09.09.2014, ஆவணி 24, செவ்வாய் கிழமை.
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை,
107ஆவது நாள்.
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை,
107ஆவது நாள்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹனுமானா என்ற ஊரில் இருந்து புறப்பட்டோம். ஊரின் எல்லையின் உத்திரப்பிரதேசம். அதிகாலையில் விடியும் நேரம் உத்திரப்பிரதேசத்திற்குள் நுழைந்தோம்.
மலைத் தொடரின் அடிவாரத்தில் மோகோரை (Mahugari) என்ற ஊரில் ஆற்றின் தென்கரையில் உள்ள Dramandganj துர்கை, அனுமன் கோயிலில் தங்கி இளைப்பாறினோம்.
மாலை நேரம் இங்கிருந்து புறப்பட்டு பரோதா (Belan Baraudha), லால்கஜ் (Lalganj) ஊரிகளின் வழியாகச் செண்பத்பள்ளி என்ற ஊருக்குச் சென்று தங்கினோம்.
மாலை நேரம் இங்கிருந்து புறப்பட்டு பரோதா (Belan Baraudha), லால்கஜ் (Lalganj) ஊரிகளின் வழியாகச் செண்பத்பள்ளி என்ற ஊருக்குச் சென்று தங்கினோம்.
நவராத்திரி விழாவிற்காக குச்சியில் வைக்கோல் சுற்றிக் களிமண்ணால் பூசித் துர்க்கை பொம்மைகள் செய்து கொண்டிருந்தனர்.
ஹனுமானா ஊரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் மலைப் பாதையில் Bhairo Baba Mandir அருகே சென்று கொண்டிருந்த போது யாத்திரிகர்களைக் கண்டு, வண்டியை நிறுத்தி, இறங்கி வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களின் ஆசி பெற்றனர்.
லால்கஞ் ஊரின் எல்லையில் கோலிக்குண்டு விளையாடும் குழந்தை ஒன்றைப் பார்த்தோம்.
இங்கு ஆற்றின் அருகே சிமிண்ட் கால்வாய் கட்டி மிகப் பெரிய அளவில் நீர்ப்பாசனம் செய்து வருகின்றனர்.
https://goo.gl/maps/zF1FQJh6gnE2






















































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக