செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

சூரியக் கெடிகாரம், solar clock

பீகார் மாநிலம், கயா பல்குனி ஆற்றங்கரையில் உள்ள விட்ணு கோயிலில் உள்ள சூரிய நிழல் காலங்காட்டி (solar clock)

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

வெட்டுக்காயம், பிரண்டை, மருந்து

இரு சக்கர வாகனத்திலிருந்தோ, அல்லது வேறு காரணத்தினாலோ கீழே விழுந்தால் முகம் நெஞ்சு கை கால்களில் மிகுந்த சிராய்ப்புக் காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்படும்.
இதற்கு பிரண்டை மிகச் சிறந்த மருந்து,  மூன்று மணி நேரத்திலேயே வெட்டுப் பட்ட இடம் ஒட்டிக் கொள்ளும் என்கிறார் சிவகங்கை மாவட்டம் முடிகண்டம் கிராமம் வைத்தியர் சோலைகிரி.

பிரண்டையின் நான்கு அல்லது ஐந்து கணுக்களைப் பிடுங்கி 50 மிலி. வேப்ப எண்ணை விட்டு வதக்கி இடித்துச் சாறு எடுத்து காய்த்தில் விட  வேண்டும்.  கண் இமை அருகே தனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய வெட்டுக் காயம் மூன்று நாட்களில்  குணமானது என்கிறார் வைத்தியர்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சிறுநீரகக் கல்

17 ஆண்டுகளுக்கு முன் நல்லிரவில் ஆளரவம் கேட்டு எழுந்து சென்று பார்த்தேன். 65  வயது மதிக்கத் தக்கவர். அருகில் இருக்கும் வீட்டில் வாடகைக்கு குடிவந்திருப்பதாகக் கூறினார். பல்வேறு பேச்சுகளுக்கு இடையே அருகில் இருந்த கண்ணுப்பீளைச் செடியைக் காட்டி, இதனால்தான் உயிர் பிழைத்தேன் என்றார்.
விளக்கமாகச் சொல்லும்படி கேட்டேன்.
சிறுநீரகத்தில் கல் உண்டாகி மரண வேதனை அளிக்கத் துவங்கியது. மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்தே ஆக  வேண்டும் என்றார். பணவசதி போதவில்லை.  நானாகக் கடையில் வங்கிச் சாப்பிட்ட மருந்துகளும்  பயனளிக்கவில்லை. நண்பர் கூறிய அறிவுரைப்படி சோதிடரிடம் சென்று கேட்டேன். குலதெய்வ வழிபாடு நின்று விட்டது, அதைச் செய்தால் எல்லாம் சரியாகும் என்றார். 'அறுவைச் சிகிச்சைக்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும்' என்ன தொடர்பு என்று கேட்டேன்.  உன்னுடைய சாதகம் சொல்வதைத்தான் சொல்கிறேன், உன் குலதெய்வ வழிபாடு தான் உன்னைக் காக்கும் என்றார்.
வேறு வழியின்றி திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை சென்றேன். மலை அடிவாரத்திலேயே வலி அதிகமாகி விட்டது. மரணத்தின் விளிம்பில் நிற்பதை உணர்ந்தேன்.  மயக்கம் வர குலதெய்வத்தை நினைத்துக் கொண்டே பாதையில் உட்கார்ந்தேன். ஒரு பாட்டி வந்து குடிக்கவும் முகம் கழுவவும்  தண்ணீர் கொடுத்தார், என்னை விசாரித்தார்.  சிறிது அயர்ச்சி நீங்கியவுடன் எனது கதையைக் கூறினேன்.  மூன்று நாள் தங்க முடியுமா?  என்றார்.
முடியும் என்றேன். உடனடியாக அருகே இருந்த  கண்ணுப்பீளை செடியைப் பிடுங்கிக் கசாயம் வைத்துக் கொடுத்தார். சுடுகஞ்சியும் பருப்புத் துவையலும் சாப்பாடு.
சுண்ணாம்புத் தண்ணீர் போன்று சிறுநீர் கழிந்தது. மூன்றே நாட்களில் முற்றிலும் குணமடைந்து குல தெய்வ வழிபாடு முடித்து புதிய பிறவி எடுத்தவன் போன்று வீடு திரும்பினேன் என்றார்.
பொங்கல் பானையில் கட்டவும் கூரையில் சொருகவும் நாம் பயன்படுத்தும்  கண்ணுப்பீளைக்கு இவ்வளவு பெரிய மருத்துவ குணமா! என்று வியந்து போனேன்.
இப்போது, காசியாத்திரை மேற்கொண்டு என்னுடன் வரும் சோதிடர் மற்றும் மருத்துவர் 'சேவைகுருசாமி' அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன்.
அவரும் இந்த மருந்தை உறுதி செய்தார். தனக்கும் இது போல் நடந்து பிழைத்ததாகக் கூறினார்.

பச்சைக்காவடி - பெயர் விளக்கம் .



பச்சைக்காவடி - பெயர் விளக்கம்




நகரத்தார் சமூகத்தினர் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூசம் விழாவின் போது பழனிக்கு காவடி எடுத்து வருகின்றனர் .
பழனி முருகன் கோயிலில் இருந்து தைப்பூசம் இந்நாளில் நடைபெறவுள்ளது என்று 
1)கண்டனூர் சாமியாடி
2)அரண்மனை பொங்கல் 
3)நெற்குப்பை ஐயா 
இம் மூவருக்கும் 
"ஓலை" அனுப்புவார்கள் .
இம் மூவரது  ஏற்பாட்டில் காவடிகள் புறப்படும்.
ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் காவடிகள் சென்றன. இப்போது சுமார் 400 காவடிகள் செல்கின்றன .

தொடர்வண்டி மற்றும் பேருந்துகளுக்கு ஓட்டுனர் நடத்துனர் இருப்பது போல காவடிக்கும் உண்டு .
காவடிகளுக்கு முன்னதாகச் செல்பவர் கையில் வேல் எடுத்துச் செல்வார். வேல் பின்னர் அனைத்து காவடிகளும் செல்லும் .

காவடிகளின் மேல் சுற்றப்பட்டிருக்கும் துணிக்கு "பண்ணாங்கு " என்று பெயர்.
எல்லாகாவடிகளிலும் மஞ்சள் , காவி, அரக்கு நிறத்தில் காவடி எடுப்பவரின் விருப்பப்படி பண்ணாங்கின்  இருக்கும் .
ஆனால் ஒரே ஒரு காவடியில் மட்டும் பச்சை நிற த்தில் பண்ணாங்கு துணி போர்த்தப்பட்டு  இருக்கும் .
இதனால் இந்த காவடிக்கு "பச்சைக்காவடி " என்று பெயர்.
எல்லாக் காவடிகளையும்  விடுதல் இன்றி அழைத்துக் கொண்டு வர வேண்டியது இவரது பொறுப்பு .
பச்சைக்காவடி வந்து விட்டால்  எல்லாக் காவடிகளும் வந்து விட்டனர் என்று பொருள் .
காவடி எடுப்பவர்கள் வேல் எடுத்துச்  செல்பவரை முந்திச் செல்லவும் மாட்டார்கள் , பச்சைக்காவடி க்குப் பின் வரவும் மாட்டார்கள் .

கடந்த 42 ஆண்டுகளாக பொன்னமராவதி வலையப்பட்டியைச் சேர்ந்த "தேனி மலை" என்பவர் பச்சைக்காவடி எடுத்து வருகிறார் .  பச்சைக்காவடி எடுக்கும் காரணத்தால் எல்லோரும் மரியாதை நிமித்தமாக இவரது இயற்பெயரைக் கொண்டு அழைக்காமால் "பச்சைக்காவடி"  என்றே அழைத்தனர் .
இதனால் குருஜியின் இயற்பெயர் மறைந்து பச்சைக்காவடி என்ற பட்டம், குருஜி அவர்களுக்குப் பெயராக நிலைத்துவிட்டது .


பச்சைக்காவடி பெயர்விளக்கம் தகவல் வழங்கியவர் -
காசிஸ்ரீ சு.ப.சின்னக் கருப்பன் செட்டியார் ,  
காரைக்குடி .

------------------------------------------------------------

பச்சைக்காவடி - அறிமுகம்

பச்சைக்காவடி அவர்களின் இயற்பெயர் தேனிமலை.   பொன்னமராவதி வலையபட்டி நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்.  
அழகர்கோயில், சபரிமலை, திருப்பதி, காசி, மலேசியா-சிங்கப்பூர், அறுபடைவீடு எனப் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இவர் எம்.என்.நம்பியார் அவர்கள் சபரிமலைக்குச் செல்வதைப் பார்த்துள்ளார்.  அதனால் ஈர்க்கப்பட்டவர் பொன்னமராவதியில் இருந்து சபரிமலைக்குப் பாதயாத்திரையாகப் பல ஆண்டுகள் சென்றுள்ளனர்.  
திருப்பதிக்குப் பாதயாத்திரை 18 ஆண்டுகள் சென்றுள்ளார்.

கடந்த 42 ஆண்டுகளாக பொன்னமராவதியிலிருந்து பழனிக்குக் காவடி எடுத்து வருகிறார்.

பச்சைக்காவடி அவர்கள் 12 முறை இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.  முதன்முறையாக இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொள்ளும் போது திரு.அரு.சோ. மற்றும் சிலருடன் சென்றுள்ளார்.  அடுத்தடுத்த ஆண்டுகளில் இவரே தன்னுடன் 20 அடியார்களையும் அழைத்துக் கொண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இவரது 12ஆவது காசி யாத்திரையை 2015ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.

ஒருமறை மலேசியா முருகன் கோயிலுக்குச் சிங்கப்பூரிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

அறுபடைவீடு பாதயாத்திரையை 2016ஆம் ஆண்டு துவக்கி, ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.  ஆறு ஆண்டுகளுக்கு இந்த யாத்திரையை மேற்கொள்வதெனத் திட்டம் வைத்துள்ளார்.  2016, 2017 மற்றும் 2018 என மூன்று ஆண்டுகள் இதுவரை நிறைவாகியுள்ளன. 2019, 2020 மற்றும் 2021 என மூன்று ஆண்டுகள் யாத்திரை நடைபெற நேர்ந்துகொண்டுள்ளார்.

இப்படிக்கு
அடியேன்,
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
2014ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை,
2015ஆம் ஆண்டு நாக்பூர் காசி பாதயாத்திரை,
2016ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரை
2017ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரை

இறையருளால், குருசாமி பச்சைக்காவடி அவர்களால் அடியேனுக்குக் கிடைக்கப் பெற்ற பேறு இவை.


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

புதன், 8 ஆகஸ்ட், 2018

09.08.2014, இராமேசுவரம் காசி பாதயாத்திரை, ஆடி 24, 76 ஆம் நாள் யாத்திரை, வாட்கி

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு இன்று ஆடி 24 (09.08.2014) 76 ஆம் நாள் யாத்திரை .
வாட்கி( )என்ற ஊருக்கு அருகே சாலையோரம் உள்ள இந்த ஆசிரமத்தில் வந்து தங்கினோம்.
அருகில் புதிதாகக் கோயில்கட்டும் பணிகளுக்குப் பூசைகள் நடைபெற்றுக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மிகவும் அமைதியான இடமாக இருந்தது. ஆசிரமத்தின் மேற்பார்வையாளர் எங்களை மிகவும் அன்புடன் உபசரித்தார்.









08.08.2014, ஆடி 23, 75 ஆம் நாள் யாத்திரை, கீளாப்பூர்

காசிஸ்ரீ பச்கைக்காவடி அவர்களும் 
அவரது அடியார்களும்
இராமேசுவரம் காசி பாதயாத்திரை





ஆடி 23 (08.08.2014)
75 ஆம் நாள் யாத்திரை .
குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
....
ஆடி 23 (08.08.2014)
75 ஆம் நாள் யாத்திரை .

நேற்று முழுவதும் மழை இல்லை , நல்ல வெயில் .
இன்றுதினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.30 க்கு பாட்டன்பூரி என்ற ஊரிலிருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.
வழியில் தேநீர் , காலை குளியல்.
வழிநெடுகிலும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாகவும் குறுகியதாகவும் இருந்தது .
சாலையில் நடப்பது சிரம்மமாகவும் பாதுகாப்பு அற்றதாக வும் இருந்தது .
பிம்பல்குடி, சோனா என்ற ஊர்கள்வழியாக 8.00 மணிக்கு கீளாப்பூர் என்ற ஊர் வந்து சேர்ந்தோம் .
செகதாம்பாள் கோயிலில் தங்கல் .
8.30 க்கு காலை உணவு .
ஓய்வு .
இந்த ஊரில் உள்ள கரூர்தமிழ் அன்பர் வந்து அடியார்களை வரவேற்று உதவிகள் செய்தார் .
ஊர்ப் பெரியோர்கள் சிலர் வந்து குருஜி யிடம் ஆசி பெற்று ச் சென்றனர் .
பயண தூரம் 16 கி.மீ.
செகதாம்பாள் கோயில் உயரமான கருவறை விமானம் .
பெரிய மண்டபம் .
திருவிழாக் காலங்களில் அடியார்கள் வந்து தங்கி வழிபடுவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன .

































ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

05.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - திருத்தணிகை




குருஜி பச்சைக்காவடி அவர்களது இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையின் 59 ஆவது நாள். இன்று ஆடி 20 ( 05.08.2017) சனிக் கிழமை.
சேத்துப்பாக்கம் பாரத்பள்ளியில் இருந்து காலை 2:20 மணிக்கு யாத்திரையைத் தொடர்ந்து
திருத்தணி நகரத்தார் விடுதி வந்து சேர்த்தோம்.
பயணதூரம் 31 கி.மீ.
வழியில் தேநீர்.
விடுதியில் காலை உணவு.
மாலை 4:00 மணிக்கு அபிடேகம் வழிபாடு.
இத்துடன் குருசாமி பச்சைக்காவடி அவர்களது இரண்டாமாண்டு அறுபடைவீடு பாதயாத்திரை நிறைவடைகிறது.
ஆறுமுகனருள் நம் அனைவருக்கும் ஆகுக.
ஓம் சரவணபவ.

சனி, 28 ஜூலை, 2018

28.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - கடலூர்

குருஜி பச்சைக்காவடி அவர்களது இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையின் 51 ஆவது நாள். இன்று ஆடி 12 ( 28.07.2017) வெள்ளிக் கிழமை, கடலூர் திரு. முத்தையா அவர்கள் இல்லத்தில் இருந்து 2:20 க்குப் புறப்பட்டு காலை மணி 8:10 க்கு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் அருகே உள்ள ஐயப்பன் கோயில் மண்டபம் வந்து சேர்த்தோம்.
பயணதூரம் 24 கி.மீ.
வழியில் இளநீர், போண்டா, தேநீர்.
மண்டபத்தில் காலை உணவு.
ஓய்வு.
தங்கல்.
மாலை 4:30க்கு மணக்குள விநாயகர் வழிபாடு.

திங்கள், 16 ஜூலை, 2018

15.07.2014, 51ஆவது நாள். பீச்பள்ளி

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
...
15.07.2014, 51ஆவது நாள்  .
யாத்திரையில் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நாள் .
எனவே குருஜி முதல் நாள் இரவு யாத்திரிகர்களை 8.00 மணிக்கே தூங்கச் சொல்லி விட்டார் .

காலை2.25 மணிக்கு கர்னூல் என்ற ஊரில்இருந்து புறப்பட்டோம் .

6.50 க்கு ஜலபுரம் என்ற ஊர் அருகே காலைதேநீர்  .

10.40 க்குகோதண்டபுரம் என்ற ஊர் வந்து சேர்ந்தோம் .
அனைவருக்கும் பீன்ஸ் ரசம் (சூப்) வழங்கப்பட்டது . யாத்திரிகர் அனைவரும் விரும்பி கூடுதலாக கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர் .

32 கி.மீ. பயணம் .
    தேசிய நெடுஞ்சாலை யில்
நீண்ட தூரத்திற்கு சாலையின் ஓரங்களில் ஊர்கள் எதையும் காணமுடிய வில்லை , வியப்பாக இருந்தது .
சிவப்பா (29)என்ற யாத்திரிகர் கால் சுளுக்கு ஏற்பட்டு மருந்து தடவிக் கொண்டு யாத்திரையை தொடர்ந்தார் .

ஒரு பெண் 4 வயது மகனுடன்
அங்கே இருந்தார் .
தமிழ் நன்றாகப் பேசினார் .
தான் வேடசந்தூர் என்றும் ,  தனது கணவன் இந்த ஊரில் வேலை பார்ப்பதற்கு வந்த தாகவும் , அவரைத் தேடிவந்ததாகவும் , ஆனால் அவர் இங்கு வேலை இல்லாத காரணத்தால் அவர் ஈரோடு சென்று விட்டதாக கூறுகின்றனர் , தான் திரும்பிச் செல்ல பணம் இல்லை என்று கூறிக் கண்ணீர் வடித்தார் .
குருஜி அவர்களுக்கு ரொட்டி யும் பீன்ஸ் சூப் கொடுக்கச் செய்தார் .
யாத்திரிகர் தங்களால் இயன்ற பணத்தை வழங்கினார்கள் .
மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது .

ஓய்வு .
மதிய உணவு .
மதியம் 2.30க்கு குருஜி யாத்திரை வழிபாட்டைத் துவக்கினார் .

மாலை 4.50 க்கு பீச்பள்ளி  என்ற ஊரில் உள்ள ஶ்ரீராமர் கோயில் வந்து சேர்ந்தோம் .

பயணம் 43 கி .மீ .

கிருஷ்ணா நதியின் தென்கரையில் கோயில் உள்ளது . பக்தர்கள், யாத்திரிகர் தங்கி வழிபாடு செய்ய அனைத்து வசதிகளும் அருமையாக உள்ளன .

ஓய்வு .

தங்கல் .

செவ்வாய், 10 ஜூலை, 2018

ஜோதி விருட்சம், பேய்மிரட்டி

ஜோதி விருட்சம், பேய்மிரட்டி


தீப ஒளி வழங்கும் அபூர்வமான மூலிகை

இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது 46 ஆவது நாளில் ஆவனி 26 (10 சூலை 2014) வியாழக்கிழமை அன்று, பாத யாத்திரையின் போது உடன் வரும் திரு.சரவணன் சுவாமிகள் சாலை ஓரம் இருந்த ஒரு செடியைக் காட்டி இதன் பெயர் ஜோதி விருட்சம் , இதன் இலையைத் திரி போன்று பயன் படுத்தி விளக்கு எரிக்கலாம் என்றார் .

உடன் வந்த திரு.அங்கமுத்து சுவாமிகளும் இதை உறுதி செய்தார் .
திரு. பஞ்சவர்ணம் சுவாமிகள் இந்த மூலிகை யின் பெயர் பேய்மிரட்டி  என்றார் .

இந்தச் செடியின் இலைகள் சிலவற்றைப் பறித்து எடுத்து வைத்துக் கொண்டேன்.   அன்று  பச்சுபள்ளி என்ற ஊரின் சாலை ஓரம் உள்ள சுங்காளம்மன் கோயிலில்  தங்கினோம். அருள்மிகுந்த அம்மன்.
சிவலிங்க வழிபாடும் உள்ளது. யாத்திரிகர் தங்குவதற்குத் தேவையான வசதிகள் உள்ளன.

ஒரு விளக்கில் எண்ணை ஊற்றி, ஜோதிவிருட்சத்தின் இலை ஒன்றை எடுத்துத் தீபத்திற்கான திரிபோன்று சுருட்டி வைத்து விளக்கு ஏற்றினோம். 
ஏற்றி வைத்த விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டுள்ளது .  ஜோதிவிருட்சத்தின் விளக்கு ஒளியில் வழிபாடு செய்தோம் .

இந்த இலையானது ஒரு நூல் திரி போன்று எண்ணெய் இருக்கும் வரை எரிந்து, பின்னர் அதுவும் எரிந்து விடுகிறது . எரியும்போது ஒரு இதமான நறுமணம் வீசுகிறது .


பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்


பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்

பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்

பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்


Sunkulamma Devalayam

సుంకులమ్మ దేవాలయం

https://goo.gl/maps/NPjFzLJo98y

சென்னையில், இந்த இலை கடைகளில் கிடைக்கும்.. பூஜை சாமான்கள், நாட்டு மருந்துகள் விற்கும் கடைகளில் தருவார்கள்..'மூலிகை திரி' என்று கேட்க வேண்டும்.. ஒரு இலையைச் சுருட்டி, நூலால் கட்டித் தருவார்கள்.. சாதாரண பஞ்சு திரி கட்டுகள் போல் இது கட்டுகளாகவும் கிடைக்கும்.. கொஞ்சம் விலை அதிகம்.. நான் சென்னையிலிருந்த போது பண்டிகை காலங்களிலும், வீட்டில் பூஜைகள் வைக்கும் போதும் வாங்குவேன்.. ஏற்றி வைத்தால் ரொம்ப நேரம் எரிவதோடு, வீடு முழுவதும் நறுமணம் கமழும்.. அதற்காகவே வாங்குவேன்.. குறிப்பாக, வடபழனி கோயில் வாசல் கடைகளில், வடபழனி மார்க்கெட்டில் வாங்கியிருக்கிறேன்.....
என்று நண்பர் ஒருவர் சொல்லியுள்ளார்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்




செவ்வாய், 3 ஜூலை, 2018

இராமேச்சுரம் - காசி பாதயாத்திரை 39 ஆவது நாள் (03.07.2014)

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
39 ஆவது நாள் பயணமாக
இன்று 03.07.2014 காலை 2.45 மணிக்கு பெரச்சந்திரா விலிருந்து புறப்பட்டு பரகோடு வழியாக பாகேபள்ளி 10.15 க்கு வந்து சேர்ந்தோம் .
பயணம் 24 கீ.மீ .
இன்றுடன் கர்நாடக எல்லை முடிகிறது .
நாளையிலிருந்து ஆந்திரா மாநிலம் வழியாகப் பயணம் .
வரும் வழியில் பரகோடு பேருந்து நிறுத்தத்தில் காலை உணவு .
அருகில் சில தொழிலாளர் தொலைத்தொடர்பு இணைப்பு பணிகள் செய்து கொண்டிருந்தனர் , ஒரு முதியவரும் இருந்தார் .
அவர்களில் சிலர் திண்டுக்கல் என்றனர் .
குருஜி பச்சைக்காவடிஅவர்களையும் அழைத்து காலை உணவு வழங்கினார்.
பாகேபள்ளி கீதாமந்திரில் மதிய உணவு .
ஓய்வு.
தங்கல் .











































அன்பன் 
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்