வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

21.08.2015 காசி பாதயாத்திரை

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 12ஆவது வருட இராமேசுவரம் காசி பாதயாத்திரை.

இன்று 21.08.2015 

யாத்திரிகர்கள் சமோகரா என்ற ஊரில் உள்ள அருள்மிகு கிருஷ்ணர் கோயிலில் தங்கி இருந்தோம். 

அங்கிருந்த நதியில் யாத்திரிகர் அனைவரும் நீராடி மகிழ்ந்தனர். 

கிராமத்தினர் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே, வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர்.  அங்கே ஒரு கிணறும் அதன் அருகே ஒரு மரத்தடியில் பீடத்தில் வழிபாடும் செய்து வருகின்றனர்.

அந்தப் பீடத்தில், பார்வதி பரமேசுவரர் ஒன்றாக இருக்கும் சிற்பமும், அருகே நந்தி சிற்பமும் ஒன்றும் சிதைந்த நிலையில் உள்ளன.   இந்த இடத்தில் முன்பு ஒரு பழமையான சிவாலயம் இருந்திருக்க வேண்டும்.






ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தென்காசி பாண்டியர் யார்?

 Balarajeswari Nachiar மற்றும் 

5 பேருடன்

 Muniraj Vanathirayar இருக்கிறார்.

14 ஆகஸ்ட், 2019  · 

தென்காசி பாண்டியர் யார்?.2

•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

அன்பு நண்பர்களே மற்றும் உறவினர்களே தென்காசி பாண்டியரில் ஒரு கிளையார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூரில் ஆட்சி செய்து வந்தனர். அவர்களைப் பற்றி அறிய அதே ஊரிலுள்ள பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலின் சாசனங்கள் உதவுகின்றன. அவற்றை ஆண்டு வாரியாக தற்போது காண்போம்.  

•சாசனங்களில் கரிவலம்வந்தநல்லூரும் பிற ஊர்களும்•

அருள்மிகு ஸ்ரீ.பால்வண்ணநாதர் கோயில் கல்வெட்டுகளில் கரிவலம்வந்தநல்லூரானது,

"ஆரிநாட்டு நிக்ஷேபநதி தெக்ஷணதீரத்து தாவர நல்லூர" -என்றும்,

"ஆரிநாட்டுக் கரிவரநல்லூர்" -என்றும்,

"கருவரைநல்லூர்" -என்றும்,

"ஆரினாடு கரிவரநல்லூர்"-என்றும், பயின்று வந்துள்ளது.  ஆக கரிவரநல்லூர் எனும் பெயரே இன்று மாறி கரிவலம் வந்த நல்லூர் என்று விளங்குவதை அறியமுடிகிறது. 

மேலும் வாசுதேவநல்லூர் எனும் புகழ்பெற்ற பூலித்தேவர் கோட்டை அமைந்திருந்த ஊரானது "ஸ்ரீவாஸூதேவநல்லூர்" என்றும், மணலூரானது, அன்றும் மணலூர் என்றும், பெரும்பத்தூரானது "பெரும்புத்தூர்" என்றும் வழங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது. 

இந்த சாசனத்தில் தற்போது பெருங்கோட்டூர் என வழங்கப்பெறும் ஊரானது, "கொட்டூர்நாடு" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ..

"கொட்டுர்னாட்டு இராச உத்தம நல்லூர்" என்று வழங்கப்படுகிறது. 

இதில் "ஆரியநாடு மல்லயம்பட்டு சயங்கொண்டையான் திருவீதி"- எனும் வாசகமானது இன்றைய ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள  மல்லி எனும் ஊரைக் குறிப்பிடுகிறது. சயங்கொண்டையான் என்பது இங்கு மறவரின் கிளைப்பெயராக அறியப்படுவதாகும் இது ஒரு வீதியின் பெயராக சாசனத்தில்  விளங்குகிறது .

•தேவன்-தேவனார்-தேவநந்தனார்•

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இக் கோயில் கல்வெட்டுகள் இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளபடி,கோச்சடில வர்மனான திரிபுவனச் சக்கரவர்த்தி  குலசேகரத்தேவர் காலமான கி.பி.1402லிருந்து துவங்கி, கி.பி.1652ல் கரிவலம்வந்தநல்லூரின் இறுதி பாண்டியராகக் கருதப்படும் "சீவல மாறவர் குணராமனான பாண்டிய குலசேகர தீட்ஷகர்" காலம் வரையிலும் காணப்படுகின்றன. இவற்றில் பாண்டியர்கள் தங்களது பட்டமான "தேவர்" எனும் பெயரில் தொடர்ச்சியாக 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி 17ம் நூற்றாண்டின் இறுதிவரை இக் கோயிற் சாசனங்களின் வழி அறியப்படுகின்றனர். 

கி.பி. 1402 ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில், 

"கோச்சடில வன்மரான ஸ்ரீ குலசேகர தேவர்" -என்றும், 

கி.பி.1471ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில்,

"நம் 

குமாரன் [அழகன் பெருமாள்] -

ஸ்ரீ வல்லபதேவன்"- என்றும்,

{தென்காசி பராக்கிரம பாண்டியன் மகனாக இருக்கலாம்} காணப்படுகிறது. 

மேலும்,..

கி பி.1544 ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில்,

ஸ்வஸ்திஸ்ரீ 

கோஜடில வன்மரான திரிபுவன-

சக்கரவர்த்தி கோநேரிமை

 கொண்டான் இறந்தகாலம் எடுத்த- பெருமாள் ஸ்ரீ

வல்லபதேவர்க்கு" எனத்தொடங்கி,

"அபிராம பராக்ரம பா[ண்டிய]தேவநந்தநாராந திருநெல்வேலிப் பெருமாளாய நாம்" -எனத் தொடர்ந்து , தேவர் எனவும், தேவநந்தனார் எனவும் பாண்டியன் பட்டம் பயின்று வந்துள்ளது.  இதே கல்வெட்டில்,

"பொன்னன் விகிரமபாண்டிய கொன்"-

"சடையக் கொன்"- அழகன் பெரியான் நல்லான் கொன்" என இடையர்கள் கோன் எனும் சொல்லால் குறிக்கவும் பெறுகின்றனர்.  

பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலின் முதல் பிரகாரத்தின் வடக்குச்சுவரிலுள்ள,

கி.பி.1547 ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில் நாம் சமீபத்தில் வெளியிட்ட சின்னனேந்திர பாண்டியன் செப்பேட்டில் காணப்பெறும் சில வரிகள் அச்சு அசலாக அப்படியே இந்த கோயிலின் சில கல்வெட்டுகளில் படிக்கப்பெறுகின்றன, பெருமாள் பராக்கிரம பாண்டியனின் சாசனமாகக் கருதப்படும் இக்கல்வெட்டு , கீழ்கண்டவாறு பாண்டியன் விருதாவளிகளைப் பயின்று வருகிறது,

"ஸ்ரீ புவனேகவீர சந்த்ரகுலப் பிரதீப ஜெயந்த மங்கலப் புரவராதீஸ்வர க்ஷோமஸூர நாரஸிம்ஹ கேரள தாமோதிவாகர போஜ சுந்ர வட்டவாநல்ல ஸாஹிதம் ஸார்வ பௌம தேவ" -என அவை வருகின்றன. 

இதே ஆண்டிற்குரியதாக அறியப்படும் மற்றொரு  கல்வெட்டில்,

"நம் குமாரன் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவருக்கு" -என்றும்,

"வடமுட்ட நாட்டு அள்ளி குன்ற மா[ர்]த்தானூருடையான் பெருந்தெருவில் 

ஆண்டு கொண்ட நயினான் கடையோக காத்தானுக்கு திருவிலாஞ்சினையும் [கருவெலமும்] காணியாட்சியாகக்  கொ[ண்]டுக் கற்பித்து நம் குமாரன் 

ஸ்வஸ்திஸ்ரீ புவனேகவீர சந்த்ரகுல ப்ரதிவி மதுராமஹேந்த்ர ஜெயந்த மங்கள புரவராதீஸ்வர க்ஷோமஸூர நாராஸிம்ஹ கேரளமோதிவாகர ஸாஹிதம் ஸார்வ பௌம தெய்வப் பிராஹ்மண ஸாபநாசாரிய -

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியதேவ னந்தன் கோஜட்டில்ல வன்மநரான திரிபுவனச் சக்கரவர்த்தி கோ[னேரின்மை கொ]ண்டான்" -என  பாண்டியன் விருதாவளிகளைக்கூறி அவனைத் "தேவநந்தன்" என்கிறது. 

மேலும்,

"ஆண்டு கொண்ட நயினான் கடையோக காத்தான்"  என்று வரும் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள் பற்றியும் இதில் அறிய முடிகிறது.  இவர்களின் நாட்டுப்பகுதி "வடமுட்ட நாட்டு அள்ளி குன்றம்" என வழங்கப்பட்டுள்ளதையும் நம்மால் அறியமுடிகிறது.  

கி.பி.1550 ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில், 

"ஸ்ரீபெருமாள் குலசேகரத்தேவர்"- என்றும்,

கி.பி.1553வது ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில்,

"ஸ்ரீபெருமாள் தன்மப் பெருமாள் குலசேகர தேவர்"- என்றும், பாண்டியன் வழங்கப்பெறுகிறான்.  மேலும் இந்த சாசனத்தில், ..

"குலசேகர மழவராயன்" மற்றும்,

"வாணன் அடைக்கலங்காத்தான்" என இருவர் வருகின்றனர்.  இவர்களும் மறவர் குலத்தவரே என்பதும் உறுதியாகும்.  ஏனெனில் இதே பகுதியில் இன்றும் அம்பாசமுத்திரம் பகுதியில் மழவராயர் என்றும், சங்கரன்கோயில் பகுதியில் வாணாதிராயத்தேவர் என்றும் மறவர்கள் பட்டங்கள் கொண்டு விளங்கிவருகின்றனர். 

கி.பி.1558 மற்றும் 1588,-1595 ம்ஆண்டிற்குரியதான அபிராம வரதுங்கராம வீரபாண்டியத்தேவர் காலத்திலானதென அறியப்படும் கல்வெட்டுகளில், 

நாம் மேற்சொன்ன பாண்டியர் விருத்தாவளிகளுடன்..

 "அபிராம வரதுங்க வீரபாண்டிய 'தேவநாராந' ஸ்ரீபெருமாள் தன்மப் பெருமாள் குலசேகர தேவர்" - என்று பயின்று வருவதைக் காணமுடிகிறது.  மேலும், மறவரில் கண்டித்தேவர் வகையறாக்களைப் பற்றி தென்காசி வட்டாரத்தில் அறிந்து கொண்டுள்ளோம். இந்த சாசனத்தில் குறிக்கப்பெறும் இரவிமாக்குட்டி கண்டி தேவன் அவர்களைச் சேர்ந்தவனாக இருக்கலாம். 

கி.பி.1652ம் ஆண்டிற்குரியதான 17ம் நூற்றாண்டின் காலமாக அறியப்படும் கல்வெட்டில் ,.. 

"சிவல மாறவர் குணராமனான பாண்டிய குலசேகர தீட்ஷகர்" என இதுவரையில் அறியப்பட்ட இறுதிப் பாண்டியன் குறிப்பிடப்படுகிறான்.  இக்கல்வெட்டில் உள்ள மற்றொரு செய்தி, இதில் "வரராம விக்கிறமபாண்டியமூர்த்தி சேர்வைக்காறன்" என்பான் குறிப்பிடப்படுகிறான். இந்த வட்டாரத்தில் சேர்வைக்காரர் என வழங்கியோர் மறவர்களாகவே உள்ளனர். 

பாண்டியன் தனது பட்டமாக இந்த சாசனங்களில்  தொடர்ச்சியாக தேவர்- தேவனார்- தேவனந்தனார் - என,15ம் நூற்றாண்டின்  ஆரம்பத்திலிருந்து 17ம் நூற்றாண்டின் இறுதிவரை  வழங்கி வந்தமையைக் காணும்பொழுது அவனை தேவர் சமூகமாகிய மறவரினத்தவன் என்பதையே இங்கு நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும் திரு.நடன.காசிநாதன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்ற அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர் கதை ஓலை ஆவணத்திலும் பாண்டியனை "கொண்டம கோட்டற் குலம் " என மறவரின் கொண்டையன் கோட்டை  பிரிவைச் சேர்ந்தவனாகத் தெரிவிக்கிறது.  

{ https://m.facebook.com/story.php?story_fbid=2374155959467026&id=100006179355297}

தென்காசி மேலகரத்தில் கண்டறியப்பட்டு திரு. சந்திரவாணன் அவர்களால் படிக்கப்பெற்ற சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு நகலும்

{ https://m.facebook.com/story.php?story_fbid=2295330060682950&id=100006179355297 }

 பாண்டியனை வடகரைப் பாளையக்காரர் உறவினனாகவும்  மறவர்குலத்தவனாகவும் கூறிச் செல்கிறது. 

திருக்குற்றாலநாதர் சன்னதியில் வடகரைப் பாளையக்காரர் பாண்டியருக்கேயுரிய முத்துப்பூணூல் பூண்ட கோலத்தில் சிலையாக இருக்கின்ற காட்சியைக் காணுங்கால் அவர்கள் பாண்டியக் கூட்டத்தவரே என்பதை எளிதாக எவரும் உணரலாம். 

நன்றி!

அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன்





















சனி, 14 ஆகஸ்ட், 2021

காஞ்சி மகாப் பெரியவரின் காசி பாதயாத்திரை, இராமேசுவரத்தில் கங்கா அபிஷேகம்,

தண்டவாளத்தில் நடந்த தண்டபாணி

முகநூலில் நண்பர் Anbudan Balaji  · 14.08.2021 காலை மணி 10.00

அவர்களின் பதிவு இது.

தண்டவாளத்தில் நடந்த தண்டபாணி

நன்றி மறவாமை மஹாபெரியவாளின் சிறப்பு

காசி யாத்திரை செல்ல வேண்டிய சம்பிரதாயங்களைச் செய்து முடித்துவிட்டு,1918 மார்ச் மாதம் ,முறையான யாத்திரையைத் தொடங்கினார்கள் பெரியவா.

இருப்பத்தோரு ஆண்டுகள் புனிதப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திவிட்டு 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரும்பினார்கள் ஸ்வாமிகள்.

காசியிலிருந்து கொண்டுவந்த கங்கா தீர்த்தத்தால் ராமேஸ்வரம் ராம நாதஸ்வாமியை அபிஷேகம் செய்து வைத்தால்தான் அந்த யாத்திரை நிறைவேறும்.

மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் அடைய பாம்பன் கால்வாயை கடக்க வேண்டும். அப்போது பாம்பன் மேல் செல்ல பேருந்து பாலம்கிடையாது. ரயில்வே பாலம் வழியாக நடந்து செல்ல உரிய உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். குப்புஸ்வாமி என்பவரை தென்னிந்திய ரயில்வே தலைமை ஸ்தானமாக விளங்கிய திருச்சிக்கு அனுப்பினார்கள்.

இம்பீரியல் வங்கி அதிகாரி நாராயணஸ்வாமியும் ரயில்வே ஏஜண்டைச் சந்தித்து மடத்தின் சார்பில் ஓர் விண்ணப்பம் கொடுத்தார். இவர் பெரியவாளிடம் அபார பக்தி பூண்டவர். பூஜைப் பெட்டிகளை எடுத்துச் செல்ல தனி ட்ராலி தேவை, பாம்பன் ரயில் பாலத்தின் மீது நடந்து செல்ல அனுமதி

தேவை.....இவைதான் மனுவில் இடம் பெற்றிருந்தன.

இரண்டு தினம் சென்று ரயில்வே அதிகாரியிடமிருந்து பதில் வந்தது.

ஒரு நாற்காலி சுத்தம் செய்யப்பட்டு நான்கு சீடர்களுடன் பூஜைப் பெட்டி பயணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாகவும், ஸ்வாமிகளும் பத்து சீடர்களும் ரயில்வே பாலத்தின் வழியாக நடந்து செல்ல வசதியாக பலகைகள் பொருத்தித் தரப்படும்என்றும் அதில் கண்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் காலை ஒன்பது மணிக்கு மண்டபம் ரயில் நிலையம் வந்து , பத்தரை மணிக்குள் கடந்து சென்றுவிட வேண்டுமென அதில் கண்டிருந்தது.

திட்டமிட்டபடி அக்கரை சேர்ந்த ஸ்வாமிகளுக்கும் சீடர்களுக்கும் ஓர் அதிசயம்!

தலைமை போக்குவரத்து அதிகாரியான ஆங்கிலேயர் பழத் தட்டுடன் ஸ்வாமிகளை வரவேற்று சமர்ப்பித்தார்.

''எல்லாம் சௌகர்யமாகவும் சரியாகவும் நடந்ததா'' என ஆங்கிலத்தில் வினவினார்! அவருக்கு நன்றி சொல்லும்படி குப்புஸ்வாமி ஐயரைப் பணித்தார்கள்.

இப்படி சங்கல்பித்தப் புனிதப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியதும், ஸ்வாமிகள் குப்புஸ்வாமி அவர்களிடம் இரண்டு பட்டுத்துணிகளும், பழ வகைகளும் கொடுத்து, ''இந்தப் ப்ரசாதங்களை மண்டபம் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் திருச்சி அதிகாரிக்கும் கொடுத்துவிட்டுவா'' என்றார்கள்.

நன்றி மறவாமை என்பது பெரியவாளின் ஓர் அங்கம்!

பெரியவாளைப் பற்றி பேசுவதற்கு கூட அவரோட அனுக்ரஹம் இருக்க வேண்டும்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

காலடி சங்கர காஞ்சி சங்கர 

காமாஷி சங்கர காமகோடி சங்கர

சதாசிவ சங்கர சந்திரசேகர சங்கர

மதுரகாளிதாசன்

சனி, 7 ஆகஸ்ட், 2021

காசியில் சாட்சி கணபதி

சாட்சி கணபதி



Elangovan Ks  அவர்களின் முகநூல் பதிவு இது. 7 ஆகஸ்ட், 2020  · 

காசியில் பிரதானமாக  56 விநாயகர் கோயில் உள்ளது. காசிக்கு செல்பவர்கள் இந்த விநாயகரை அவசியம் தரிசிப்பார்கள். ஏனெனில் இந்த சாக்ஷி கணபதி கோயில் விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. நாளை சித்ரகுப்தன்   புண்ணிய கணக்கு போடுகையில்  நம்மை ஆம் இவர் சுவாமியை தரிசனம் செய்ய காசிக்கு வந்தார் என்று சாக்ஷி சொல்வாரம் ஆதலால் இவருக்கு சாக்ஷி கணபதி  என்று சொல் வழக்கு... நன்றி சந்திரசேகர் ஸ்வாமி,காசி ...

வியாழன், 8 ஜூலை, 2021

రామేశ్వరం కాశీ, పాదచారులు, వలయపట్టి, సిద్ధార్, కాశీ శ్రీ, పచై కవడి, యాత్ర, యాత్రాసంబంధం



వలయపట్టి సిద్ధర్, కాశీశ్రీ, పచ్చక్కవడి అయ్య 11 వ వార్షిక రామేశ్వరం కాశీ పాథాత్రి - 110 రోజులు - 7 రాష్ట్రాలు - 2464 కి.మీ ప్రయాణం.

ఈ రోజు 45 వ రోజు - 09.07.2014 బుధవారం.

రామేశ్వరానికి చెందిన అరుల్మిగు రామనాథస్వామిని ఆరాధించిన తరువాత 26.05.2014 న పచైకావది 20 మంది భక్తులతో తన కాశీ-పాథయాత్రిని ప్రారంభించారు.

నిన్న పాదచారులు ఆంధ్రప్రదేశ్ లోని పమిడి బందూరాగన్ విట్టలార్ ఆలయానికి చేరుకుని బస చేశారు.

నిన్న పండుగ రెండవ రోజు.

ఈ రోజు పండుగ మూడవ రోజు.

మేము ఈ రోజు కూడా ఆలయ వివాహ హాలులో ఉంటున్నాము.

పూర్తి విశ్రాంతి.


మేము ఆలయంలో పూజలు చేశాము.

రివర్సల్స్ జరుగుతున్నాయి.

తిరుమాల్ యొక్క పది అవతారాలు ఆలయ రాజగోపురం ప్రవేశద్వారం వద్ద చెక్కబడ్డాయి. వేదిక పైభాగంలో అనంతసయనప్ పెరుమాల్ యొక్క చిన్న శిల్పం ఉంది.

ద్వార బాలగర్, అంజనేయార్, గరుడ మొదలైన దేవతలు కూడా అద్భుతంగా వాస్తవికంగా ఉన్నారు.

ఆలయం లోపల పాము ఆరాధన యొక్క శిల్పాలు ఉన్నాయి.

కలియపెరుమల్ అలియాస్ కాసిశ్రీ తోప్పై, కాసిశ్రీ షణ్ముగవేలు కలిసి చిత్రాన్ని తీశారు.


తిరు కాసిశ్రీ శివప్ప తప్ప మిగతా వారందరూ భోజనానికి హాజరయ్యారు. తిరు శివప్ప జ్వరంతో బాధపడ్డాడు. అతను కూడా ఒక దుప్పటి చుట్టి నిద్రపోయాడు. ఇతర ప్రయాణికులను తినడానికి పిలిచినప్పుడు, మీ ముఖాన్ని కప్పే దుప్పటి తీయండి, మీరు వెళ్లి తినండి. అతను నన్ను తినవద్దని చెప్పి పడుకున్నాడు. తిరు శివప్ప తప్ప, మేమంతా భోజనం ముగించి కాసేపు మాట్లాడాము. అప్పుడు నేను శివప్ప దగ్గరకు వెళ్లి తీర్థయాత్రల సమయంలో ఆకలితో ఉండవద్దని చెప్పి, అతని చేతిని తీసుకొని ఎత్తాను. అతని శరీరం అగ్నితో ఉడకబెట్టింది. అధిక జ్వరం. వెంటనే కురుసామి పచ్చక్కవాడి వారికి సమాచారం ఇవ్వడంతో మేము వారికి జ్వరం మాత్ర ఇచ్చి తినమని చెప్పాము. అతను మాత్ర తిని ప్యాక్ చేసి తిరిగి మంచానికి వెళ్ళాడు.

సాయంత్రం బ్రెడ్ టీ.

ఎర్ర జ్వరం తగ్గలేదు.

కాశిశ్రీ ధనశేఖరన్ తెలుగులో శివప్పతో మాట్లాడారు. డాక్టర్ దగ్గరకు వెళ్లి చూపించడం మంచిది అనిపించింది. ధనశేఖరన్ శివపాన్ని చికిత్స కోసం సమీపంలోని వైద్యుడి వద్దకు తీసుకువెళ్ళాడని కురుసామి వారికి చెప్పారు.

విందు. ఎరుపు కొద్దిగా తిన్నది.

ఈ రోజు రాత్రి బజ్నాలో జరిగిన పండుగ మూడవ రోజు కొంతమంది యాత్రికులు హాజరయ్యారు.

విశ్రాంతి.

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/09072014-45-25.html

కురుసామి కాసిశ్రీ పచ్చక్కవతి వారి గురువు మరియు అరుల్మిగు కాశివిసువనాథర్ తిరువారూల్ మనందరికీ.

ప్రియమైన

కాశ్రీ, పిహెచ్‌డి, ఎన్.ఆర్.కె. காளைராசன்

रामेश्वरम काशी, पैदल यात्री, वलयापट्टी, सिद्धर, काशी श्री, पचाई कावड़ी, यात्रा, यात्रा वृतांत,



 वलयापट्टी सिद्धर, कसीश्री, पचैककवाड़ी अय्या की 11वीं वार्षिक रामेश्वरम काशी पथयात्री - 110 दिन - 7 राज्य - 2464 किमी यात्रा।

आज 45वां दिन है- 09.07.2014 बुधवार।

रामेश्वरम के अरुल्मिगु रामनाथस्वामी की पूजा करने के बाद २६.०५.२०१४ को पचैकवाड़ी ने २० भक्तों के साथ अपनी काशी-पथयात्री शुरू की।

कल पैदल यात्री आंध्र प्रदेश के पामिडी बंदुरगन विट्टलर मंदिर पहुंचे थे और रुके थे।

कल उत्सव का दूसरा दिन था।

आज पर्व का तीसरा दिन है।

हम आज भी मंदिर के वेडिंग हॉल में ठहरे हुए थे।

पूर्ण विश्राम।


हमने मंदिर में पूजा की।

उलटफेर चल रहे थे।

थिरुमल के दस अवतारों को मंदिर के राजगोपुरम के प्रवेश द्वार पर उकेरा गया था। मंच के शीर्ष पर अनंतशयनप पेरुमल की एक छोटी मूर्ति थी।

द्वारा बालागर, अंजनेयर, गरुड़ आदि के देवता भी आश्चर्यजनक रूप से यथार्थवादी थे।

मंदिर के अंदर नाग पूजा की मूर्तियां थीं।

कालियापेरुमल उर्फ ​​कसीश्री थोप्पई और कसीश्री शनमुगावेलु ने एक साथ तस्वीर ली।


थिरु कसीश्री सिवप्पा को छोड़कर, अन्य सभी दोपहर के भोजन के लिए आए थे। थिरु सिवप्पा बुखार से पीड़ित थे। वह भी कंबल में लिपटा हुआ था और सो रहा था। जब अन्य यात्रियों को खाने के लिए बुलाया जाता है, तो अपने चेहरे को ढकने वाले कंबल को हटा दें, और तुम जाओ और खाओ। उसने मुझे खाने के लिए नहीं कहा और लेट गया। थिरु सिवप्पा को छोड़कर, हम सभी ने दोपहर का भोजन किया और कुछ देर बात की। फिर मैं शिवप्पा के पास गया और उसे तीर्थयात्रा के दौरान भूखा न रहने के लिए कहा, और उसका हाथ पकड़ कर उठा लिया। उसका शरीर आग से उबल रहा था। अत्यधिक बुखार। तुरंत कुरुसामी पचैक्कवडी ने उन्हें सूचित किया और हमने उन्हें बुखार की गोली दी और उन्हें खाने के लिए कहा। उसने गोली खा ली और पैकअप करके वापस बिस्तर पर चला गया।

शाम को रोटी की चाय।

लाल बुखार कम नहीं हुआ।

कसीश्री धनसेकरन ने सिवप्पा से तेलुगु में बात की। डॉक्टर के पास जाना और दिखाना बेहतर लगा। कुरुसामी ने उन्हें बताया कि धनसेकरन शिवपा को इलाज के लिए पास के डॉक्टर के पास ले गए थे।

रात का खाना। लाल ने थोड़ा खाया।

कुछ तीर्थयात्री आज रात बाजना में उत्सव के तीसरे दिन शामिल हुए।

आराम।

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/09072014-45-25.html

कुरुसामी कासिश्री पचैकावती हम सभी के लिए उनके गुरु और अरुल्मिगु कासिविसुवनथर थिरुवरुल बनें।

प्रिय

कसीश्री, पीएच.डी., एन.आर.के. ்

Valayapatti Siddhar, Kasisree, Pachaikkavadi Aiya's 11th Annual Rameswaram Kasi Pathayathri - Travel.



Valayapatti Siddhar, Kasisree, Pachaikkavadi Aiya's 11th Annual Rameswaram Kasi Pathayathri - 110 Days - 7 States - 2464 km Travel.

Today is the 45th day - 09.07.2014 Wednesday.

After worshiping Arulmigu Ramanathaswamy of Rameswaram On 26.05.2014, Pachaikavadi started his Kasi-Pathayathri with 20 devotees.  

yesterday the pedestrians had arrived the Pamidi Banduragan Vittalar Temple in Andhra Pradesh and stayed.

Yesterday was the second day of the festival.

Today is the third day of the festival.

We were still staying in the temple wedding hall today.

Full rest.

We worshiped at the temple.

Reversals were underway.

The ten incarnations of Thirumal were carved at the entrance of the Rajagopuram of the temple. At the top of the stage was a small sculpture of Ananthasayanap Perumal.

The deities of Dwara Balagar, Anjaneyar, Garuda etc. were also wonderfully realistic.

Inside the temple were sculptures of serpent worship.

Kaliyaperumal alias Kasisree Thoppai and Kasisree Shanmugavelu took the picture together.

Except Thiru Kasisree Sivappa, all others were turned up for lunch. Thiru Sivappa was suffering from fever. he was also well wrapped in a blanket and asleep. When the other travelers are called to eat, take off the blanket that covers your face, and you go and eat. He told me not to eat and laied down. Except for Thiru Sivappa, we all finished lunch and talked for a while. Then I went near Sivappa and told him not to starve during the pilgrimage, and took his hand and lifted it. His body boiled with fire. Excessive fever. Immediately Kurusami Pachaikkavadi informed them and we gave them the fever pill and told them to eat. He ate the pill and packed up and went back to bed.

Bread and tea in the evening.

Kasisree Dhanasekaran spoke to Sivappa in Telugu. It seemed better to go to the doctor and show up. Kurusami told them that Dhanasekaran had taken Sivapa to a nearby doctor for treatment.

dinner. Thiru Sivappa ate a little.

Some of the pilgrims attended the third day of the festival tonight in Bajna.

Rest.

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/09072014-45-25.html

Kurusami Kasisree Pachaikkavati Be their Guru and Arulmigu Kasivisuvanathar Thiruvarul to all of us.

Dear

Kasisree, Ph.D., N.R.K. காளைராசன்

புதன், 7 ஜூலை, 2021

08.07.2014, రామేశ్వరం కాశీ మార్గం యాత్రి, వలయపట్టి సిద్ధర్, కాశ్రీ పచైక్వాడి, ప్రయాణం, ప్రయాణం,


వలయపట్టి సిద్ధర్ కాశ్రీ పచైకావాడి అయ్య 11 వ వార్షిక రామేశ్వరం కాశీ పాథాత్రి - ప్రయాణ వ్యాసం - 110 రోజులు - 7 రాష్ట్రాలు - 2464 కి.మీ. ప్రయాణం.

7 సంవత్సరాల క్రితం అదే రోజున ....

ఈ రోజు 43 వ రోజు - సోమవారం 23 వ తేదీ (07.07.2014) సోమవారం.

26.05.2014 న మేము రామేశ్వరం అరుల్మిగు రామనాథస్వామిని ఆరాధించడం ద్వారా కాశీ-పాథతిరాను ప్రారంభించి నిన్న ఆంధ్రాలోని మారురులో వచ్చి బస చేసాము.

ఈ రోజు తెల్లవారుజామున 3.25 గంటలకు పూజలు ముగించిన తరువాత, మేము బ్రెడ్ హార్లిక్స్ తిని మరుర్ నుండి బయలుదేరాము.

దారిలో, 8.30 గంటలకు అనంతపూర్ రౌండ్అబౌట్ వద్ద అల్పాహారం.

ఉదయం నుండి తీవ్రమైన వడదెబ్బ. మేము ఉదయం 11.10 గంటలకు రాప్టాడు పట్టణం మీదుగా ఇస్కాన్ సమీపంలోని సోమలతోట్టి అంజనేయర్ ఆలయానికి చేరుకున్నాము.

భోజనం

విశ్రాంతి.

తెల్లవారుజామున 3.15 నుండి రాత్రి 11.15 వరకు సూర్య నడక తరువాత 8 గంటలు. వేగంగా ప్రయాణించే కొందరు ప్రయాణికులు ఉదయం 10.30 గంటలకు వచ్చారని చెప్పారు. ఉదయాన్నే ఉదయించే ఎండలో నడుస్తుండగా యాత్రికులు అందరూ అలసిపోయారు.

ఒక పులి (మగ కోతి) ఒక చెట్టు కొమ్మపై నిద్రిస్తున్నది.

శ్రీ అంజనేయార్ యొక్క సాయంత్రం ఆరాధన. ఇక్కడ సాయంత్రం 6.00 నుండి 9.30 వరకు విద్యుత్తు అంతరాయం. సాయంత్రం పూజలు ముగిసిన కొద్దిసేపటికే, కురుసామి పచైకావాడి రథం డ్రైవర్‌తో వారి వద్దకు వచ్చారు. వాహనం యొక్క యాక్సిలరేటర్ పనిచేయడం లేదని, అతను వాహనాన్ని ఇలా నడపలేనని చెప్పాడు. కురుసామి కూడా పట్టణంలోకి వెళ్లి మరమ్మతులు చేయటానికి ప్రజలను తీసుకురావాలని చెప్పాడు. వారు కూడా వచ్చి బండి హుడ్ తిప్పి కొత్త యాక్సిలరేటర్ కేబుల్ పెట్టారు. బండి ఇప్పుడు బాగా నడుస్తోంది. దీని తరువాత అందరూ విందు తిని పడుకున్నారు.

కానీ కురుసామి పచ్చక్కవతి వారితో పడుకోవడమే కాదు, డ్రైవర్‌ను కూడా తీసుకొని బండి ఉన్న ప్రదేశానికి వెళ్లి బండిని బయటకు తీయమని చెప్పాడు. కారు బాగా నడుస్తుందని, దాన్ని బయటికి తీసుకెళ్లవలసిన అవసరం లేదని, కారు ఇంజిన్ మాత్రమే ఉందని డ్రైవర్ చూపించాడు. కురుసామి కూడా వచ్చి అతన్ని బాగుంటే బాగుంటుందని చెప్పి విసిరాడు.

విశ్రాంతి.

నేటి ప్రయాణం సుమారు 29 కి.మీ.

మరిన్ని చిత్రాలు లింక్‌లో ఉన్నాయి.

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/07072014-43-23.html

కురుసామి కాసిశ్రీ పచ్చక్కవతి వారి గురువు మరియు అరుల్మిగు కాశివిసువనాథర్ తిరువారూల్ మనందరికీ.

ప్రియమైన

కాశ్రీ, పిహెచ్‌డి, ఎన్.ఆర్.కె. காளைராசன்

०८.०७.२०१४, रामेश्वरम काशी पथ यात्री, वलयापट्टी सिद्धर, कसीश्री पचैकवाड़ी, यात्रा, यात्रा, अंजनेयर मंदिर, सोमलाथोट्टी, मारूर, बामिडी,

 


वलयापट्टी सिद्धर कसीश्री पचैकवडी अय्या की 11वीं वार्षिक रामेश्वरम काशी पथयात्री - यात्रा लेख - 110 दिन - 7 राज्य - 2464 किमी यात्रा।

इसी दिन 7 साल पहले....

आज 44वां यात्रा दिवस है - मंगलवार 24 (08.07.2014) मंगलवार।

काशीश्री पचैककवाड़ी ने 26.05.2014 को अरुलमिगु रामनाथस्वामी की पूजा के बाद रामेश्वरम - काशी-पथयात्री की शुरुआत की।

हम आंध्र प्रदेश के सोमलाथोट्टी में श्री अंजनेयर मंदिर में आए और रुके। हमने आज तड़के 3.10 बजे सुबह की पूजा समाप्त की, हॉर्लिक्स की रोटी खाई और मारूर से निकल पड़े।

अन्नाथनवंडी को सुबह पहुंचने में थोड़ी देर हो गई थी। सुबह करीब 6.15 बजे कई श्रद्धालु सड़क किनारे लेट गए और सो गए। रथ सुबह सात बजे पहुंचा। हमने सड़क किनारे बस स्टॉप पर बिस्किट और चाय खाई और अपनी यात्रा जारी रखी।

उन्होंने चार लेन की सड़क को चौड़ा करते हुए छोटी-छोटी पहाडि़यों को काट दिया है। बाढ़ के दौरान पहाड़ कटी हुई चट्टानों से आच्छादित थे।

कार्डिन्ना शहर के पास सुबह 8.30 बजे रास्ते में नाश्ता।

चार लेन की सड़क बनाते समय सड़क के बीचोबीच एक फीट ऊंची दीवार ली जाती है। इसलिए अगर आप आस-पास के स्थानों पर जाना चाहते हैं, तो आपको एक तरफा सड़क में लगभग 10 किमी का सफर तय करना होगा। आपको अपने निकट स्थान तक पहुँचने के लिए लंबी दूरी तय करनी होगी और वापस आना होगा। इससे बचने के लिए वाहन चालक एकतरफा सड़क पर विपरीत दिशा में वाहन चला रहे हैं।

चार लेन विस्तार के कारण लंबी दूरी की गाड़ियां आराम से तेजी से आगे बढ़ रही हैं। लेकिन आसपास के गांवों को सड़क के दूसरी तरफ के शहरों तक पहुंचने के लिए एकतरफा सड़क पर लंबी दूरी तय करनी पड़ती है। इसलिए वे सड़क के नियमों का उल्लंघन कर सड़क के विपरीत दिशा में वाहन चला रहे हैं।

कलिंगथु परानी में तमिलनाडु और कलिंगम के बीच की नदियों का उल्लेख है। महिला का छह बार उल्लेख किया गया है।

"बाला रुकुसैत तलाइपोन मुकारिप पलवा रूपतरन तेलुगोल लियनुम

नाला रुमगन रोरूपेन नयनम नादिया रुकतन तुनातन तूदान।

वायला रूपुकुन तुमनिप पुनालवई मन्ना रुवलंग केलुकुन रियानम

बेयाला रूपारण तुनिरैन तुवरम पेरा रुमिलिन तातुपीर पदवे।

गोटा नदी पंबा नदी की एक सहायक नदी है

ध्वनि जल प्रदूषण के बाद ओडा वरुणथी योरूको तमाइयुटन ”

   (कलिंगथु परानी - गीत 56 - 58 -)

आज, हम काशी पथयाथिरा के दौरान ''लड़की नदी'' को पार कर गए और पामिडी पहुंचे, जो नदी के उत्तरी तट पर है। नदी में पानी नहीं था, वह सूखा था।

हम सुबह 10.10 बजे पामिडी के ''बंदुरगन विट्टलर मंदिर'' पहुंचे।

इस दिन मंदिर में उत्सव का दूसरा दिन आयोजित किया गया था। स्वामी आज करुधा-वकनम में प्रस्थान कर रहे हैं।

बाजना।

पूजा.

आराम।

मंदिर में दोपहर का भोजन।

रात में मंदिर में गोष्ठी हुई।

आज का सफर करीब 27 किलोमीटर का है।

अधिक तस्वीरें लिंक में हैं।

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/08072014-44-24.html

गुरु काशीश्री पचैकावती हमें आशीर्वाद दें।

भगवान अरुल्मिगु कासिविसुवनाथर हमें आशीर्वाद दें।

आपका अपना

कसीश्री, पीएच.डी., एन.आर.के. ்

செவ்வாய், 6 ஜூலை, 2021

07.07.2014 वलयापट्टी सिद्धर, काशरी, पचैकवाड़ी, रामेश्वरम काशी पथात्री - यात्रा लेख - यात्रा,


 वलयापट्टी सिद्धर कसीश्री पचैककवाड़ी अय्या की 11वीं वार्षिक रामेश्वरम काशी पथयात्री - यात्रा लेख - 110 दिन - 7 राज्य - 2464 किमी यात्रा।

इसी दिन 7 साल पहले....


आज 43वां दिन है - सोमवार 23वां (07.07.2014) सोमवार।

२६.०५.२०१४ को हमने रामेश्वरम अरुलमिगु रामनाथस्वामी की पूजा करके काशी-पथयाथिरा की शुरुआत की और कल आंध्र के मारुरु में आकर रुके।

आज तड़के 3.25 बजे प्रात:कालीन पूजा समाप्त कर हमने हॉर्लिक्स की रोटी खाई और मारूर से निकल पड़े।

रास्ते में 8.30 बजे अनंतपुर चौराहे पर नाश्ता किया।

सुबह से ही तेज धूप है। हम राप्तडु शहर से होते हुए सुबह 11.10 बजे इस्कॉन के पास सोमलाथोटी अंजनेयर मंदिर पहुंचे।

दोपहर का भोजन

आराम।

सुबह 3.15 बजे से रात 11.15 बजे तक सन वॉक, इसके बाद 8 घंटे। कुछ तेज-तर्रार यात्रियों ने कहा कि वे लगभग 10.30 बजे पहुंचे थे। सुबह के समय उगते सूरज में टहलते हुए सभी तीर्थयात्री थक गए थे।

एक बाघ (नर बंदर) एक पेड़ की शाखा पर सो रहा था।

श्री अंजनेयर की शाम की पूजा। यहां शाम छह बजे से साढ़े नौ बजे तक बिजली गुल रहती है। शाम की पूजा समाप्त होने के कुछ ही समय बाद, कुरुस्वामी पचैकवड़ी रथ के चालक के साथ उनके पास आए। उन्होंने कहा कि वाहन का एक्सीलेटर काम नहीं कर रहा था और वह इस तरह वाहन नहीं चला सकता था. कुरुसामी ने उन्हें शहर में जाकर मरम्मत करने के लिए लोगों को लाने के लिए भी कहा। उन्होंने भी आकर गाड़ी का हुड घुमाया और एक नया एक्सीलरेटर केबल लगा दिया। गाड़ी अब ठीक चल रही थी। इसके बाद सभी ने खाना खाया और सोने चले गए।

लेकिन कुरुसामी पचैकवती न केवल उनके साथ सोई, बल्कि ड्राइवर को भी ले गई और उससे कहा कि जहां गाड़ी थी वहां जाकर गाड़ी को बाहर निकालो। ड्राइवर ने दिखाया कि कार अच्छी चल रही थी और उसे बाहर ले जाने की कोई जरूरत नहीं थी, केवल कार का इंजन था। कुरुसामी भी आया और उसे यह कहते हुए फेंक दिया कि अगर वह अच्छा था तो वह सही था।

आराम।

आज का सफर करीब 29 किलोमीटर का है।

अधिक तस्वीरें लिंक में हैं।

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/07072014-43-23.html

कुरुसामी कासिश्री पचैकावती हम सभी के लिए उनके गुरु और अरुल्मिगु कासिविसुवनाथर थिरुवरुल बनें।

प्रिय

कसीश्री, पीएच.डी., एन.आर.के. ்

07.07.2014 వలయపట్టి సిద్ధర్, కాశ్రీ, పచైకావాడి, రామేశ్వరం కాశీ పాథాత్రి - ప్రయాణ వ్యాసం - ప్రయాణం,

 


వలయపట్టి సిద్ధర్ కాశ్రీ పచైకావాడి అయ్య 11 వ వార్షిక రామేశ్వరం కాశీ పాథాత్రి - ప్రయాణ వ్యాసం - 110 రోజులు - 7 రాష్ట్రాలు - 2464 కి.మీ. ప్రయాణం.

7 సంవత్సరాల క్రితం అదే రోజున ....


ఈ రోజు 43 వ రోజు - సోమవారం 23 వ తేదీ (07.07.2014) సోమవారం.

26.05.2014 న మేము రామేశ్వరం అరుల్మిగు రామనాథస్వామిని ఆరాధించడం ద్వారా కాశీ-పాథతిరాను ప్రారంభించి నిన్న ఆంధ్రాలోని మారురులో వచ్చి బస చేసాము.

ఈ రోజు తెల్లవారుజామున 3.25 గంటలకు పూజలు ముగించిన తరువాత, మేము బ్రెడ్ హార్లిక్స్ తిని మరుర్ నుండి బయలుదేరాము.

దారిలో, 8.30 గంటలకు అనంతపూర్ రౌండ్అబౌట్ వద్ద అల్పాహారం.

ఉదయం నుండి తీవ్రమైన వడదెబ్బ. మేము ఉదయం 11.10 గంటలకు రాప్టాడు పట్టణం మీదుగా ఇస్కాన్ సమీపంలోని సోమలతోట్టి అంజనేయర్ ఆలయానికి చేరుకున్నాము.

భోజనం

విశ్రాంతి.


తెల్లవారుజామున 3.15 నుండి రాత్రి 11.15 వరకు సూర్య నడక తరువాత 8 గంటలు. వేగంగా ప్రయాణించే కొందరు ప్రయాణికులు ఉదయం 10.30 గంటలకు వచ్చారని చెప్పారు. ఉదయాన్నే ఉదయించే ఎండలో నడుస్తుండగా యాత్రికులు అందరూ అలసిపోయారు.

ఒక పులి (మగ కోతి) ఒక చెట్టు కొమ్మపై నిద్రిస్తున్నది.

శ్రీ అంజనేయార్ యొక్క సాయంత్రం ఆరాధన. ఇక్కడ సాయంత్రం 6.00 నుండి 9.30 వరకు విద్యుత్తు అంతరాయం. సాయంత్రం పూజలు ముగిసిన కొద్దిసేపటికే, కురుసామి పచైకావాడి రథం డ్రైవర్‌తో వారి వద్దకు వచ్చారు. వాహనం యొక్క యాక్సిలరేటర్ పనిచేయడం లేదని, అతను వాహనాన్ని ఇలా నడపలేనని చెప్పాడు. కురుసామి కూడా పట్టణంలోకి వెళ్లి మరమ్మతులు చేయటానికి ప్రజలను తీసుకురావాలని చెప్పాడు. వారు కూడా వచ్చి బండి హుడ్ తిప్పి కొత్త యాక్సిలరేటర్ కేబుల్ పెట్టారు. బండి ఇప్పుడు బాగా నడుస్తోంది. దీని తరువాత అందరూ విందు తిని పడుకున్నారు.

కానీ కురుసామి పచ్చక్కవతి వారితో పడుకోవడమే కాదు, డ్రైవర్‌ను కూడా తీసుకొని బండి ఉన్న ప్రదేశానికి వెళ్లి బండిని బయటకు తీయమని చెప్పాడు. కారు బాగా నడుస్తుందని, దాన్ని బయటికి తీసుకెళ్లవలసిన అవసరం లేదని, కారు ఇంజిన్ మాత్రమే ఉందని డ్రైవర్ చూపించాడు. కురుసామి కూడా వచ్చి అతన్ని బాగుంటే బాగుంటుందని చెప్పి విసిరాడు.

విశ్రాంతి.


నేటి ప్రయాణం సుమారు 29 కి.మీ.

మరిన్ని చిత్రాలు లింక్‌లో ఉన్నాయి.

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/07072014-43-23.html

కురుసామి కాసిశ్రీ పచ్చక్కవతి వారి గురువు మరియు అరుల్మిగు కాశివిసువనాథర్ తిరువారూల్ మనందరికీ.

ప్రియమైన

కాశ్రీ, పిహెచ్‌డి, ఎన్.ఆర్.కె. காளைராசன்

திங்கள், 5 ஜூலை, 2021

06.07.2014 - రామేశ్వరం కాశీ (వారణాసి) - యతిరాయ్ - ప్రయాణ వ్యాసం - 110 రోజులు - 7 రాష్ట్రాలు - 2464 కి.మీ. ప్రయాణం.

 వలయపట్టి సిద్ధర్ కాశ్రీ పచైకావాడి అయ్య 11 వ వార్షిక రామేశ్వరం కాశీ పాథాత్రి - ప్రయాణ వ్యాసం - 110 రోజులు - 7 రాష్ట్రాలు - 2464 కి.మీ. ప్రయాణం.

7 సంవత్సరాల క్రితం అదే రోజున ....

ఈ రోజు 42 వ రోజు - 22 వ ఆదివారం (06.07.2014) ఆదివారం.



26.05.2014 న రామేశ్వరం అరుల్మిగు రామనాథస్వామిని ఆరాధించడం ద్వారా కాశీ-పాథయాత్రిని ప్రారంభించారు.

నిన్న, మేము ఆంధ్రప్రదేశ్ లోని గుత్తూ రు చేరుకుని బస చేశాం.

ఈ రోజు తెల్లవారుజామున 3.25 గంటలకు పూజలు ముగిసిన తరువాత, మేము బ్రెడ్ హార్లిక్స్ తిని కొడూరు నుండి బయలుదేరాము.

దారిలో, ఉదయం 6.40 గంటలకు, ఎరంపల్లి బస్ స్టాండ్ వద్ద బ్రెడ్ మరియు టీ తిని, మా ట్రెక్ కొనసాగించాము.


ఉదయం 8.30 గంటలకు పెనుబోలు పట్టణంలోని బస్‌స్టాప్‌లో అల్పాహారం.

మిస్టర్ శివప్ప నిన్న ఈ సమయంలో మొబైల్ ఫోన్ అదృశ్యమైనందుకు ఆందోళన చెందారు. ఇప్పుడు మిస్టర్ శివప్ప ఆందోళన చెందలేదు.

మేము చెఫ్, కలైరసన్, శివప్ప మరియు అన్నాధన కారు నడుపుతున్న ఫోటో తీశాము.


వారు తమ అల్పాహారం ముగించి నడుచుకుంటూ వెళుతుండగా, కురుసామి పచ్చైకావతి వారు దాటిన బండ్లలో ఒకటి ఆగిపోయింది. అక్కడి నుంచి ఒక భక్తుడు కుటుంబంతో కలిసి వచ్చాడు. కురుసామి పచ్చక్కవతి వారి పాదాలకు నమస్కరించారు. కురుసామి కుటుంబాన్ని ఆశీర్వదించి విబుధి నైవేద్యం అర్పించారు.

కుటుంబం కూడా యాత్రికులతో కలిసి నడిచింది. కంగనపల్లి పట్టణానికి సమీపంలో ఉదయం 10.00 గంటలకు పెరుమాళ్ ఆలయానికి చేరుకున్నాము.

కంగనపల్లి ఆలయం చాలా సౌకర్యవంతంగా మరియు శుభ్రంగా ఉండేది.

ఇది పురాతన శాసనాలు మరియు పవిత్ర శాసనాలు నిండి ఉంది.


కంగనపల్లి ఆలయ ప్రాంగణంలో భోజనం.

మేము భోజనం తరువాత 2.00 గంటలకు తీర్థయాత్ర నుండి బయలుదేరాము.

సాయంత్రం 4.10 గంటలకు మేము రోడ్డు పక్కన కూర్చుని, బ్రెడ్, టీ తిని మా తీర్థయాత్ర కొనసాగించాము.

సాయంత్రం 5.00 గంటలకు మరురు చేరుకున్నాము.

మేము ఇక్కడి పాఠశాలలోనే ఉన్నాము.


నేటి ప్రయాణం సుమారు 34 కి.మీ.

మరిన్ని చిత్రాలు లింక్‌లో ఉన్నాయి.

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/06072014-42-22.html


కురుసామి కాశ్రీశ్రీ పచ్చక్కవాడి మరియు అతని పవిత్రత అరుల్మిగు కశివిశ్వనాథర్ యొక్క గురువు అవ్వండి.

ప్రియమైన

కాశ్రీ, పిహెచ్‌డి, ఎన్.ఆర్.కె. காளைராசன்

வியாழன், 10 ஜூன், 2021

சிமிண்ட் இல்லாத செங்கல் பாலம்

சிமிண்ட் இல்லாத செங்கல் பாலம்

மதுரை மஹால் சிமிண்ட், இருப்புக் கம்பிகள், மரம் பயன்படுத்தப் படாமல் செங்கலையும் சுண்ணாம்பையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது.   1904ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் சிமிண்ட் உற்பத்தி தொடங்கியுள்ளது.  அதற்கு முன் கட்டப்பெற்ற கட்டிடங்கள் பாலம் என அனைத்தும் சிமிண்ட் இரும்புக்கம்பி பயன்படுத்தப்படாமலேயே கட்டப்பெற்றுள்ளன.  இவ்வாறகாகக் கட்டப்பட்ட பாலங்கள் இன்றும் உள்ளன.

இப்போது சீனா 200 மில்லியன் டன் சிமிண்ட் உற்பத்தி செய்து உலகளவில் முதலிடம்  வகிக்கிறது.  அடுத்தபடியாக இந்தியா உள்ளது.  இந்தியாவில் தயாரிக்கப்படும் சிமிண்ட் 95%  உள்நாட்டில் உள்ள கட்டுமானத்திற்கே பயன்படுத்தப்படுகிறது.  5% மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்திய சிமென்ட் உற்பத்தித் தொழிலில் 132 பெரிய சிமென்ட் ஆலைகள் உள்ளன.  ஆகஸ்ட் 31, 2008 கணக்கின்படி இந்தியாவின் சிமிண்ட் உற்பத்தித் திறன் 204.29 மில்லியன் டன் ஆகும் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

இப்போது போக்குவரத்து அதிகமாகி வாகனங்களின் எண்ணிக்கை கூடுதலான காரணத்தினால்  சாலைகளை அகலப்படுத்தி வருகின்றனர்.   சாலைகளை அகலப்படுத்தும் போது சிறிய பாலம் கட்டுவதற்குக் கூட சிமிண்ட்டையும் இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சிமிண்ட் மற்றும் இருப்புக்கம்பிகளைப் பயன்படுத்தாமல்,  உள்ளூரில் உள்ளூர் மக்களால் சூளையில் தயாரித்துச் சுட்டெடுக்கப்பட்ட செங்கலையும், உள்ளுர் தயாரிப்பான  சுண்ணாம்பையும் மட்டுமே பயன்படுத்தி, உள்ளூர்  கொத்தனார்களால் கட்டப்பெற்ற பாலம் இது.    100 வருடங்களுக்கும் மேலாகச் சிதையாமல் அப்படியே உள்ளது.  

எதையும் தொழிற்சாலையில் தயாரித்து, அதை விலை கொடுத்து வாங்காத காலம் அது.  எல்லாப் பாலங்களையும் சிமிண்ட்டில்தான் கட்டவேண்டும் என்றில்லாமல் சிறுசிறு கட்டுமானங்களை உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு, உள்ளூர் தயாரிப்பான செங்கற்களைக் கொண்டே கட்டினால் சாதாரண மக்களும் பயனடைவர் அல்லவா?








சனி, 27 மார்ச், 2021

1832 காசி யாத்திரை - ஏனுகுல வீராசாமி

முகநூல் நண்பர் Jagan Nath அவர்களின் பதிவு இது  (27.03.2021)

 Chandrapraba Ramakrishnan  எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து

ஏனுகுல வீராசாமி  ஆளுமை

காசி யாத்திரை என்ற1832இல் வெளியான நூலே தமிழின் முதல் பயண இலக்கியமாகக் கருதப்படுகிறது. இதை எழுதியவர் ஏனுகுல வீராசாமி . இவர் சென்னையில் வசித்தவர்.








1830ம் வருஷம் மே மாதம் 18ம் தேதி இவர் மதராஸிலிருந்து காசி யாத்திரைக்குப் புறப்பட்டார். ஒரு வருஷம் மூன்று மாதங்கள் நீண்ட இந்தப் பயணம் செப்டம்பர் 1831ல் முடிவு பெற்றது. தனது பயண அனுபவத்தை அவர் குறிப்பேட்டிலும் கடிதங்கள் வழியாகவும் எழுதி வந்தார். தெலுங்கில் இவர் எழுதிய குறிப்புகளைப் பனையூர் வெங்குமுதலி தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். இந்தப் பயண நூலின் ஆங்கிலப் பிரதி தற்போது கிடைக்கிறது. ஆனால் தமிழ் பிரதியைக் கண்டறியமுடியவில்லை. ஒருவேளை பழைய நூலகம் எதிலாவது இருக்ககூடும்

ஏனுகுல வீராசாமியின் தந்தை கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்தவர். வீராசாமியின் ஒன்பது வயதில் அவரது தந்தை இறந்து போனார். தாய் தான் அவரை வளர்த்து படிக்க வைத்தார். பனிரெண்டு வயது வரை படித்த வீராசாமி சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் சிறப்பாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார். இவரது பன்மொழிப்புலமையால் துபாஷி வேலை கிடைத்தது. திருநெல்வேலி கலெக்டரிடன் துபாஷியாகச் சில காலம் வேலை செய்திருக்கிறார். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்து அதில் பணியாற்றி வந்தார்.

இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி ஆங்கில அதிகாரி ஒருவர் வீராசாமிக்குத் தங்கத்தில் பொடி டப்பா செய்து பரிசளித்திருக்கிறார். குண்டூர் பஞ்சம் வந்தபோது இவர் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்து உதவியிருக்கிறார். மதராஸில் வசித்த இவர் கல்விப்பணியினை முன்னெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறார். செல்வந்தரான இவர் தண்டையார்பேட்டையில் வசித்திருக்கிறார்

தெலுங்கில் எழுதப்பட்ட இந்தப் பயணநூல் தமிழில் தான் முதலில் வெளியாகியிருக்கிறது. பின்பு மராத்தியில் வெளியாகியிருக்கிறது. அதன் பிறகே இந்த நூல் தெலுங்கில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் அவரே சில அத்தியாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆனால் அதை முடிக்க முடியவில்லை. தற்போது சீதாபதி மற்றும் புருஷோத்தம் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

இவரது காசி யாத்திரை நூலின் வழியே 1830 காலகட்டத்தில் வாழ்க்கை முறையினைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாகப் பயண வழிகளில் உள்ள இடர்கள், பயண ஏற்பாடுகள். ஆலயங்களின் சிறப்பு. உணவு வகைகள். கலைகள். மற்றும் பண்பாட்டுச் சிறப்புகள், சந்தை மற்றும் சுங்கச்சாவடிகள் குறித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

இவருடன் பயணத்தில் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களும் உடன் சென்றிருக்கிறார்கள். இரண்டு பல்லக்கில் அவர்கள் செல்ல பின்னால் நான்கு மாட்டுவண்டிகளில் சுமைகள் ஏற்றப்பட்டு வந்திருக்கின்றன. பயணத்தில் தனது பாதுகாப்பிற்காகப் பத்துபேரை வேலைக்கு வைத்திருக்கிறார் வீராசாமி. அவர்களுக்கு மாதம் ஏழு ரூபாய் சம்பளம். இவர்களுடன் கூடாரம் அமைக்க நாலு தனி ஆட்கள். சுமைகளை ஏற்றிச் செல்ல ஆறு மாடுகள். அதைப் பராமரிக்க இரண்டு ஆட்கள். காட்டுவழியில் பயணம் செய்யும் போது வழிகாட்டுவதற்காகப் போஸ்டல் ரன்னர் ஒருவர், வழிப்பறிக் கொள்ளையர்களுக்குப் பயந்து ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களையும் தனி ஊதியம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார். இப்படி ஒரு பட்டாளமே ஒன்று சேர்ந்து பயணம் செய்திருக்கிறார்கள்.

வழியில் கூடாரம் அமைத்துத் தங்கிக் கொள்ளத் தேவையான பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். சுகமாகப் படுத்து உறங்க மடக்கு கட்டிலையும் கூட மாட்டு வண்டியில் கொண்டு போயிருக்கிறார் வீராச்சாமி.

பல்லக்கிலும் மாட்டுவண்டியிலும் சில இடங்களில் குதிரை வண்டியிலும் பயணம் செய்த வீராசாமி மதராஸிலிருந்து புறப்பட்டுத் திருப்பதி, கடப்பா அகோபிலம், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர், பிரயாக், காசி, பாட்னா, கயா ராஜ்மகால், கிருஷ்ணாநகர், கல்கத்தா, கோபால்பூர், கட்டக். பூரி, சில்கா ஏரி கஞ்சம், பெர்காம்பூர், ஸ்ரீகாகுளம் ,நெல்லூர், சூளுர்பேட்டை, பொன்னேரி வழியாக மதராஸ் திரும்பி வந்திருக்கிறார்.

இந்தப் பயணத்திற்கு எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறார் என்ற தகவல் இதில் இடம்பெறவில்லை. ஆனால் போகிற இடமெல்லாம் காசை தண்ணீராகச் செலவு செய்திருக்கிறார். கோவில்களுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார். நகைகள். பட்டு உடைகள் வாங்கித் தானம் அளித்திருக்கிறார். கோவிலில் முன்னுரிமை பெறுவதற்காகப் பூசாரிகளுக்குக் கைநிறைய பணம் கொடுத்திருக்கிறார். போகும் இடத்திற்கு முன்பே ஆட்களை அனுப்பித் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வைத்திருக்கிறார். சிலரை இதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டும் பணி அமர்த்தியிருக்கிறார். நீதிமன்றத்தில் பணியாற்றியவர் என்பதால் பல இடங்களில் நீதிபதிகள் இவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். ஜமீன்தார்களின் மாளிகைகளில் தங்கியிருக்கிறார். பயண வழியில் சிலருக்கு உடல் நலம் சீர்கெட்டிருக்கிறது. பல்லக்குத் தூக்கிகள் சிலருக்குக் குளிரால் காய்ச்சல் கண்டிருக்கிறது. அவர்களுககு நாட்டுமருந்து கொடுத்து அவரே குணமாக்கியிருக்கிறார்

மாட்டுவண்டிக்காரன் ஒருவனுக்கு மேகநோய் வந்திருக்கிறது. அவனை மட்டும் அவரால் குணப்படுத்த முடியவில்லை. வழியிலே அவனை நிறுத்தி ஊர் திரும்ப வைத்திருக்கிறார்கள்.

வழியில் மலேரியா தாக்கி பலரும் நோயுற்றார்கள். இருவர் இறந்து போனார்கள். தனது பயணத்தின் போது கிடைத்த அனுபவத்தைக் கடிதங்களாக நண்பருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்தக் கடிதங்களைத் தொகுத்தே இந்த நூலை உருவாக்கியிருக்கிறார்கள்

தனது பயண அனுபவத்தில் திருடன் கூடப் பண்புள்ளவனாக நடந்து கொண்டிருக்கிறான். பெரிய மனுசன் போன்ற தோற்றம் கொண்டவன் தான் நிறைய இடங்களில் சூது செய்து ஏமாற்றியிருக்கிறான் என்கிறார் வீராசாமி.

பாட்னாவில் காகங்களுக்குப் பயந்து ஆட்கள் சுற்றிலும் காவலுக்கு நில்லாமல் மக்கள் பொதுஇடத்தில் சாப்பிட முடியாது. வானில் நூற்றுக்கணக்கான காகங்கள் வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும். ஏமாந்த நேரம் உணவைக் கவ்விக் கொண்டுபோய்விடும். ஆகவே சாப்பிடுகிறவர் இலையை ஒட்டி ஒரு ஆள் கையில் கோலோடு நின்று கொண்டிருப்பார். அவரது வேலை காக்கா விரட்டுவது என்று ஒரு இடத்தில் வீராசாமி குறிப்பிடுகிறார்.

பயண வழியில் இவரது பல்லக்குத் தூக்குகளுக்கு மோசமான தண்ணீரைக் குடித்துச் சளி இருமல் வந்திருக்கிறது. அவர்களுக்கு வைத்தியம் செய்து நலமாகும் வரை ஒரே இடத்தில் தங்கியிருக்கிறார்.

அந்த நாட்களில் திருப்பதி எப்படி இருந்தது என்பதை வாசிக்க வியப்பாக இருக்கிறது. 1830களில் இருநூறு ரூபாய் கொடுத்துச் சிறப்புப் பூஜை செய்திருக்கிறார் வீராசாமி.

அன்றைய ஹைதராபாத் நிஜாமில் வேறு பணம் புழக்கத்திலிருந்தது. மதராஸின் ஒரு ரூபாய் அங்கே ஐம்பது பைசா மட்டுமே. பணம் கொடுத்துச் சில்லறை வாங்கினால் ரூபாய்க்கு பத்து காசு கமிஷனாக எடுத்துக் கொள்ளும் பழக்கமிருந்தது. ஹைதராபாத்தில் வெள்ளைக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் சாலையிருந்தது. அதில் இந்தியர்கள் செல்ல அனுமதி கிடையாது.

காய்கறிகள் பழங்கள் யாவும் ஹைதராபாத்தில் விலை மிக அதிகம். மாட்டுவண்டிகளில் விறகு ஏற்றிக் கொண்டு போனால் கூட அதற்குச் சுங்கம் வசூலிக்கிறார்கள் என்கிறார் வீராசாமி.

வீராசாமியின் விவரிப்பில் வழியெல்லாம் மரங்கள் அடர்ந்த சாலையின் பிம்பமே மனதில் ஆழமாகப் பதிகிறது. அது போலவே சிறிய கிராமங்களின் எளிய வீடுகள். ஏழைகளின் நிலை, அடர்ந்த காடுகள். மழையில் பெருகிய வெள்ளம் வடியும் வரை ஆற்றைக் கடக்க முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை. கரடுமுரடான பாதையில் செல்லும் பயணம். இதமான மாலை நேரக்காற்று. குடிநீருக்கான போராட்டம் இவை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. பயண வழியில் நல்ல வெற்றிலை கிடைக்கவில்லை என்று புலம்பியிருக்கிறார் வீராசாமி

மதராஸ் ராணுவம் நாக்பூருக்கு வரும் வரை அங்கிருந்தவர்களுக்குப் புளியை உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது. புளிப்புக்கு தயிரை தான் சேர்த்துக் கொள்வார்கள். மதராஸ் ராணுவத்தினருக்காகவே புளியை உணவில் சேர்த்துச் செய்யும் பழக்கம் உருவானது. இதுபோலவே இரவில் மோர் குடிக்கப் பயப்படுவார்கள். ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பதே காரணம். தனது பல்லக்கு வழியில் உடைந்து போனதால் புதிய பல்லக்கு ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார் வீராசாமி. அதன் விலை நூறு ரூபாய்.

அன்றைக்குச் சென்னையிலிருந்த வீடுகளிலே மிகப்பெரியது அய்யாபிள்ளையின் வீடு. இது போலவே ஆங்கிலேயர்களின் குடியிருப்பில் மிகப்பெரியது ஜே.மூரத்தின் மாளிகை என்கிறார் வீராசாமி. இருவருமே இன்று நினைவிலிருந்து மறைந்து போய்விட்டார்கள். மதராஸ் சின்னஞ்சிறிய கிராமங்களை உள்ளடக்கியதாக வெளிப்படும் சித்தரிப்பு அழகாக உள்ளது..

வீராசாமியின் பயணத்தின் வழியே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளுக்கு இருந்த செல்வாக்கும் அதிகாரமும் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. போகிற இடத்தில் எல்லாம் அவருக்கு வெள்ளை அதிகாரிகள் உதவி செய்கிறார்கள். துணையாட்களை அனுப்பி வைக்கிறார்கள். அவரும் கம்பெனி அதிகாரிகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். ராணுவ அதிகாரிகளுக்குப் பரிசுகள் வழங்கியிருக்கிறார்.

அன்று நிலவிய சாதியக் கட்டுப்பாடுகள். ஒடுக்குமுறைகள் பற்றியும் இந்தப் பயணத்தின் ஊடாக நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.

இன்றிருப்பது போலப் பயணவழியில் தங்குமிடங்களோ, உணவகங்களோ வாகன வசதிகளோ இல்லாத காலத்தில் இப்படி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருப்பது புதிய அனுபவத்தையே நமக்கு அறிமுகம் செய்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி எப்படி இந்தியாவைச் சுரண்டி வாழ்ந்திருக்கிறது என்பதற்கு அவர்களின் சுங்கசாவடிகள். ராணுவ தலையீடுகள். ஆட்சி முறை பற்றிய தகவல்களே சாட்சி. ஏனுகுல வீராசாமி சித்தரிக்கும் பயண வழிகள். இடங்கள் யாவும் காலத்தில் மறைந்தும் மாறியும் விட்டன. 190 ஆண்டுகளுக்கு முன்னுள்ள இந்திய வாழ்க்கையின் எளிமை மட்டுமில்லை அதன் அறியாமைகளும் சேர்ந்தே இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது

புதன், 10 பிப்ரவரி, 2021

ஸ்ரீ வில்வம் அண்ணா அவர்களின் காசி பாதயாத்திரை

 Saraswathi ThyagarajanSage of Kanchi in FaceBook

11/02/2021

🌿🌿🌿💐💐💐🌿🌿🌿




ஸ்ரீ வில்வம் அண்ணா வரலாறு 

இயற் பெயர் ஸ்ரீதர வாசுதேவன் {ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி இரண்டாம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி} சுபகிருது வருடம் ஆனி மாதம் பூச நட்சத்திரத்தில் தமிழ் மாதம் இருபதாம் தேதி ஸ்ரீமதி ஜய லக்ஷ்மி, ஸ்ரீமத் அருணாசல தம்பதிகளுக்கு வேப்பத்தூரில் ஆறாவது புத்திரராக பிறந்தார்.

தந்தையின் சொந்த ஊர் திருவிடைமருதூர். தந்தை மேட்டூர் அணையில் பணி புரிந்தார். தாயார் கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் பிறந்தார். இந்த தம்பதிகளுக்கு மொத்தம் பதிமூன்று பேர். உடன் பிறந்தவர்கள் அனைவரும் படிப்பில் சூற புலிகள். வில்வம் அண்ணாவை தவிர அனைவரும் தங்கப்பதக்கம் பதக்கம் பெற்றவர்கள். வில்வம் அண்ணா பி.எஸ்.சி, டிப்ளமா படித்துள்ளார். பத்து ஆண்டு காலம் சென்னை, பெங்களுர் மற்றும் மும்பையில் பணியாற்றினார். அதற்கு பிறகு துபாயில் ஐந்து வருடங்கள் பணியாற்றினார். மஹா பெரியவாளின் பரம பக்தராக இருந்தார். தனது நாற்பத்தி ஐந்தாவது வயதில் மயிலாப்பூரில் தனது தாயாருடன் குடி ஏறினார். இவர் ஒரு பிரம்மச்சாரி. 

அப்போது முதல் காபாலீஸ்வரரிடம் சரணாகதி அடைந்தார். எப்போதும் கபாலீஸ்வரர் கோவிலில் பாராயணம் செய்து கொண்டு இருப்பார். சிதம்பர நடராஜர் கோவிலில் வில்வம் அண்ணா பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு. இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டு முதல் யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருக்க தொடங்கினார். எல்லாவற்றையும் எழுதி தான் காட்டுவார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈச்சங்குடி சென்றார். ஈச்சங்குடியில் விநாயகர் அசரீரியாக உத்தரவு கிடைத்ததின் பேரில் அங்கிருந்து காசி செல்ல தீர்மானித்தார். சுமார் பதிமூன்று ஆண்டுகள் மௌனமாகவே இருந்த இவர் தற்போது மௌனத்தை கலைத்து காசி செல்லும் யாத்திரையை பற்றியும் சற்று பார்ப்போம். 

ஈச்சங்குடியில் இருந்து பாத யாத்திரையை, செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி தொடங்கினார். ஈச்சங்குடியில் இருந்து ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரையை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பாத யாத்திரையை மேற்கொண்டார். அநேகமாக அடியேனின் கணக்கு படி பார்த்தால் தை மாதம் பொங்கல் அன்று காசியில் இருப்பார் என்று நினைக்கிறேன். தொடர்ந்து நூற்றி பத்தொன்பது நாட்கள் நடந்து காசி தீர்த்த யாத்திரையை மிக நல்ல முறையில் காசிக்கு சென்றடைந்தார். {அடியேன் இந்த கட்டுரையை எழுத தொடங்கிய போது வில்வம் அண்ணாவின் நூற்றி ஒராவது நாள்} இன்னும் காசி செல்வதற்கு சுமார் ஐநூறு கிலோ மீட்டருக்கு மேல் உள்ளது. இவர் செல்லும் நோக்கம் என்ன என்றால் இந்த கொடுமையான கொரானா நோய் இந்த உலகை விட்டு செல்ல வேண்டும் என்பதே. என்ன ஒரு சங்கல்பம் பாருங்கள். இவர் காசி செல்வதற்குள் அநேகமாக முக்கால் வாசி கொரானா பயம் போய் விட்டது. *எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் வள்ளரசு நாடாக இருந்தாலும் கோவிட் மருந்து இந்தியாவில் தான் கண்டு பிடிக்க பட்டு இன்று உலகம் முழுவதும் நம் பாரத தேசத்தில் இருந்து தான் மருந்து உலகத்திற்கே சென்று கொண்டு இருக்கிறது.* இதெல்லாம் நடக்கிறது என்றால் இந்த பாரத தேசத்தில் இது போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் என்பது இதுவே ஒரு உதாரணம். ஏன் என்றால் காலம் அப்பேர் பட்ட காலம். எல்லாம் ஆடம்பர வாழ்கை ஆகி விட்டது. பணம் மட்டுமே பிரதானமாக ஆகி விட்டது. கலி முந்திக் கொண்டு இருக்கிறது என்று நன்றாக தெரிகிறது. இந்த முற்றிய கலிகாலத்தில் நாம் எல்லோரும் சௌக்யமாக இருக்கிறோம் என்றால் வில்வம் அண்ணா போன்றவர்கள் இருப்பதால் தான். வில்வம் அண்ணாவின் இந்த பெறும் முயற்சியால் நாம் எல்லோரும் பரம சௌக்யமாக இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.... மொத்தம் நூத்தி பத்தொன்பது நாட்களில் இரண்டாயிரத்தி எட்நூறு கிலோ மீட்டர் நடந்துள்ளார் வில்வம் அண்ணா....

வில்வம் அண்ணா காசியில் இருந்து அயோத்தி பாதயாத்திரையாக சென்றடைந்துள்ளார்.  காசியில் ஶ்ரீமத் பாகவதம் பாராயணம் முடித்தார். அயோத்தியில் ஒரு பத்து நாட்கள் ஶ்ரீ இராமாயணம் பாராயணம் செய்ய இருக்கிறார். பாராயணம் முடிந்த பிறகு மீண்டும் காசிக்கு செல்ல அருள்கிறார். பின் அங்கிருந்து மீண்டும் சென்னை வந்து சென்னையில் இருந்து ஈச்சங்குடி சென்று மீண்டும் மயிலாப்பூர் வந்த பிறகு தனது மௌனத்தை தொடர உள்ளார் ஸ்ரீ வில்வம் அண்ணா. இந்த கலியுகத்தில் இப்படி பட்ட மஹானை நாம் தரிசித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காசியில் இருந்து அயோத்யா பாத யாத்திரையாக செல்ல தொடங்கய வில்வம் அண்ணா இன்று [09.01.21] இரவு சுமார் எட்டரை மணி அளவில் அயோத்யா சென்றடைந்தார் வில்வம் அண்ணா. ஈச்சங்குடியில் இருந்து ராமேஸ்வரம் வழியாக நூத்தி பத்தொன்பது நாட்களில் இரண்டாயிரத்தி எட்நூறு கிலோ மீட்டர் நடந்துள்ளார் வில்வம் அண்ணா தற்போது ஒன்பது நாட்களில் காசி முதல் அயோத்யா வரை இருநூத்தி பத்து கிலோ மீட்டர் தூரத்தை ஒன்பது நாட்களில் சென்றடைந்துள்ளார். ஆக மூவாயிரத்தி பத்து கிலோ மீட்டர் தூரத்தை நூத்தி இருபத்தி எட்டு நாட்களில் சென்றுள்ளார் வில்வம் அண்ணா. இதில் காசியில் இருபது நாட்கள் கூடுதலாக தங்கி இருந்த வில்வம் அண்ணா ஶ்ரீமத் பாகவத பாராயணம் செய்துள்ளார். ஆக மொத்தத்தில் நூத்தி நாற்பத்தி எட்டு நாட்களாக லோக ஷேமத்திற்காக தனி மனிதரின் முயற்சிக்கு நாம் அனைவரும் அவருக்காக இந்த நேரத்தில் நமஸ்கரிக்க வேண்டும். அடியேனின் முதல் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

🙏🙏🙏 ஹர ஹர மகாதேவ ஸம்போ காசி விஸ்வதாத கங்கே 🙏🙏🙏

அனைவருக்கும் நமஸ்காரங்கள்....

பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்.... சிவ சிவ.... ராம் ராம்....

புதன், 7 அக்டோபர், 2020

08.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 136 ஆம் நாள், புரட்டாசி 22

 ஆறு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் .......

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை -  குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து   சாலைவழியாக இராமேசுவரத்திற்குப் புறப்பட்டு 06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்ந்தார்கள். வரும் வழி நெடுகிலும், பாதயாத்திரையின்போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி கொண்டு வந்து சேர்ந்தனர்.

இராமேசுவரத்தில் 07.10.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் கங்காதீர்த்தம் அபிஷேகம் செய்து இராமநாதசுவாமியையும் பர்வதவர்த்தனி அம்பாளையும் வழிபாடு செய்து கொண்டனர்.     

இன்று  136 ஆம் நாள் - புரட்டாசி 22 (08.10.2014)  பிள்ளையார்பட்டியில் வழிபாடு.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

12.08.2014 காசி பாதயாத்திரையில் ஓர் அதிசயம்

காசி பாதயாத்திரையில் ஓர் அதிசயம் 
ஆனால் உண்மை
அனைத்தும் ஆனைமுகத்தான் அருள்

காசி புனித பாதயாத்திரையில் ஓர் அற்புத நிகழ்ச்சி - 

    வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, ஆடி 27 (12.08.2014) செவ்வாய்கிழமை மகாராஷ்டிர மாநிலம் கண்கட்டி (kankati) என்ற ஊரில் உள்ள  (https://goo.gl/maps/YHvDWMNx9fMYHg4D7) ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து புறப்பட்டு  சுமார் 25 கி.மீ. யாத்திரை மேற்கொண்டு புட்டிபூரி (Butibori) என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம்.  https://goo.gl/maps/78SuewjLEePP2NLU6

 அந்த ஊரில் உள்ள மருத்துவர் ஒருவரின் மகனும் அவரது நண்பர்களும் சாலையோரம் நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றனர். அந்த மருத்துவருக்குச் சொந்தமான நீண்ட பெரிய அடுக்குமாடி வணிக வளாகம் சாலையோரம் இருந்தது.  அந்தக் கட்டிடத்தில் தங்கினோம்.  கட்டிடப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.      மதிய உணவிற்குத் தேவையான காய்கறிகள், சமையல் எண்ணைய், குடிதண்ணீர் இவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தனர்.  குறிப்பாக மதுரை காசிஸ்ரீ கந்தசாமி அவர்களுக்கு வெற்றிலையும் பாக்கும் தேடிப்பிடித்து வாங்கி வந்து கொடுத்தனர்.

மாலைநேரத்தில் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான அந்த மருத்துவரும் அவரது நண்பர்கள் சிலரும் வந்து குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றனர்.  நீண்ட  நேரம் குருசாமி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். 

அந்த மருத்துவர் மிகப் பெருஞ் செலவில் இந்த வணிக வளாகத்தைக் கட்டியுள்ளார்.  முக்கால்வாசி வேலைகள் முடிவடைந்தநிலையில்,  உள்ளூர் அரசியல் வாதியிடமிருந்து மிரட்டல்,  அந்த இடத்தை தொழிற்சாலை வளாகமாக மாற்றித் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும்,  அதனால் இந்தக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்தி இடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.   மருத்துவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.   வாய்தா எல்லாம் வாங்கி முடித்தபின்னர்,  வழக்கறிஞர் இதை சட்டப்படி மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.  தீர்ப்பும் அப்படியே வழங்கப்பட்டுள்ளது.    அதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார்.   அங்கும் அரசுக்குச் சதாகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

இனி எந்தவொரு நாளிலாவது அரசு தரப்பில் ஆட்கள் வந்து கட்டிடங்களை இடித்துத் தள்ளுவார்கள் என்ற நிலை.   அந்நாளில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இராமேசுவரத்தில் இருந்து காசிக்குப் பாதயாத்திரை சென்றுள்ளார்.

இந்த ஊரில் சாலையோரம் உள்ள இந்தக் கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் சும்மா கிடந்துள்ளது.  இங்கே சென்று யாத்திரிகர்களுடன் தங்கியுள்ளார்.  யாத்திரிகர்கள் வந்து கட்டிடத்தில் தங்கியுள்ள செய்தியை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் வழியாகச்  சொல்லி அனுப்பி யுள்ளார்.   செய்தி அறிந்த அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான மருத்துவர்,  நேரில் வந்து குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

அப்போது, இந்தக் கட்டிடம் பெரும் பொருட் செலவில் கடன்வாங்கிக் கட்டப்பெற்றுள்ளதையும்,  நீதிமன்றங்களில் அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த நாளிலும் இந்தக் கட்டிடம் இடிக்கப்படலாம் என்ற தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

அது கேட்ட குருசாமி பச்சைக்காவடி அவர்கள், இங்கே எங்களைத் தங்கும்படிச் செய்தவர் பிள்ளையார் ஆவார்.  பிள்ளையார் எங்களை இங்கே தங்கச் சொல்லித்தான் நாங்கள் இங்கே தங்குகிறோம்.  நீங்களும் முழு நம்பிகையுடன் 108 நாட்கள் பிள்ளையாரைத் தினமும் வழிபாடு செய்து வாருங்கள்.  இந்தக் கட்டிடம் உங்கள் கையை விட்டுப் போகாது என்று கூறி ஆசீர்வதித்துள்ளார்.

நீதிமன்றங்கள் எல்லாம் கைவிரித்துவிட்ட இந்த இக்கட்டான நிலையில்,  எல்லாமும் முடிந்துவிட்டது என்ற நிலையில்,  இனிமேல் கட்டிடத்தை இடிப்பதுதான் பாக்கி என்ற நிலையில், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கூறிய இந்தச் சொற்கள் மட்டுமே ஆதரவாக இருந்துள்ளன.

அரும்பாடு பட்டுக் கட்டிய கட்டிடம் இடிபடக்கூடாது, என் உழைப்பில் கட்டிய அந்தக் கட்டிடம் என்றும் என்னிடமே இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அந்த மருத்துவர் தினமும் பிள்ளையாரை வழிபட்டு வந்துள்ளார்.

கட்டிடத்தை இன்று இடிப்பார்கள், நாளை இடிப்பார்கள் என்று நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றுள்ளன.  அரசியலில் திடீர் மாற்றமாக அந்த ஊரில் இருந்த மற்றொருவர் பதவியேற்க, அவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் தொழில்வளாகம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி அதைக் கொண்டுபோய் அரசிடம் கொடுத்துள்ளார்.  அவரது கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு,  அவர் கூறிய இடத்தில் தொழில்வளாகம் ஆரம்பிக் அரசு உத்தரவு வழங்கிவிட்டது.  

அரசின் இந்தப் புதிய ஆணையால், மருத்துவரின் இந்தக் கட்டிடம்  இடிபடாமல் தப்பித்துவிட்டது.  எல்லாமும் முடிந்துவிட்டன என்றிருந்த  நிலையில் குருசாமி பச்சைக்காவடி அவர்களது வழிகாட்டுதலின்படித் தினமும் பிள்ளையாரை வழிபட்டதன் பலனாகத் தங்களது சொத்து மீண்டும் தங்களுக்கே வந்துவிட்டது என்று அந்த மருத்துவர் அகம் மகிழ்ந்து கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னாளில் அந்த மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் ஆனைமுகத்தானுக்கும் குருசாமிக்கும் அடியார் ஆகிவிட்டோம் என்றும் கூறி மகிழ்ந்தார்.

எல்லாம் ஆனைமுகத்தான் திருவருள்.   அனுதினமும் ஆனைமுகத்தானை வணங்குதல் செய்வோம்.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு ஆனைமுகத்தான் திருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்