புதன், 8 ஆகஸ்ட், 2018

08.08.2014, ஆடி 23, 75 ஆம் நாள் யாத்திரை, கீளாப்பூர்

காசிஸ்ரீ பச்கைக்காவடி அவர்களும் 
அவரது அடியார்களும்
இராமேசுவரம் காசி பாதயாத்திரை





ஆடி 23 (08.08.2014)
75 ஆம் நாள் யாத்திரை .
குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
....
ஆடி 23 (08.08.2014)
75 ஆம் நாள் யாத்திரை .

நேற்று முழுவதும் மழை இல்லை , நல்ல வெயில் .
இன்றுதினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.30 க்கு பாட்டன்பூரி என்ற ஊரிலிருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.
வழியில் தேநீர் , காலை குளியல்.
வழிநெடுகிலும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாகவும் குறுகியதாகவும் இருந்தது .
சாலையில் நடப்பது சிரம்மமாகவும் பாதுகாப்பு அற்றதாக வும் இருந்தது .
பிம்பல்குடி, சோனா என்ற ஊர்கள்வழியாக 8.00 மணிக்கு கீளாப்பூர் என்ற ஊர் வந்து சேர்ந்தோம் .
செகதாம்பாள் கோயிலில் தங்கல் .
8.30 க்கு காலை உணவு .
ஓய்வு .
இந்த ஊரில் உள்ள கரூர்தமிழ் அன்பர் வந்து அடியார்களை வரவேற்று உதவிகள் செய்தார் .
ஊர்ப் பெரியோர்கள் சிலர் வந்து குருஜி யிடம் ஆசி பெற்று ச் சென்றனர் .
பயண தூரம் 16 கி.மீ.
செகதாம்பாள் கோயில் உயரமான கருவறை விமானம் .
பெரிய மண்டபம் .
திருவிழாக் காலங்களில் அடியார்கள் வந்து தங்கி வழிபடுவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன .

































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக