பீகார் மாநிலம், கயா பல்குனி ஆற்றங்கரையில் உள்ள விட்ணு கோயிலில் உள்ள சூரிய நிழல் காலங்காட்டி (solar clock)
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
வியாழன், 16 ஆகஸ்ட், 2018
வெட்டுக்காயம், பிரண்டை, மருந்து
இரு சக்கர வாகனத்திலிருந்தோ, அல்லது வேறு காரணத்தினாலோ கீழே விழுந்தால் முகம் நெஞ்சு கை கால்களில் மிகுந்த சிராய்ப்புக் காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்படும்.
இதற்கு பிரண்டை மிகச் சிறந்த மருந்து, மூன்று மணி நேரத்திலேயே வெட்டுப் பட்ட இடம் ஒட்டிக் கொள்ளும் என்கிறார் சிவகங்கை மாவட்டம் முடிகண்டம் கிராமம் வைத்தியர் சோலைகிரி.
பிரண்டையின் நான்கு அல்லது ஐந்து கணுக்களைப் பிடுங்கி 50 மிலி. வேப்ப எண்ணை விட்டு வதக்கி இடித்துச் சாறு எடுத்து காய்த்தில் விட வேண்டும். கண் இமை அருகே தனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய வெட்டுக் காயம் மூன்று நாட்களில் குணமானது என்கிறார் வைத்தியர்.
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
சிறுநீரகக் கல்
வேறு வழியின்றி திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை சென்றேன். மலை அடிவாரத்திலேயே வலி அதிகமாகி விட்டது. மரணத்தின் விளிம்பில் நிற்பதை உணர்ந்தேன். மயக்கம் வர குலதெய்வத்தை நினைத்துக் கொண்டே பாதையில் உட்கார்ந்தேன். ஒரு பாட்டி வந்து குடிக்கவும் முகம் கழுவவும் தண்ணீர் கொடுத்தார், என்னை விசாரித்தார். சிறிது அயர்ச்சி நீங்கியவுடன் எனது கதையைக் கூறினேன். மூன்று நாள் தங்க முடியுமா? என்றார்.
முடியும் என்றேன். உடனடியாக அருகே இருந்த கண்ணுப்பீளை செடியைப் பிடுங்கிக் கசாயம் வைத்துக் கொடுத்தார். சுடுகஞ்சியும் பருப்புத் துவையலும் சாப்பாடு.
சுண்ணாம்புத் தண்ணீர் போன்று சிறுநீர் கழிந்தது. மூன்றே நாட்களில் முற்றிலும் குணமடைந்து குல தெய்வ வழிபாடு முடித்து புதிய பிறவி எடுத்தவன் போன்று வீடு திரும்பினேன் என்றார்.
அவரும் இந்த மருந்தை உறுதி செய்தார். தனக்கும் இது போல் நடந்து பிழைத்ததாகக் கூறினார்.
பச்சைக்காவடி - பெயர் விளக்கம் .
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
இறையருளால், குருசாமி பச்சைக்காவடி அவர்களால் அடியேனுக்குக் கிடைக்கப் பெற்ற பேறு இவை.
புதன், 8 ஆகஸ்ட், 2018
09.08.2014, இராமேசுவரம் காசி பாதயாத்திரை, ஆடி 24, 76 ஆம் நாள் யாத்திரை, வாட்கி
வாட்கி( )என்ற ஊருக்கு அருகே சாலையோரம் உள்ள இந்த ஆசிரமத்தில் வந்து தங்கினோம்.
அருகில் புதிதாகக் கோயில்கட்டும் பணிகளுக்குப் பூசைகள் நடைபெற்றுக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மிகவும் அமைதியான இடமாக இருந்தது. ஆசிரமத்தின் மேற்பார்வையாளர் எங்களை மிகவும் அன்புடன் உபசரித்தார்.
08.08.2014, ஆடி 23, 75 ஆம் நாள் யாத்திரை, கீளாப்பூர்
75 ஆம் நாள் யாத்திரை .
....
75 ஆம் நாள் யாத்திரை .
வழிநெடுகிலும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாகவும் குறுகியதாகவும் இருந்தது .
செகதாம்பாள் கோயிலில் தங்கல் .
ஊர்ப் பெரியோர்கள் சிலர் வந்து குருஜி யிடம் ஆசி பெற்று ச் சென்றனர் .
செகதாம்பாள் கோயில் உயரமான கருவறை விமானம் .
பெரிய மண்டபம் .
திருவிழாக் காலங்களில் அடியார்கள் வந்து தங்கி வழிபடுவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன .
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018
05.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - திருத்தணிகை
திருத்தணி நகரத்தார் விடுதி வந்து சேர்த்தோம்.
பயணதூரம் 31 கி.மீ.
விடுதியில் காலை உணவு.
ஓம் சரவணபவ.
சனி, 28 ஜூலை, 2018
28.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - கடலூர்
பயணதூரம் 24 கி.மீ.
தங்கல்.
திங்கள், 16 ஜூலை, 2018
15.07.2014, 51ஆவது நாள். பீச்பள்ளி
குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
...
15.07.2014, 51ஆவது நாள் .
யாத்திரையில் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நாள் .
எனவே குருஜி முதல் நாள் இரவு யாத்திரிகர்களை 8.00 மணிக்கே தூங்கச் சொல்லி விட்டார் .
காலை2.25 மணிக்கு கர்னூல் என்ற ஊரில்இருந்து புறப்பட்டோம் .
6.50 க்கு ஜலபுரம் என்ற ஊர் அருகே காலைதேநீர் .
10.40 க்குகோதண்டபுரம் என்ற ஊர் வந்து சேர்ந்தோம் .
அனைவருக்கும் பீன்ஸ் ரசம் (சூப்) வழங்கப்பட்டது . யாத்திரிகர் அனைவரும் விரும்பி கூடுதலாக கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர் .
32 கி.மீ. பயணம் .
தேசிய நெடுஞ்சாலை யில்
நீண்ட தூரத்திற்கு சாலையின் ஓரங்களில் ஊர்கள் எதையும் காணமுடிய வில்லை , வியப்பாக இருந்தது .
சிவப்பா (29)என்ற யாத்திரிகர் கால் சுளுக்கு ஏற்பட்டு மருந்து தடவிக் கொண்டு யாத்திரையை தொடர்ந்தார் .
ஒரு பெண் 4 வயது மகனுடன்
அங்கே இருந்தார் .
தமிழ் நன்றாகப் பேசினார் .
தான் வேடசந்தூர் என்றும் , தனது கணவன் இந்த ஊரில் வேலை பார்ப்பதற்கு வந்த தாகவும் , அவரைத் தேடிவந்ததாகவும் , ஆனால் அவர் இங்கு வேலை இல்லாத காரணத்தால் அவர் ஈரோடு சென்று விட்டதாக கூறுகின்றனர் , தான் திரும்பிச் செல்ல பணம் இல்லை என்று கூறிக் கண்ணீர் வடித்தார் .
குருஜி அவர்களுக்கு ரொட்டி யும் பீன்ஸ் சூப் கொடுக்கச் செய்தார் .
யாத்திரிகர் தங்களால் இயன்ற பணத்தை வழங்கினார்கள் .
மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது .
ஓய்வு .
மதிய உணவு .
மதியம் 2.30க்கு குருஜி யாத்திரை வழிபாட்டைத் துவக்கினார் .
மாலை 4.50 க்கு பீச்பள்ளி என்ற ஊரில் உள்ள ஶ்ரீராமர் கோயில் வந்து சேர்ந்தோம் .
பயணம் 43 கி .மீ .
கிருஷ்ணா நதியின் தென்கரையில் கோயில் உள்ளது . பக்தர்கள், யாத்திரிகர் தங்கி வழிபாடு செய்ய அனைத்து வசதிகளும் அருமையாக உள்ளன .
ஓய்வு .
தங்கல் .
செவ்வாய், 10 ஜூலை, 2018
ஜோதி விருட்சம், பேய்மிரட்டி
இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது 46 ஆவது நாளில் ஆவனி 26 (10 சூலை 2014) வியாழக்கிழமை அன்று, பாத யாத்திரையின் போது உடன் வரும் திரு.சரவணன் சுவாமிகள் சாலை ஓரம் இருந்த ஒரு செடியைக் காட்டி இதன் பெயர் ஜோதி விருட்சம் , இதன் இலையைத் திரி போன்று பயன் படுத்தி விளக்கு எரிக்கலாம் என்றார் .
திரு. பஞ்சவர்ணம் சுவாமிகள் இந்த மூலிகை யின் பெயர் பேய்மிரட்டி என்றார் .
இந்த இலையானது ஒரு நூல் திரி போன்று எண்ணெய் இருக்கும் வரை எரிந்து, பின்னர் அதுவும் எரிந்து விடுகிறது . எரியும்போது ஒரு இதமான நறுமணம் வீசுகிறது .
![]() |
பேய்மிரட்டி, ஜோதி விருட்சம் |
![]() |
பேய்மிரட்டி, ஜோதி விருட்சம் |
![]() |
பேய்மிரட்டி, ஜோதி விருட்சம் |
![]() |
பேய்மிரட்டி, ஜோதி விருட்சம் |
Sunkulamma Devalayam
సుంకులమ్మ దేవాలయం
https://goo.gl/maps/NPjFzLJo98y
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
செவ்வாய், 3 ஜூலை, 2018
இராமேச்சுரம் - காசி பாதயாத்திரை 39 ஆவது நாள் (03.07.2014)
இன்று 03.07.2014 காலை 2.45 மணிக்கு பெரச்சந்திரா விலிருந்து புறப்பட்டு பரகோடு வழியாக பாகேபள்ளி 10.15 க்கு வந்து சேர்ந்தோம் .
இன்றுடன் கர்நாடக எல்லை முடிகிறது .
நாளையிலிருந்து ஆந்திரா மாநிலம் வழியாகப் பயணம் .
அருகில் சில தொழிலாளர் தொலைத்தொடர்பு இணைப்பு பணிகள் செய்து கொண்டிருந்தனர் , ஒரு முதியவரும் இருந்தார் .
அவர்களில் சிலர் திண்டுக்கல் என்றனர் .
ஓய்வு.