ஞாயிறு, 28 ஜூன், 2020

29.06.2014 காசி பாதயாத்திரை - 35ஆம் நாள் - ஆனி 15

காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 35ஆம் நாள் - ஆனி 15 (29.06.2014) ஞாயிற்றுக்  கிழமை.

26.05.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்கள் 20 யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையை தொடங்கினார்.  நேற்று முன்தினம் பெங்களூரு எலகங்கா  ஐயப்பன் கோயிலுக்கு வந்து  சேர்ந்தோம்.  நேற்றும் இன்றும் இங்கேயே தங்கியுள்ளோம்.

பெங்களூர் வாசிகள் பலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்த வண்ணம் இருந்தனர்.  குருசாமி அவர்களும் மிகவும் பொறுமையாக அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நல்வழிகாட்டி ஆசிவழங்கிய வண்ணம் இருந்தார்.
காசி பாதயாத்திரை

எனது மின்தமிழ் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள், எனது பேத்தி மற்றும் அவரது உறவினர்களுடன் இன்று (29.06.2014) மாலை எலகங்கா ஐயப்பன் கோயிலுக்கு வந்து  யாத்திரிகர்களை சந்தித்து, 
குருஜி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றார் .

இன்று யாத்திரிகர்களுக்கு  முழு ஓய்வு.
யாத்திரிகர் பலரும் தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர். 

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

சனி, 27 ஜூன், 2020

28.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 21ஆவது நாள், ஆனி 14

பயணக் கட்டுரை - 
அறுபடைவீடு இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
இன்று  21ஆவது நாள், ஆனி 14 ( 28.06.2017) புதன் கிழமை.

எப்போதும்வென்றான் சோலைகோயிலில் இருந்து காலை மணி 3:30 க்கு தினசரி வழிபாட்டை முடித்து, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரை புறப்பட்டோம். 

அறுபடைவீடு பாதயாத்திரை

ஆறுபடைவீடு பாதயாத்திரை


அறுபடைவீடு பாதயாத்திரை

ஆறுபடைவீடு பாதயாத்திரை

அறுபடைவீடு பாதயாத்திரை

வழியில் 7.10க்கு எட்டையபுரம் புறவழிச்சாலையில் தேநீரும் ரொட்டியும் சாப்பிட்டோம்.
காலை மணி 8.20க்கு மணிக்கு சிந்தலக்கரை வெக்காளி அம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம் .
காலை உணவு.
ஓய்வு .
தங்கல் .
ஆறுபடைவீடு பாதயாத்திரை

https://goo.gl/maps/XVPZYeHpky7aKEgR7
இன்றைய பயணம் சுமார் 21 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

28.06.2014 காசி பாதயாத்திரை - 34ஆம் நாள் - ஆனி 14

காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 34ஆம் நாள் - ஆனி 14 (28.06.2014) சனிக் கிழமை.

பெங்களூரு எலகங்கா  ஐயப்பன் கோயிலுக்கு நேற்று வந்து  சேர்ந்தோம்.   இன்று இங்கேயே தங்கியுள்ளோம்.

பெங்களூர் வாசிகள் பலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்த வண்ணம் இருந்தனர்.  குருசாமி அவர்களும் மிகவும் பொறுமையாக அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நல்வழிகாட்டி ஆசிவழங்கிய வண்ணம் இருந்தார்.

இன்று யாத்திரிகர்களுக்கு  முழு ஓய்வு.
யாத்திரிகர் பலரும் தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர். தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் புலிமேல் அமர்ந்து வருவது போன்றதொரு சித்திரம் ஒன்று கோயிலில் வரையப்பட்டிருந்தது.  

குட்டிக்குப் பால் கொடுக்கும் தாய்ப்புலியின் மீது ஸ்ரீ ஐயப்பன் சவாரி ஏறி வருவானா?  பால் கொடுத்து  உதவிட முன்வந்த பெண்புலியை வாகனமாகக் கொள்வாரோ? என்ற ஐயங்கள் என்னிடம் தோன்றின. 
http://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2019/11/blog-post.html

நாளையும் இங்கேயே தங்கல்.
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 26 ஜூன், 2020

27.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 20ஆவது நாள், ஆனி 13

பயணக் கட்டுரை - அறுபடைவீடு இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  20ஆவது நாள், ஆனி 13 ( 27.06.2017) செவ்வாய்க் கிழமை.
வாலசமுத்திரத்தில் இருந்து அதிகாலை மணி 3:20 க்கு தினசரி வழிபாட்டை முடித்து, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரை புறப்பட்டோம்.  காலை மணி 7.10க்கு மணிக்கு எப்போதும்வென்றான் சோலைசுவாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தோம் .

தேநீர், காலை உணவு.
ஓய்வு .
தங்கல் .

கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.


https://goo.gl/maps/2rkDuBRz1CxZ9dd2A
இன்றைய பயணம் சுமார் 15 கி.மீ.






எப்போதும்வென்றான் அருள்மிகு உஜ்ஜினி மாகாளி யம்மன் கோயிலில் இருந்து எப்போதும்வென்றான் கோயிலுக்குச் செல்லும் வழியில் கிரானைட் கற்களால் ஆன செக்குகள் உள்ளன.  இந்தக் கற்செக்குகள் பற்றித் தனியொரு கட்டுரை எழுதியுள்ளேன்.

எல்லாச் சமுதாய மக்களும் மிகவும் ஒற்றுமையாக எப்போதும் வென்றான் கோயிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.   கோயில் தூண்களில் அடியார்களின் சிற்பங்கள் உள்ளன.  எப்போதும்வென்றான் கோயிலைப் பற்றித் தனியொரு கட்டுரை எழுதியுள்ளேன்.



குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

27.06.2014 காசி பாதயாத்திரை - ஆனி 13

பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 33ஆம் நாள் - ஆனி 13 (27.06.2014) வெள்ளிக் கிழமை.

மடிவாலா ஐயப்பன் கோயில் இருந்து தாவரக்கரை ஐயப்பன் கோயிலுக்கு 8.15க்குவந்து சேர்ந்தோம்.

இன்று  தாவரக்கரை ஐய்யப்பன் கோயிலில் (பெங்களூரு) இருந்து காலை 4.05 மணிக்கு பறப்பட்டு 



5.56 am

6.05 am

6.07 am
காலை 6.00 மணி அளவில் மேர்க்கிரி சர்க்கிள் (Mekhri Circle) சாலை வழியாக நடந்து சென்றோம்.


6.19 am

6.21 am


6.25 am
காலை 6.25 மணி அளவில் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரம் வழியாகச் செல்லும் போது ஸ்ரீ ரமண மகரிஷியை நினைத்து வணங்கிக் கொண்டோம்.

6.38 am
வழியில், பேங்களூர் நகரத்தார் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களை வணங்கி ஆசி பெற்றனர்.

6.38 am
6.56 am

7.37 am

8.30 am

8.48 am

எலகங்கா  ஐயப்பன் கோவிலுக்கு 9.15க்கு வந்து சேர்ந்தோம்.  கோயில் தர்மகர்த்தா அவர்கள் சாலையில் நின்று வரவேற்பு அளித்தார்.

காலை உணவு.
இன்றைய பயணம் சுமார் 22 கி.மீ.

ஒய்வு.
இன்றும் நாளையும் நாளைமறுநாளும் இங்கே தங்கல்.

கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/06/32-12-26062014.html
இன்றைய பயணம் சுமார்   கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
----------


வியாழன், 25 ஜூன், 2020

26.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 19ஆம் நாள் - ஆனி 12

பயணக் கட்டுரை - அறுபடைவீடு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

அறுபடைவீடு இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை. 
இன்று 19ஆம் நாள் - ஆனி 12 (26.06.2017) திங்கள் கிழமை.   

தூத்துக்குடி ஸ்பிக் நகரில் இருந்து காலை மணி 3:20 க்குப் புறப்பட்டோம்.  வழியில் சுங்கச்சாலை அருகே தேநீர் .




காலை மணி 8.10க்கு மணிக்கு வாலசமுத்திரம் வந்து சேர்ந்தோம் .
காலை உணவு.
ஓய்வு .


மாலைநேரத்தில் வழிபாடு.


https://goo.gl/maps/VesoFE3a84bXYf238
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

26.06.2014 காசி பாதயாத்திரை - 32ஆம் நாள் - ஆனி 12

பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்

இன்று 32ஆம் நாள் - ஆனி 12 (26.06.2014) வியாழக் கிழமை.

சந்திரபுறா (பெங்களூரு) என்ற ஊரில் இருந்து காலை 3.15 மணிக்கு தினசரி வழிபாடு செய்துமுடித்து ஹார்லிக்ஸ் ரொட்டி சாப்பிட்டுவிடுப் பாதயாத்திரை புறப்பட்டோம்.

6.23 am
திரு, சிவாப்பா அவர்களின் நண்பர்கள் மூவர் சாலையோரம் நின்றிருந்து எங்களை வரவேற்றனர்.  சிறிது தூரம் எங்களுடன் பேசிக்கொண்டே நடந்து வந்து எங்களை வழியனுப்பி வைத்தனர்.

6.31am

6.34 am

7.04 am

7.07 am

7.07 am
வேதமாதா காயத்திரி தேவி கோயில் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டோம்.  
 மடிவாலா ஐயப்பன் கோவிலுக்கு 7.15 க்கு வந்து சேர்ந்தோம்.  சொல்லி வைத்தார்போல், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கோயிலுக்குள் வந்து கும்பிடுவதற்கும், தீபம் காட்டுவதற்கும் சரியாக இருந்தது. பிரசாதம் வழங்கினார்கள்.  இவ்வளவு கனகச்சிதமாக நொடிப்பொழுது நேரம்கூட மாறாமல் தீபம்காட்டிப் பிரசாதம் வழங்கப்பட்டது மனதிற்கு நெகிழ்சியாக இருந்தது.


7.34 am
சாலையோரம் இருந்த ஸ்ரீ ஆஞ்சனேயரைக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வணங்கிக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.

7.35 am

7.38 am

8.12 am

8.12 am
மடிவாலா ஐயப்பன் கோயில் இருந்து தாவரக்கரை ஐயப்பன் கோயிலுக்கு 8.15க்குவந்து சேர்ந்தோம்.
காலை உணவு.
ஒய்வு.

1.08 pm

மின்தமிழ் நண்பர் கவிஞர் கந்தசாமி அவர்கள் வந்திருந்து என்னை வரவேற்றார்.
“ காசிஸ்ரீ பட்டம் வாங்கப் போய்க் கொண்டிருக் கின்றீர்கள் ” என்றார்.  முனைவர் பட்டம் பெற்றதைவிட அரியதொரு பட்டத்தைப் பெறுவதற்காகப் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் மன மகிழ்ச்சி அளித்தது. 
“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”
(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:91)
 இதுவரை நடந்து வந்த களைப்பு இந்த வார்த்தையால் நீங்கிப் புத்துணர்ச்சி உண்டானது.  
குருசாமி அவர்களிடம் கந்தசாமி ஆசிபெற்றுச் சென்றார்.  

மதிய உணவு.
ஓய்வு.

மாலை ஐயப்பன் வழிபாடு.
இரவு உணவு.
ஓய்வு.

2.32 pm

2.32 pm


https://goo.gl/maps/ULTczmLHfrEGQQNJA

இன்றைய பயணம் சுமார்  22 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்