புதன், 19 ஆகஸ்ட், 2020

20.08.2014 காசி பாதயாத்திரை - 87ஆம் நாள், ஆவணி 4

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று  கோபால்கஞ்ச் என்ற ஊரின் புறத்தே இருந்த சிவன் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.

இன்று 87ஆம் நாள் - ஆவணி 4 (20.08.2014) புதன் கிழமை.

மாற்றி அமைக்கப்பட்ட பயணத்திட்டப்படி,   தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.00 க்கு கோபால்கஞ்ச் என்ற ஊரின் புறத்தே இருந்த சிவன் கோயிலில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.


வழிநெடுகிலும் பசுமையான வயல்கள் நிறைந்து காணப்பட்டன.  ஓரிடத்தில் இடங்களில் சில மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. 
சியோனி பைபாஸில் தேநீர்.




பண்டோல் என்ற ஊர் பைபாஸில் உள்ள "சிங்" பெட்ரோல் பங்க் உரிமையாளர் வரவேற்றார்.

சிறிது நேரம் ஓய்வு.

மதிய உணவு.

சுமார் 2.30 மணி அளவில் யாத்திரையைத் தொடர்ந்தோம்.




கோரக்பூர் கிராமத்தினர் சார்பாக இருவர்  இவ்வளவு தொலைவு வந்திருந்து வரவேற்றனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்தார்.





கோரக்பூர் அருகில் சாலையோரம் ஒரு குருதுவார் இருந்தது.  யாத்திரிகர்கள் விரும்பி படம் எடுத்துக் கொண்டனர்.




கோரக்பூர் கிராமத்தினர் கிராமத்தில் இருந்து நெடுஞ்சாலைக்கு வந்துநின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களை மலர்தூவி வரவேற்றனர்.  குருசாமி அவர்கள் எல்லோரையும் ஆசிர்வதித்தார்.












நெடுஞ்சாலையில் இருந்து கோரக்பூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.




ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பெண்கள் நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.    அவர்களுக்கு அருள்வாக்குச் சொல்லி குருசாமி ஆசிர்வதித்தார்.




ஒருவருக்கு காலில் ஏற்பட்டிருந்த நோய்நீங்கிட வைத்தியம் கூறி ஆசிர்வதித்தார்.








தலைமைஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரும் இவரது குடும்பத்தின்ர் அனைவரும்  குருசாமி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றார். 




தனது மூத்த சகோதரனை வரவேற்பது போன்று அந்தக் குடும்பத்தினர் பெரிதும் மனம் நெகிழ்ந்து குருசாமி அவர்களை வரவேற்றனர். 

கோரக்பூர் கிராமத்திற்கு நாளை வருவதாகத்தான் பயணத் திட்டம்.  மாற்றியமைக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி ஒரு நாள் முன்னதாகவே  (20.08.2014) 5.00 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

21.08.2014 &  22.08.2014  இரண்டு நாட்கள் ஓய்வு நாட்கள். இங்கேயே தங்கியிருந்தோம்.

அடியார் வீட்டில் இரவு உணவு , ஓய்வு.

https://goo.gl/maps/61K9Bwum56HUrkKG6

இன்றைய பயண தூரம் சுமார் 38 கி.மீ

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

--------------------------------

काशी पाठ यात्रा

सिद्धार काशीश्री पचैक्कवडी अपनी 11वीं वार्षिक रामेश्वरम काशी पथयात्रा पर थे।

हमने 26.05.2014 को रामेश्वरम अरुलमिगु रामनाथस्वामी की पूजा करके काशी-पथयात्रा शुरू की

और कल हम गोपालगंज के एक शिव मंदिर में आकर रुके।

आज 87वाँ दिन है - 4 अगस्त (20.08.2014), बुधवार।

अपनी दैनिक पूजा के बाद हमने गोपालगंज के उस शिव मंदिर से सुबह 3 बजे अपनी तीर्थयात्रा जारी रखी।

रास्ते में हरे-भरे खेत दिखाई दे रहे थे। एक जगह कुछ हिरण चर रहे थे।

सिवनी बाईपास पर चाय और बिस्कुट।

पंडोल बाईपास स्थित "सिंह पेट्रोल पंप" के मालिक ने हमारा गर्मजोशी से स्वागत किया।

थोड़ी देर आराम किया।

दोपहर का भोजन किया।

लगभग 2:30 बजे हमने तीर्थयात्रा जारी रखी।

टोल प्लाजा के पास गोरखपुर के ग्रामीणों की ओर से दोनों युवाओं का स्वागत किया गया।

गुरुमगराज पचैकावटी ने दोनों को आशीर्वाद दिया।

गोरखपुर के पास सड़क किनारे एक गुरुद्वारा था। तीर्थयात्रियों ने तस्वीरें लीं।

गोरखपुर के ग्रामीण गाँव से राजमार्ग पर आए और गुरुमगराज पचैकावडी ने उनका फूलों से स्वागत किया।

गुरुमगराज ने सभी को आशीर्वाद दिया।

ग्रामीणों ने राजमार्ग से गोरखपुर गाँव तक गर्मजोशी से स्वागत किया।

महिलाएँ हर घर के द्वार पर खड़ी थीं और फूलों की वर्षा करके स्वागत कर रही थीं।

गुरुमगराज ने उन्हें आशीर्वाद दिया।

उन्होंने एक व्यक्ति को उसके पैर की बीमारी से शीघ्र स्वस्थ होने का आशीर्वाद दिया।

सेवानिवृत्त प्रधानाध्यापक, उन्होंने और उनके परिवार के सभी सदस्यों ने गुरुमगराज और तीर्थयात्रियों का स्वागत किया।

वे गुरुमगराज को अपना बड़ा भाई मानते थे।

यात्रा कार्यक्रम कल गोरखपुर गाँव पहुँचने का है।

लेकिन संशोधित यात्रा कार्यक्रम के अनुसार हम एक दिन पहले (20.08.2014) शाम 5 बजे पहुँच गए।

21.08.2014 और 22.08.2014 दो दिन विश्राम। हम यहीं रुके।

उनके घर पर भोजन और विश्राम।

https://goo.gl/maps/61K9Bwum56HUrkKG6

आज की यात्रा दूरी लगभग 38 किमी है।

गुरुमगराज काशीश्री पचैक्कवती का आशीर्वाद

और भगवान काशी विष्णुनाथ की कृपा हम पर सदैव बनी रहे।

आपका

काशीश्री, डॉ. एन.आर.के. कलैराजन,

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக