்குழியுமாக இருந்தது.

நடந்து செல்லும்போது சாலையின் ஓரங்களில் களிமண் வழுக்கியது. நூற்றுக்கணக்கான பசு மாடுகள் ஆங்காங்கே சாலையில் படுத்துக் கிடந்தன.

சாலை வளைவு நெளிவு இன்றி நேர் கோட்டில் இருந்தது.

இருமருங்கிலும் நீண்ட நெடிய மலைத்தொடர்கள் உள்ளன.

சாலையின் ஓரங்களில் மிகவும் பழையான முது மரங்கள் நிறைந்துள்ளதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

7.13 am
"எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தோம், எல்லோரும் ஒருதாய்ப் பிள்ளைகள்". 

கெம்தலை (Kemtalai) என்ற ஊரின் வழியாக காலை மணி 7.00 அளவில் சென்றோம்.    இந்த ஊரில்  சமையல் எரிபொருள் "லீக்கோ"கரி தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.   நிலக்கரி போன்றதொரு அடுப்புக்கரி (லீகோ) உற்பத்தி செய்கின்றனர். இந்த லீகோ அடுப்புக்கரி 1964-68 ஆண்டுகளில் எங்களது வீட்டில் பயன்படுத்தியதைப் பார்த்துள்ளேன். 

லீகோ அடுப்புக்கரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இருவர் அதிகாலை நேரத்தில் எங்களைப் பார்த்தனர். 

 அதில் ஒருவர்  வேகவேகமா ஓடிச் சென்று ரொட்டியும் மிக்சரும் வாங்கிக் கொண்டு வேகவேகமாக ஓடி வந்து யாத்திரிகர்களிடம் கொடுத்தார்.  இருவரும் யாத்திரிகர்களின் பாதங்களை வணங்கி மகிழ்ந்தனர். 

யாத்திரிகர்கள் நடந்து செல்லும் போது தலைக்குமேலே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிட்டனர்.      அவர்கள் இருவரும் மனம் கசிந்து உருகி யாத்திரிகர்களை வணங்கியதை  மற்றபிற யாத்திரிகர்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை.  படம் எடுப்பதற்காக நான் பார்த்த போது, அவர்கள் தலைக்குமேலே குப்பிய கையுடன் நிற்பதைக் கண்டதும் மனம் மிகவும் நெகிழ்ந்து போனேன்.




7.39 am

வழியில் ரொட்டியும் தேநீரும்.


7.42 am

8.19 am

8.46 am

8.56 am
வழியில் சாலையோரம் இருந்த கிராம தெய்வக் கோயில் வளாகத்தில் காலை உணவு.
9.25 am

9.46 am

9.46 am

10.07 am

10.17 am

10.29 am

10.37 am
மத்தியப்பிரதேசத்தில், பதரகதா (पथरहटा,  Patharahata ) என்ற ஊரில்  நவராத்திரி விழாவின் போது வழிபாட்டிற்காகத் துர்கையின் வடிவங்களை ஓர் இளைஞர் செய்து கொண்டிருந்தார்.  தமிழ்நாட்டில்  பெரியபெரிய பிள்ளையார்சிலைகளைச் செய்தவற்காகப் “பிளாஸ்டர் ஆப் பாரிஸ்” பயன்படுத்துகின்றனர்.   ஆனால் இங்கே  கம்பு வைக்கோல்  களிமண் என்ற மூன்றையும் பயன்படுத்தி இயற்கையான முறையில் சுற்றுச்சுழலுக்குச் சிறிதும் பாதிப்பு இல்லாத வகையில் பெரிய பெரிய துர்கை பொம்மைகளைச் செய்கின்றனர்.

10.37 am

11.20 am

எக்கரவாரா என்ற ஊர்கள் வழியாக, பகாரியா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம்.

11.25 am

பகரியா கிராமத்தில் உள்ள அடியார் ஒருவர் சாலையோரம் நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களையும், யாத்திரிகர்களையும் வரவேற்று அழைத்துச் சென்றார்.

11.30 am

02.33 pm

02.33 pm

பகரியா கோயில் வளாகத்தில் ஓய்வு.  கோயில் இடத்தில் பள்ளிக்கூடம் உள்ளது.  கோயில் வளாகமே பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திடலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மதிய உணவு.
உணவிற்குப் பிறகு,  2.30  மணிக்கு அங்கிருந்து யாத்திரையைத் தொடர்ந்தோம்.


5.10 pm
மாலை 5.10 க்கு அம்தரா என்ற ஊர்  வந்து சேர்ந்தோம்.

மாலையிலும் மழை பெய்தது.

அம்தராவில் உள்ள அன்பர் ஒருவர்  யாத்திரிகர்களை வரவேற்று தங்குவதற்கு இடம் கொடுத்தார்.

இரவு உணவு.  ஓய்வு.

இல்லையென மாட்டார் இசைந்து -  கனமழை பெய்தது.  சாலையில் ஓடிய மழைநீர் யாத்திரிகர்கள் தங்கியிருந்த இடத்திற்குள் வந்துவிட்டது.    சணல் சாக்குகளைக் கொண்டு வந்து மழைநீர் தேங்கி நின்ற இடங்களில் போட்டார்கள்.  அதனால் அந்த அறையில் படுத்திருந்த யாத்திரிகர்கள் அடுத்துள்ள அறையில் படுத்திருந்த யாத்திரிகர்களுடன் ஒண்டி முண்டிப் படுத்துக் கொண்டனர்.
        நானும் காசிஸ்ரீ சிவப்பாவும் சாலையோரம் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று தங்கமுடியுமா? எனச் சென்று பார்த்தோம். ஆனால் கோயில் பூட்டப்பட்டிருந்து.  கோயில் அருகே இருந்த வீட்டின் வெளித் திண்ணையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்டோம்.  அவர்கள் வீட்டின் கதவைத் திறந்துவிட்டு, வீட்டிற்குள் உள்ள முன் அறையில் படுத்துக் கொள்ளச் சொல்லி மேஜைமின்விசிறி ஒன்றை வைத்து வசதி செய்து கொடுத்தனர். நாங்கள் இருவரும் அந்த வீட்டிலேயே படுத்துத் தூங்கிக் காலையில் 2.00 மணிக்கு எழுந்து அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு மற்ற யாத்திரிகர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.   மழை தூறிக்கொண்டே இருந்தது.


https://goo.gl/maps/JTGhYn2mYKFJXVHF8

பயண தூரம் 44 கி.மீ.

இங்கிருந்து காசி 328 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்